
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

* ஏற்றுக்கொள் அல்லது உதாசீனப்படுத்து.
மய்யத்தில் வைக்காதே... நான் கமல் ரசிகன் அல்ல!
- ஆராதனா

* 30 நாள்கள்
கோமாவில் கிடந்தவர்
கண் விழித்ததும்
ஃபேஸ்புக்கில்
புரொஃபைல் பிக்சர்
மாற்றினார் !
- ரியாஸ்

* கோயிலில் வைத்து
ப்ரபோஸ் பண்ணினான்...
ஆன்மிகக் காதலாம்!
- பி.ஜி.பி.இசக்கி

* கட்டணம் செலுத்தி சிறை அனுபவம் பெறலாம்...
‘பொதுக்கழிவறை’யில்!
- எஸ்.ஜெயகாந்தி

* வெற்றிடத்தை
நிரப்புவதற்கு
இவரை மிஞ்ச
ஆளில்லை-
பலூன்காரர்!
- ஏந்தல் இளங்கோ

* காதலிக்கும் எனக்கும் ஸ்டேட்டஸ் பொருந்திவரவில்லை... ஃபேஸ்புக்கில்!
- பாப்பனப்பட்டு வ.முருகன்

* ‘அமைதியைத் தேடுபவர்கள்
இங்கு வரவும்...
எங்கள் ஓட்டல் மட்டன் பிரியாணியில்
நிறைய ‘பீஸ்’ உண்டு...!’
- கே.லக்ஷ்மணன்

* முல்லைக்குத் தேர்
கொடுத்த பாரி
வீட்டம்மா கிட்ட
செம டோஸ்
வாங்கியிருப்பார் !
- ரியாஸ்

* ‘நான்தான்’கறதுக்கு ஆதாரம்
ஆதார்!
‘ஆதார்’ல இருக்கிறது நான்தான்கறதுக்கும் ஆதாரம்
நான்தான்...!
- அவ்வை. கே. சஞ்சீவிபாரதி
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை
kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!