
News
கவிதை: விக்ரமாதித்யன், ஓவியம்: வேலு
இடரினும் தளரினும்
அறியாப்பருவத்தில்
இழைத்து இழைத்துப் போட்ட கோலம்
அறிந்த பிறகு
கைக்கு வந்தது.
கோலத்தைக் கடந்துவிட்டாள்
பிராட்டி
எப்பொழுதும்
தொடங்கத் தெரிகிறது
முடிக்கத் தெரியவில்லை
ஒருபொழுதும்.
நடுவில்
நாலுபேர்
இடையே
இரண்டு பேர்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால்
பொழுதுபோவதே கொண்டாட்டம்தான்

நிறை
எடுத்தால்
தீர்ந்துவிடும்
கொடுத்தால்
நிறைந்துவிடும்
எடுத்தும்
கொடுத்தும்.
அழை
பெண்ணே
பெண்ணே
எங்கே
இருக்கிறாய்
எப்போது புறப்பட்டு
வருவாய்
வரும்பொழுது
பௌர்ணமியாக இருக்கட்டும்