தொடர்கள்
Published:Updated:

திணைப்பாடல் - கவிதை

திணைப்பாடல் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
திணைப்பாடல் - கவிதை

முத்துக்குமார் இருளப்பன் - படம்: பா.காளிமுத்து

ன் உடல் முழுவதும்
அப்பிக் கிடக்கிறது
குறிஞ்சியின் வாசம்.

யாசகம் கேட்டுக் கையேந்தும்
பாணன் ஒருவன்
என் மதுக்குடுவையைத்
திணைப் பாடல்களால் நிரப்புகிறான்

செங்காந்தள் மலரின் இதழ்களுக்கு
என்னை முழுவதும்
ஒப்புக்கொடுத்துவிட்டேன்

திணைப்பாடல் - கவிதை

பள்ளத்தாக்கில்
மேய்ந்து கொண்டிருக்கும்
மேகங்கள் எல்லாம்
ஈரிதழ்ப்  பூவின்
சுவை அறிந்திருக்கின்றன

பெருமரங்களை ஆரத் தழுவி
முத்தங்களால் உன் பெயரைச்
செதுக்குகையில்
என் மீசையெல்லாம்
பச்சைப் பாசிகள் ஒட்டிக்கொண்டன

மலை உண்டியலில்
சூரியக்காசைச்
சேமிக்கிறது வானம்

அகண்ட புல்வெளிகளில்
வானம் பார்த்துக் கிடக்கையில்
எண்ணிய நட்சத்திரங்களெல்லாம்
ஆலங்கட்டி மழையாய்ப் பொழிகின்றன.

மலை இறங்குகையில் வரும்
குமட்டல் உணர்வை
சேகரித்த ஆலங்கட்டிகளைச்
சுவைத்து விரட்டுகிறேன்.

தலையில் உருமாவோடு
மீசையை முறுக்கி
ஒரு கையில் அரிவாள் ஏந்திய
கோட்டைமலைக் கருப்பச்சாமி
படையலை வெறித்து நோக்கும்போது அவரது உடலை
ஒரு கூடை நியூட்ரினோக்கள்
ஊடுருவிச் செல்கின்றன.