Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

`மண்டே’வின் நீள் விசும்பல்!

ஞா
யிற்றுக்கிழமை இரவுகள்
குழந்தைகளை உறங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன.
இரண்டு நாள் விடுப்பும் பயணமும் காடுகளும்,
விளையாட்டும் நினைவுச் சருகாகித்
தலைக்குள் சரசரக்கின்றன
இரவு முழுக்க.

மறுபடியும் அதே மேத்ஸ் மிஸ்ஸும்,
சயன்ஸ் மிஸ்ஸும்
`டெஸ்ட் நோட் எடுங்க...’ எனும் அதட்டலோடு
க்ளோசப்பில் முகம் காட்டி பயமுறுத்துகிறார்கள்.

அடுத்த விடுமுறைக்கு
இன்னும் ஐந்து முழு நாள்கள்
இருப்பதாகக் காட்டிய நாட்காட்டி,
கண்களில் நீர்முட்டவைக்கிறது.

அவர்களது கனவில் `மண்டே’,
தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.
`மண்டே’வை ஒருமனதாகச் சாடுகிறார்கள் குழந்தைகள்.
அந்த நாளே தங்களுக்கு வேண்டாமெனச்
சிறையிலடைக்கும்படி வாதிடுகிறார்கள்.

பல நூற்றாண்டுக்காலக்
குழந்தைகளின் சாபம் சுமக்கும் `மண்டே’,
அவர்களின் மன்னிப்பைப் பெறும்பொருட்டு
ஒரு பெரும் விசும்பலை உதிர்க்கிறது.

அந்நீள் விசும்பல் இரவைக் கடந்து
இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது குழந்தைகளும் விசும்பத் தொடங்குகிறார்கள்!

- விக்னேஷ் சி செல்வராஜ்

சொல்வனம்

விடுப்பு

மு
தல்முறை
தயக்கத்துடன் அழைத்து
இரண்டாம் முறை
சிறிது தைரியத்துடன் கூப்பிட்டு
மூன்றாம் முறை
கோபத்தைக் கொஞ்சம் சேர்த்து
இறுதியாய்... ஒருவழியாய்
அழைப்பினை எடுத்ததால்
தயங்கியபடி விடுப்புவேண்டினேன்
நீண்டநேரம் பேசிவிட்டு
அனுமதித்தார் மேலாளர்.
கடன் கேட்பதைவிடவும்
கொடுமையானது
திங்கட்கிழமை விடுப்பு கேட்பது!

- மணிகண்டபிரபு

விழுதுகளின் வலி!

ந்திசாயும் நேரத்தில்
ஆலமரம்
விழுதைத் தேடுகிறது
நள்ளிரவு தாண்டியதில்
விழுதுகளின்
ஊசலாட்டம்
பின்னிரவுச் சாமத்தில்
பனிகொண்ட நடுக்கம்
மரத்தை உலுக்குகிறது
அதிகாலை விழித்தலில்
கைக்குழந்தையோடு
கழுத்திறுகித் தொங்கிக்கொண்டிருந்தாள்
ஒருத்தி
ஆலமரம் இனி
பெயர் மாறும்
அழுதழுது சடங்கானாள்
செத்தவளின் தங்கை!

- கவிஜி

ஓவியம்: செந்தில்