மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

##~##

டல் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்குக்கூட கடலோர மக்களின் வாழ்வு பற்றி தெரிவதில்லை. இந்த நிலையில், கடலோர மக்களின் வாழ்வைத் தழுவி நெய்தல் நிலத்து இலக்கியமாக வந்திருப்பதுதான் செல்வராஜின் 'செள்ளு’ சிறுகதைத் தொகுப்பு. தென்தமிழகத்தில் குமரி மாவட்டத்தின் அரபிக் கடலோரத்தில் வாழும் பாரம்பரிய மீனவச் சமூகமான முக்குவர்களின் வாழ்வை, அவர்களின் காதலை, துன்பத்தை, நொய்மையை, தேடலை, அரசியலின் நிராகரிப்பைப் பேசுகிறது இந்தச் 'செள்ளு’.

'செள்ளு’ என்றால், மீனின் மேலுள்ள 'செதில்’ என்று பொருள். செதிலை நீக்கிவிட்டுத்தான் மீனை சமையலுக்குப் பயன்படுத்த முடியும். அப்படி தன் சமூகத்தின் மீது படிந்துள்ள செதில்களை இந்தக் கதைகளின் மூலம் கழுவ முயன்றுள்ளார் நூலாசிரியர் செல்வராஜ். இந்தப் புத்தகத்தின் மொழிநடை, தமிழ் இலக்கியத்துக்குப் புத்தம்புதியது. மெலிஞ்சியாரு - கோயிலில் மணி அடிக்கும் பணியாளர், குசினிக்காரன் - சமையல்காரன், அம்மாணை - மீனவர்களின் ஹாக்கி போன்ற பாரம்பரிய விளையாட்டு, துருசமா - வேகமா, கும்பாயிரி - உயிர் நண்பன், சீணம் - உடல் அசதி, ஓசுவனம் - மீன்பாடு, வேளம் - விஷயம், வார்த்தை, பொழி - ஆறு... இவை மீனவர்களின் வாழ்வில் கலந்துள்ள கலைச்சொற்கள்!

விகடன் வரவேற்பறை

வறுமைச் சூழலால் கல்வி மறுக்கப்பட்டு, தன் தந்தையின் தொழிலான கடல் தொழிலுக்கே திரும்பிச் செல்லும் ஒரு சிறுவனின் வாழ்வையும், குடும்பத்தின் துன்பத்தையும் பேசுகிறது 'ஒரட்டி’ என்கிற கதை. 'செள்ளு’ கதை, படிப்பைத் தொடர முடியாத மகள், மால் (மீன் வலை) கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் துயரத்தைப் பதிகிறது. இந்தத் தொகுப்பில் 'மகேசுவரியும் தெக்கு ஆறும்’ கதை கலங்க வைக்கிறது. முன்பு குமரிக்கரையில் தொடங்கி கேரளம் வரை படகுப் பயணத்துக்குப் பயன்பட்ட இந்தத் தெக்கு ஆற்றை இப்போது சூறையாடிவிட்டார்கள். விளைவு, கால்வாய் தேய்ந்து பல இடங்களில் சாக்கடையாகிவிட்டது. அழகிய மகேசுவரி, நோய்வாய்ப்பட்டு தேய்ந்து மடிகிறாள், அந்த ஆற்றைப்போல. மகேசுவரியின் வாழ்வை தெக்கு ஆற்றோடு இணைத்து இறுதியில் மகேசுவரி மடிகிற இடத்தில் கண்ணீரை வரவழைத்துவிடுகிறது கதை.

பொதுவாக தண்ணீர் பற்றிப் பேசுவோர், 'கடலில் கலந்து வீணாகும் தண்ணீரைத் தடுக்க வேண்டும்’ என்று பேசுவர். ஆனால், அது ஒரு மீனவ சமூகத்தின் நோக்கில் எப்படி பார்க்கப்படுகிறது? ''கடல் தொழிலும் ஒரு வெவசாயந்தான். நல்ல மீன் வெளச்சல் வரணும்னா நல்லத் தண்ணியும் வேணும். ஒவ்வொரு பொழியும் கடலுலப் போய்ச் சேருத எடம் பல ஆயிரக்கணக்கான உயிர்வளுக்கு ஜென்மம் குடுத்த எடம். மீனுவ அதிகமா குஞ்சு பொறிச்சுது அந்த எடங்களுலதான்'' - 'மகேசுவரியும் தெக்கு ஆறும்’ கதையில் உள்ள இந்த வரிகள், கடலில் நன்னீர் கலக்கும் உயிர்ச்சூழலின் அவசியத்தை உரித்து வைக்கிறது.

குமரி மாவட்டக் கடலோர கிராமமான சைமன் காலனியில் பிறந்த செல்வராஜ், தன் சமூக மக்களின் வாழ்வை மையமாக வைத்து எழுதியிருக்கும் 'செள்ளு’ சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் ஆறு சிறுகதைகளே உள்ளன. ஆனால், அந்த ஆறும் தமிழகத்தின் அறியப்படாத, தமிழர்கள் அறிந்திராத பிரதேசம் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறது!  

விகடன் வரவேற்பறை

மஞ்சள் உலோகம்

இயக்கம்: அருண் பிரசாத்;               வெளியீடு: காட்ஸ் ஃபிங்கர் புரடெக்ஷன்

காதல் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் சோபிக்க முடியாமல், சினிமா வாய்ப்புகளிலும் வெற்றி கிடைக்காமல் அலைபாயும் உதவி இயக்குநர் ஒருவரின் கதை. உதவி இயக்குநர் சரவணன் வெற்றிக்கான கமர்ஷியல் படம் எடுக்க மாட்டேன் என்ற உறுதியுடன் இருப்பவர். ஆனால், வீட்டிலோ நிலைமை கவலைக்கிடம். மாமியார் ஏகத்துக்கும் திட்டுகிறார். நீண்ட போராட்டத்துக்குப் பின் சரவணனுக்கு வாய்ப்பு கிடைத்து அட்வான்ஸ் தொகையை கையில் வாங்குகிறார். 'மனைவிக்கு தங்கச் சங்கிலி வாங்கலாம்’ என்று சரவணன் நினைக்க, அவருடைய அம்மாவோ ஓர் உதவி கோருகிறார். தொடரும் போராட்டங்களோடு முடிகிறது கதை. ஆரம்பமும், முடிவும் இல்லாத கதையில் உள் ஊடாகவரும் சினிமா உலக அபத்தங்கள், கணவன்-மனைவியின் இயல்பான காதல், தோள்கொடுக்கும் நண்பன், கமர்ஷியல் இயக்குநரின் அதிரிபுதிரி அட்டகாசம் என பல சுவாரஸ்யங்களைச் சேர்த்திருப்பது அழகு!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

பல்சுவைப் பூங்கா  http://marudhang.blogspot.in 

ந்தத் தளத்தில் தான் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் ஒரு வரலாற்று ஆவணமாகவே முன்வைக்கிறார் மருதன். குறிப்பிட்ட ஒரு பிரச்னையின் தரவுகளைத் திரட்டி, துல்லியமான தகவல் தொகுப்பாக இவரது கட்டுரைகள் அமைந்திருக்கிறது. ராகுல்ஜியின் இந்தியப் பயண நூல்கள் குறித்த அறிமுகக் கட்டுரை, அந்த நூல் மீதான நம் ஆர்வத்தை அதிகரிப்பதைப் போலவே, பல்வேறு புத்தகங்கள் குறித்த சிறப்பான அறிமுகங்களை தந்திருக்கிறார். ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கு மெஹந்தி போட்டுவிட்டதைப் பற்றி, ரயில் பயணத்தில் ஒரு பெண் விவரிக்கும் கதை நச். அரசியல் கட்டுரைகள், நூல் அறிமுகம், பயண அனுபவங்கள்... என பல்சுவைப் பூங்காவாக ஜொலிக்கும் தளம்!

விகடன் வரவேற்பறை

வணக்கம் சென்னை இசை: அனிருத்

வெளியீடு: சோனி மியூஸிக்;      விலை:

விகடன் வரவேற்பறை

99

ழக்கம்போல் இது டீன்களுக்கான அனிருத் ஸ்பெஷல்!  

'உங்களுக்கு இன்டியா கேட்டு... எங்களுக்கு எல்.ஐ.சி வெய்ட்டு... உங்களுக்கு கோவால பீச்சு... எங்களுக்கு மெரினாதான் மாஸு!’ என  சென்னைப் புகழ் பாடும் 'சென்னை சிட்டி கேங்ஸ்ட(£)’ பாடல் இனி ஐ.பி.எல் போட்டிகளில் அடிக்கடி ஒலிக்கும்!  'ஓ பெண்ணே...’ பாடல் எந்த இடத்தில் கேட்டாலும் காபி ஷாப் ஃபீல் கொடுக்கிறது. 'எங்கடி பொறந்த?’ - பாடலில் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து ஒப்பாரி டைப்பில் செம குத்து குத்தி வெளுத்துவாங்கி இருக்கிறார் அனிருத்.

ஒரே மெட்டு.... ஆனால், மைல்டு ராக் மற்றும் மென்மெலடியாக இரண்டு விதமாக ஒலிக்கும் 'ஒசக்க ஒசக்க’ மற்றும் 'ஐலசா ஐலசா’ பாடல்கள் காதில் தேன் பாய்ச்சுகின்றன. 'செல்லப்பேரு ஆப்பிள்’ பாடிய சுசித்ராவின் கிறக்கக் குரலை 'ஐலசா’ பாடலுக்குப் பயன்படுத்திய விதத்தில் அனிருத்... ஹனிருத்! சார் பேர் சொல்லும் இன்னொரு யூத்ஃபுல் ஆல்பம்!

விகடன் வரவேற்பறை