"வீட்டிலேயே விருந்து தயா ரிக்கப்படுமா?"
"வீட்டிலேயும் தயாரிப்போம். வெளியே ஓட்டல்களிலிருந்தும் வரவழைச்சுக் கொடுப்போம். எல்லா டேஸ்ட்டும் வேணுங் களே..!"
"சரி, அவர்களுடன் என்ன பேசுவீர்கள்?"
"காஷுவலா பேசிக்கிட்டிருப் போம். சாப்பாடெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம், வெற்றிலை போட றவங்களுக்கு வெற்றிலை- பாக்கு. பீடா கேட்டால், பீடா! சிகரெட் பிடிக்கறவங்க, பிடிக்கலாம். எல் லாவற்றையும் சுவாரஸ்யமா அனுபவிக்கையிலே, கீழே அவங்க பார்த்த அந்தக் குழந்தைகளைப் பற்றிப் பேச்செடுப்பேன்..."
"என்ன சொல்லுவீங்க?"
"அந்தக் குழந்தைங்க யார் தெரியுமா... பாபர் மசூதி இடிக்கப் பட்டப்போ ஏற்பட்ட கலவரங் களில், பாம் வெடிச்சப்போ ஏற் பட்ட விபரீதத்திலே செத்துப் போனவங்களோட குழந்தைங்க. அப்பா, அம்மா, உற்றார்- உறவின ரைப் பறிகொடுத்துவிட்டு அநா தையாகிப்போன குழந்தைங்க அவங்க'ன்னு சொல்லுவேன்.
நான் சொன்னதைக் கேட்டதும், அவங்களுக்கு மனசு 'திக்'குங்கும். 'யாரோ, எதுக்காகவோ, ஒரு கோபத்திலே போய் எதையோ இடிக்க... இன்னொரு சாரார் அவங்க மேல உள்ள கோபத்திலே குண்டு வெடிக்க... இதனால பாதிக்கப்படறது நம்ம மக்கள் தானே! அடுத்த ஜெனரேஷன் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகி அநாதையா நிக்கறாங்க... அது எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருந் தது. அதனால பரவாயில்லே, நீங்க ஒண்ணும் ஃபீல் பண்ணிக்கா தீங்க'ன்னு சொல்லுவேன்.
நாம செஞ்சது தப்புன்னு கொஞ்சமாவது அவங்க மனசில படுமில்லையா? சாதி, மத விஷயம் எதையும் சொல்றது நம்ம நோக் கமல்ல. என்ன காரணம்னாலும் ஒரு ஜெனரேஷனே பாதிக்கப்படு துங்கறதைச் சம்பந்தப்பட்டவங் களுக்கு உணர்த்தணும்கிறது தானே எங்க டின்னரோட நோக்கமே..!"
'கடைசியா அவங்களுக்குப் பரிசு ஏதாவது கொடுப்பீர்களா?"
"ஆமாம். குழந்தைகளைப் பார்த்து மகிழ்ந்து, தூக்கிக் கொஞ்சினப்போ எடுத்த போட்டோவை அவசர அவசரமா கழுவி, பிரின்ட் போட்டு எடுத்து வரச் செய்து, அந்தப் படங்களை அவங்களுக்குப் பரிசா கொடுப் பேன். அதைப் பார்த்ததும் நிச்ச யமா அவங்க மனசு கொஞ்சமா வது கலங்கும். அடுத்த முறை கோபம் வர்றப்போ, பழைய வெறி இருக்காது. அதுதானே நானும் எதிர்பார்க்கறது! அதுக்கு மேல நாங்க எதுவும் பேசமாட் டோம். சைலன்ட்டா அவங்களை வழியனுப்பி வெச்சுடுவோம்..!" என்று சொல்லிவிட்டு மௌனச் சிந்தனையில் ஆழ்ந்தார் பாக்யராஜ்.
|