Published:Updated:

சினிமா விமர்சனம் : நல்ல நேரம்

சினிமா விமர்சனம் : நல்ல நேரம்


விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம் : நல்ல நேரம்
சினிமா விமர்சனம் : நல்ல நேரம்
சினிமா விமர்சனம் : நல்ல நேரம்
சினிமா விமர்சனம் : நல்ல நேரம்
சினிமா விமர்சனம் : நல்ல நேரம்

யானைகளை இன்னின்ன காரியங்களுக்குத்தான் பயன் படுத்தமுடியும் என்று யாராவது

சொன்னால், நிச்சயம் தேவரிடம் தோற்றுவிடுவார்கள். யானையை அத்தனை புதுமையான காரியங்க ளையும் செய்ய வைத்திருக்கிறார் தேவர். யானை பந்தடிக்கிறது; குழந்தைக்குத் தொட்டில் ஆட்டு கிறது; கதாநாயகிக்குத் தலைவாரி விடுகிறது; சங்கீதக் கச்சேரி செய் கிறது. அது என்னதான் செய்ய வில்லை? வழக்கமாக சினிமாக் களில் வரும் தியாகிகள், நெற்றி யில் குண்டடிபட்டுச் சாகிறதைக் கூட, விட்டுவைக்காமல் செய்கி றது!

காதலை வசீகரமான முக பாவங்களாலும், தாய்மைப் பாசத்தை உருக்கமான நடிப் பாலும் சித்திரித்திருக்கிறார் கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர். உயரே ஏறும் நெருப்புக் காட்சியில், ஒரு மனைவியின் உண்மையான பதைபதைப்பை விஜயாவின் முகத்தில் பார்க்கிறோம். நயமான காட்சி!

சினிமா விமர்சனம் : நல்ல நேரம்

எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சுலபமான வேலை. விளையாட்டாகச் செய்திருக்கிறார். உற்சாகம் குமிழியிட, சுறுசுறுப்பாலும் துடிப் பாலும் அந்தப் பாத்திரத்தைக் கல கலப்பாக்கியிருக்கிறார். அவர் பெண் கேட்கப்போகும் படலம் வெகு சுவாரசியமான பகுதி. அழ காகச் செய்திருக்கிறார். மாமனா ரிடம் பேசும்போது என்னமாய் வியர்த்து விறுவிறுத்துப் போகி றார்!

நாகேஷ், அசோகன், சுந்தர் ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் பெயருக்கு வந்து போகி றார்களே தவிர, பெயர் சொல் கிறாற்போல் அவர்களுக்குப் பாகம் அமையவில்லை.

சினிமா விமர்சனம் : நல்ல நேரம்

வசனங்கள் அருமை. 'மூன்று பைசா குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்கிறோம்; முப்பது ரூபாய் விலை கொடுத்து வாங்கி னாலும், செருப்பைக் காலில் தான் போட்டுக் கொள்கிறோம்' என்ற ஒரு வசனமே வசனகர்த்தா ஆர்.கே.ஷண்முகத்துக்குப் பெயர் தேடிக் கொடுத்துவிடுகிறது.

ராதிகாவின் கவர்ச்சி நடனம் கவர்ச்சியாகவும் இல்லை; நடன மாகவும் இல்லை. அதைவிட, யானை சலங்கை கட்டி ஆடும் நடனம் ரசிக்கும்படி இருக்கிறது.

யானைகள் ஓடியாடி உழைத்து ராஜு (கதாநாயகனின்) வாழ்க் கையை மட்டும் உயர்த்தவில்லை; இத்தப் படத்தின் சுவையையும் உயர்த்தியிருக்கின்றன.

சினிமா விமர்சனம் : நல்ல நேரம்
சினிமா விமர்சனம் : நல்ல நேரம்