Published:Updated:

நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?

நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?
நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?
"நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?"
நா.கதிர்வேலன், படம்:கே.ராஜசேகரன்
நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?
நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?

'டூப்' நடிகராக இருந்து அசல் இயக்கு நராக மாறியவர் பிரபு சாலமன். கடலினும்

பெரிய பொறுமையுடன் காத்திருந்து வெற்றிக் கனி பறித்தவரின் கதை இது!

"நெய்வேலி, எனக்குச் சொந்த ஊர். குடும்பத்துல யாருக்கும் சினிமா பரிச்சயம் கிடையாது. சின்ன வயசு நினைவுகளில்முத்து காமிக்ஸ் மட்டும்தான் பளிச்சுனு ஞாபகத்தில் இருக்கு. இரும்புக் கை மாயாவியின் அட்ட காசங்கள், வீர தீர சாகசங்கள், திக் திகீர் திருப்பங்கள் எல்லாமே என்னை வேற ஓர் உலகத்தில் உலவச் செய்யும். உதிரித் துண்டு ஃபிலிம்களைச் சேகரித்து, அதிலேயே ஒரு கதை கோத்துத் திரையிடுவேன். அதற்காக அப்பாவின் பழைய வேட்டிகள் 'டார் டார்'னு கிழிக்கப்படும். அப்பாவுக்கு ஆரம்பத்துல இருந்தே என்னோட இந்த நடவடிக்கைகள் கவலையை உண்டாக்கின. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் எங்க ஊர் அமராவதி தியேட்டர்ல புதுப் படம் போடுவாங்க.எந்தப் படம் போட்டாலும், முதல் ஆளா டிக்கெட் வாங்கிடுவேன்!

ப்ளஸ் டூ முடிச்சதும், ஒரு வேகத்துல சினிமா ஒளிப்பதிவாளர் படிப்புக்கு திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பிச்சேன். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தும், அம்மா அதை மறைச்சுவெச்சுட்டாங்க. தேதி எல்லாம் முடிஞ்ச பிறகுதான் என் கண்ணுல காமிச்சாங்க. அப்புறம் ஆங்கில இலக்கியம் படிச்சேன். அப்படியே சென்னைக்குக் கிளம்பிட்டேன்.

நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?

நடுநடுவே இயக்குநர்கள் விக்ரமன், பார்த்திபன்கிட்ட சேர முயற்சிகள். எதுவும் பலன் அளிக்கலை. சென்னையின் அதிர்ச்சி கரமான பக்கங்கள் அப்போதான் எனக்கு அறிமுகம் ஆனது. முதன்முதலா நான் வந்த நோக்கம் தவறி, 'நம்ம அண்ணாச்சி' படத்துல சரத்குமாருக்கு 'டூப்'பாகத் தோன்றி னேன். சரத்துக்கு மூணு வேஷம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவருக்கு இணையாக, ஆனால், முதுகு மட்டும் தெரியுற மாதிரி நிப்பேன். அந்தப் படத்தில் சுந்தர்.சி அசோசியேட் டைரக்டர். அப்ப தினமும் 15 ரூபாய் பேட்டா. மாசம் 400 ரூபாய்சம்பளம். எந்த ஒரு நிலையையும் அடையறதுக்கு முன்னாடி, கல்யாணம் செய்துட்டேன். என் மனைவி புனிதா, நான் எப்படியும் முன்னுக்கு வருவேன். பெரிய வெளிச்சம் கிடைக்கும்னு நம்பின பொண்ணு. என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கரிச்சுக் கொட்டி இருந்தா, என்னால் எதுவும் சாதித்து இருக்க முடியாது. வீடுதான் முதல் நிம்மதி!

அதற்குப் பின்னாடி சுந்தர்.சி, அகத்தியன் சார்கிட்ட உதவி டைரக்டரா இருந்தேன். சினிமாவின் பல விஷயங்கள் பிடிபட்ட மாதிரி தெரிந்தது. முதல் படம் 'கண்ணோடு காண்பதெல்லாம்' சரியாப் போகலை. முதல் படம் தோல்வி அடைஞ்சவங்க சினிமாவில் எழுந்தி ருக்கிறது ரொம்ப கஷ்டம். கண்ணு முழி பிதுங் கும். ஆனாலும் மனசு மட்டும் தளரவே இல்லை. ஒண்டுக் குடித்தனம். புன்சிரிப்பு மாறாமல் புனிதா. எழுந்திரிச்சு உட்கார்ந்து டலாம்னு தோணுச்சு. அப்புறம் 'கிங்', 'கொக்கி', 'லீ', 'லாடம்'னு அடுத்தடுத்து பண்ணினேன். 'கொக்கி' பல்லைக் கடிச்சுக்கிட்டு சிக்கனத்தின் உச்சியில் எடுத்த படம். தினச் செலவு ஐயாயிரத்தைத் தாண்டாது. அந்தப் படம் திரும்பிப் பார்க்கவைத்தது.

என் பிரார்த்தனைகள் வீணாகலை. தேவா லயம் எங்கும் என் பிரார்த்தனைகள் இறைஞ்சு கிடந்ததை ஆண்டவன் பார்த்திருக்கலாம். என் வேண்டுதலைக் கேட்டு இருக்கலாம். அப்படி ஒரு சமயத்தில் மனசுக்குள் வந்த கதைதான் 'மைனா'. வெற்றியைப் பார்த்த பிறகு பொறுப்பு உணர்ச்சி வருது. கூடவே, இன்னும் கவனமா இருக்கணும்னு எச்சரிக்கையும் வருது.

ஏதோ ஒரு படம் எடுத்து, யாரோ ஒரு நடிகரைச் சந்தோஷப்படுத்துவதைவிட, இப்படி ரசிகர்களைச் சம்பாதிக்கலாம்னு தோணுது. 'மைனா' படம் பார்த்துட்டு வெளியே வந்தரஜினி சார் ஆரத் தழுவிக்கிட்டு, 'இந்தப் படத்தில் நான் ஒரு சின்ன கேரக்டர் செய்திருந்தால் எனக்கு சந்தோஷமா இருந்திருக்கும்'னு சொன்னார்.

கமல் சார் 'எனக்கு இன்னிக்கு தூக்கம் நல்லா வரும். ஏன்னா, நல்ல படம் பார்த்ததால் வருகிற நிம்மதி அது'ன்னு சொன்னார். கரை கொள்ளாத சந்தோஷம். அவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்தும் இப்படி வார்த்தைகள் வருவதற்கு எவ்வளவு கொடுத்துவெச்சிருக் கணும் பாருங்க!

எனக்கென்னவோ எந்த வெற்றிக்கும் அதிர்ஷ்டம் காரணம் இல்லைன்னு தோணுது. உழைப்பு, சுய சிந்தனை, உழைச்சுக்கிட்டே இருக்கிற மனசு எல்லாமே இருக்கணும். சினிமாவில் இருந்தும் குடிக்கிறது, சிகரெட் புகைக்கிறதுன்னு எதுவும் இல்லாமல் இருக்கேன். இறைவனுக்கு முன்னாடி பொய் சொல்லக் கூடாது. பொறுமையா இருங்கன்னு சொல்ல லாம்னு படுது. இசையாகவும் பிம்பமாகவும் சொல்ல வேண்டிய கதையை எப்படிச் சொல்லி படம் ஆக்கப்போறோம்னு நினைச்சு நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பிச்சதுதான் ஷாலோம் ஸ்டுடியோ. பொறுத்தார் பூமி ஆள்வார். மூணே மூணு வார்த்தை தான். ஆனால், உண்மையும் இதுதான்!"

நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?
நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?