கொடிய மழை நாள் ஒன்றில்
உள்ளாடைகளின்
குளிர்ச்சி தாளாமல்
அதிக நேரம்
குடை குறித்துப் பேசியிருப்போம்.
கைக்கு அடக்கமான குடை
கை தவறிவிடுகிறது.
அளவில் பெரிய குடை
மறந்துவைத்துவிட்டாலும்
கிடைத்துவிடுகிறது.
பத்துப் பதினைந்து நாட்கள்
அடித்த சாரல் மழையில்
குடைகளின் விலை மலிவானது.
நகரப் பகுதிகளில்
மழை நாட்களில்கூட
சுடிதாருக்குப் பொருத்தமாய்
குடை பிடித்தபடி போகிறார்கள்
சில பெண்கள்.
குளிரோ,
மழையோ,
வெயிலோ,
வெளியில் கிளம்பினால்
குடை கொண்டுதான்
போவார்
கறுப்பான எங்கள்
ஆங்கில ஆசிரியை!
- நலங்கிள்ளி
புது மணம்
|