மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05
ஓவியம்:மணி, படம்:கே.ராஜசேகரன்
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05

பெற்றேன் பெரும் பேறு!

'படம் பாக்கப் போறேன்; வறேளா?'

'என்ன படம்?'

'மனோகரா!'

'எனக்கும் சேத்து டிக்கெட் வாங்குவியா?'

'வாங்கறேன்; வாங்கோ!'

'செத்த இரு; மூஞ்சி அலம்பிண்டு வறேன்!'

-பத்திரிகை அலுவலகத்தில் இருந்த பாத்ரூமுக்குள் போனார் - 'சிவாஜி' பத்திரிகையின் ஆசிரியர்...

திருவையாறு லோகநாத சாஸ்திரிகளின் திருப்புதல்வர் திரு.திருலோக சீதாராம்.

'சிவாஜி' சின்னப் பத்திரிகைதான்; ஆனால் அது - திருச்சியிலிருந்து வெளியாகி, திசைகளைத் தின்றது!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05

ஒரு ஷெல்ஃபில் அடுக்கப்பட்டிருந்த, பழைய சிவாஜி ஏடுகளைப் புரட்டுகையில் - என் கண்ணில் ஒரு நாட்டுப்புறப் பாடல் தென்பட்டது. ஓரிரு வருடங்களுக்கு முன் வெளியானது.

கவிதையின் தலைப்பு - 'கை வண்டிக்காரன் காதலி!' கொத்தமங்கலம் சுப்பு எழுதுவாரே, அதுபோல் கிராமியப் பாட்டு அது.

'ரெண்டு-

காசெ வெச்சா நிக்றபடி

மீசெ வெச்சான்; அவன்

தோசெ விக்ற பொம்ளெ மேலெ

ஆசெ வெச்சான்!'

- என்ன எதுகை! என்ன ஓசை நயம்! நான் வியந்துபோனேன். பாட்டின் கீழே 'அகல்யா' என்று போட்டிருந்தது. யார் இந்த அகல்யா?

முகம் கழுவிக்கொண்டு வந்த திருலோகம் அவர்களிடம் கேட்டேன்.

'யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையோ அல்லது அனந்தன் நம்பியாரோ - சரியா ஞாபகமில்லே! இந்தப் பையன் பாட்டெல்லாம், உங்க பத்திரிகையில போடணும்னு சொன்னாங்க... பாட்டும் நன்னாருந்துது; போட்டேன்!'

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05

'அப்போ - அகல்யாங்கறது...'

'அவனோட புனைப்பேரு! சரி, வா! படத்துக்குப் போவோம்!'

திருலோகமும் நானும் 'மனோகரா' படம் நடக்கும் - ஸ்டார் டாக்கீஸை நோக்கி நடந்தோம்!

பின்னாளில் - சென்னையில் 'கிளப் ஹவுஸ்' என்னும் இடத்தில் - நானும் நாகேஷ§ம் அறுபதுகளில் தங்கிக்கொண்டு - சினிமா வாய்ப்புக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது-

என் ரூமுக்கு ஒருவர் வருவார்; நான் ஆரம்பத்தில் ஓவியனாக இருந்தது அவருக்குத் தெரியும். அவரும் நல்ல ஓவியக்காரர். என்பால் அன்புகொண்டு அவ்வப்போது வந்து அளவளாவுவார்.

அவர் பெயர் திரு.கணபதிசுந்தரம். அவரிடம் நான் சொன்னேன்: 'கணபதியண்ணே! பல ஆண்டுகளுக்கு முன்னால் 'சிவாஜி' பத்திரிகையில் நான் ஒரு பாட்டைப் பாத்தேன். அது 'அருண் ராகவன்' இசையமைப்பிலே, ஒரு படத்துல வந்திருக்குது. பாட்டுப் புஸ்தகத்தெ வாங்கிப் பாத்தேன். எழுதியதுன்னு, உங்க தம்பி பேரு போட்டுருக்குதே!' என்று கேட்டுவிட்டு...

'ரெண்டு-

காசெ வெச்சா நிக்றபடி...'- அப்படீன்னு பல்லவியையும் சொன்னேன்.

'ஆமாம்! அது என் தம்பி எழுதிய பாட்டுதான்; பத்திரிகையில எழுதினதைப் படத்துக்குக் கொடுத்திருக்கிறான்!' என்றார் அவர்.

"பத்திரிகையில - எழுதியது 'அகல்யா'ன்னு போட்டிருந்துச்சே!" என்றேன் நான்.

"அவன்தான் 'அகல்யா'ன்னு, அப்ப புனைப்பேரு வெச்சுக்கிட்டு எழுதிக்கிட்டிருந்தான்; முழுப் பேரு - அ.கல்யாணசுந்தரம். அதுல முதல் நாலெழுத்தெ எடுத்து, 'அகல்யா'ன்னு வெச்சுக்கிட்டான்!' என்றார் கணபதிசுந்தரம்; அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சொந்த அண்ணன்!

பழையபடி - விட்ட இடத்திற்கு வருகிறேன். நானும் திருலோகம் அவர்களும், 'மனோகரா' படத்தைப் பார்த்தோம்.

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05

'டேய், வாலி! வெண்ணெய்க்கு, தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு வெண்ணெய் ஆதாரமா? அப்படி கலைஞரும் கணேசனும்!' என்று சொல்லிவிட்டு-

'நீ ஸ்ரீரங்கம் பஸ்ஸை அப்புறம் புடிக்கலாம். இப்போ - தில்லை நகர்ல ஒருத்தர் ஆத்துக்குக் கூட்டிண்டு போறேன்... அங்க ஒரு அம்மா இருக்கா; பாத்துட்டுப் போ! யார்னு சொன்னேன்னா, உனக்குத் தூக்கி வாரிப்போடும்!' என ஒரு சஸ்பென்ஸ் வைத்து, அந்த வீட்டுக்கு என்னை அழைத்துப் போனார்.

அந்த அம்மையாரைப் பார்த்தேன்; ஆரென்று புரிந்துகொண்டேன்.

மழித்த தலை; நார்ப்பட்டில், மடிசார் புடவை; ருதுவாகு முன் வதுவாகி - வயது முப்பத்தொன்றில் வைதவ்வியம் எய்திய மூதாட்டி. நான் சந்திக்கையில் - அந்த அம்மையாருக்கு, அகவை அறுபத்து நான்கு. தவிட்டையும் தங்கத்தையும் - ஒக்க நோக்கும் ஒரு பக்குவம் - விழியில் விளங்குவது கண்டு வசமிழந்து நின்றேன்.

'விழுந்து சேவிடா', ஞானம் வரும்!' என்றார் திருலோகம்.

நெஞ்சு நிலந்தோய, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து நமஸ்கரித்தேன்.

'நன்னாரு... நன்னாரு!' என்று அம்மையார் தண்ணளி மிக்க ஒரு தாயின் நிலையிலிருந்து என்னை ஆசீர்வதித்தார்கள்.

அன்னணம் என்னை ஆசீர்வதித்த அந்த மாது சிரோமணி...

மோனைக் காலில்

முத்தமிழை நிறுத்திப் பின் -

ஆனைக் காலில்

அடிபட்டுச் செத்தானே...

அந்த மகாகவி பாரதியின் தரும பத்தினி திருமதி. செல்லம்மாள் பாரதி!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 05
- சுழலும்...