ஏன் தெரியுமா? மனித ஆணின் மூளை மற்ற மிருகங்களின் மூளையைப்போலச் செயல்படுவது இல்லை. பிற மிருகங்கள் பெண்ணின் முகத்தைப் பாராமல் அவள் சுகிக்கிறாளா இல்லையா என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல், எந்திரகதியில் புணரும். ஆனால், மனித ஆணின் மூளையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டு இருந்தது. கலவியின்போது பெண் சுகப்படும் காட்சியைத் தன் கண்களால் கண்டால் ஒழிய, அவனால் தன்னிறைவு பெற முடியாது. இப்படி பெண் கிளர்ச்சி அடையும் காட்சியை உற்றுப் பார்ப்பதே ஆணுக்குப் பெரிய சந்தோஷத்தைத் தருகிறது. காரணம், பெண்ணின் கலவியல் தேர்வு விதி: 'நீ எவ்வளவு பெரிய கொம்பனா வேண்ணா இருந்துக்க. ஆனா, எனக்கு சுகம் தரத் தெரியலேன்னா, நீ சுத்த வேஸ்ட்டுடா' என்பதாகவே இருந்தது. இப்படி, அவள் ரசனைகளை மதித்து, அவளை மகிழ்விக்கத் தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடுவதால், அவளை நாசூக்காகக் கையாளத் தெரிந்த ஆணின் மரபணுக்கள் மட்டுமே பரவுகின்றன. இதுதான் சூட்சுமம் என்று ஆனபின், ஆணின் மரபணுக்கள் சும்மா இருக்குமா?
பெண்ணை லாகவமாகக் கையாளும் விசையை ஆணின் மூளையில் புதிதாக உருவாக்கின. பெண்ணை மகிழ்வித்தால், இந்த மூளை மையம் இன்ப ரசாயனங்களைச் சுரக்க ஆரம்பித்துவிடும். இதனால், ஆணுக்கு ஊக்கமும், கிளர்ச்சியும், தன் ஆண்மையின் மேல் கர்வமும் ஏற்படுகிறது. இவை அவனுக்குப் பெரும் நிறைவைத் தர, ஒலிம்பிக்ஸில் முதலிடம் பிடித்தவனுக்கு ஏற்படும் வெற்றிக் களிப்பை ஒவ்வொரு முறை புணரும்போதும் அவன் பெறுகிறான், பெண் முகத்தில் சுகத்தின் சுவடு தெரிந்தால் மட்டும்!
அதனால்தான் பெரும்பாலான ஆண்கள் கலவிகொண்ட உடனே, பெண்ணிடம், 'உனக்குப் பிடிச்சுதா? டிட் யூ என்ஜாய்ட் இட்?' என்று கேட்கிறார்கள். அவள் என்ஜாய் செய்தால் இவனுக்கு என்ன, செய்யாவிட்டால் இவனுக்கு என்ன? சிம்பிள், அவள் |