Published:Updated:

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05

vandenda nanbenda santhonam
பிரீமியம் ஸ்டோரி
News
vandenda nanbenda santhonam ( Writer R.Sivakumar )

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05
படம்:கே.ராஜசேகரன், ஓவியம்:ஹரன்
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05

மூணு வாரத்துக்கு முன்னாடி விகடன் 'பொக்கிஷம்' பக்கத்தைப் புரட்டினப்போ, பகீர்னு

இருந்துச்சு. அது நம்ம தங்கவேலு சார் பேட்டி. எவ்வளவு பெரிய ஜீனியஸ்!

என்னோட ரோல் மாடல்களில் ஒருத்தர். ஆனா, அவர் 10 வருஷங்கள் சினிமா சான்ஸ் இல்லாம வீட்டுல இருந்திருக்காரு. அப்ப எடுத்த பேட்டிதான் பொக்கிஷம்ல வந்தது. 'நீங்க ஏன் நடிக்கறதை விட்டுட்டீங்க?'னு கேட்டதுக்கு, 'சான்ஸ் கிடைக் கலை, நடிக்கலை!'னு அசால்ட்டா சொல்லி இருக்காங்க தங்கவேலு சாரோட ஒய்ஃப் சரோஜா மேடம். என்னா ஒரு தைரியம்!

தங்கவேலு சார் பேட்டி படிக்கிறப்ப, 'சினிமாவுல எப்பவுமே சடார்னு உயரமும் வரும், தொபுக்கடீர்னு பள்ளமும் வரும்... புரிஞ்சுக்கடா சந்தானம்!'கிறாரு மை டியர் மனசாட்சி. இன்னொரு பக்கம், 'தங்கவேலுவும் சரோஜாவும் எவ்வளவு பெரிய ஆர்ட் டிஸ்ட். ஆனா, எந்தத் தயக்கமும் இல்லாம உண்மையைச் சொல்லி இருக்காங்க. நாம பாட்டுக்குத் தொடர் எழுதறோம்னு... வந்தது, போனது, வெந்தது, வேகாதது, கண்டது, காணாததுன்னு அடிச்சி விட்டுட்டோம்னு வெச்சிக்குங்க, நாளைக்கு நம்ம சந்ததி படிக்கிறப்போ, 'இந்தா பாரு, என்னமா புளுகி இருக்கான்?'னு பேசுவாங்களே. அதனால, வரலாறு முக்கியம்டா சந்தானம். அதைவிட, உண்மை ரொம்ப்ப்ப... ரொம்ப்ப்ப முக்கியம்!

ஓ.கே. இப்ப என்னோட காதல் கதைகளைச் சொல்றேன். என்னோ டதுன்னா, என்னோடது இல்லை. என்னை நம்பிக் காவு வாங்கப்பட்டாங்களே, அந்த அப்பாவிகளோட காதல் கதை. பொதுவா, தமிழ் சினிமாவுல ஹீரோவுக்கு ஹீரோயினை ரேப்பிங்ஸ்ல இருந்து காப்பாத்தற வேலை. அப்பாலிக்கா... க்ளைமாக்ஸ்ல ஒசரமான கட்டடத்துல ஓணான் மாதிரி தொங்கிட்டு இருக்கிற அம்மாவையும் தங்கச்சியையும் காப்பாத்தற வேலைன்னு ஆயிரம் வேலைகள் இருக்கும். ஆனா, இந்த காமெடியனுங்க இருக்காங்களே... தலைவர் ரஜினி காலத்துல இருந்து தனுஷ் காலம் வரை, ஹீரோ லவ் வுக்குத் தூது போறதுதான் மெயின் வொர்க். ஆனா, நிஜ வாழ்க்கையில நம்ம ஸ்டோரிஸ் கொஞ்சம் வித்தியாசமானது.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05

காலேஜ் படிக்கிறப்ப என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ஒரு பொண்ணை உருகி உருகிக் காதலிச்சான். பயபுள்ள... நிறைய முரளி படம் பார்த்துக் கெட்டுப்போனவன். 'சொல் லக் கூடாதுடா லவ்வு, மெல்லக் கூடாதுடா ஜவ்வு'னு டோமர் கணக்காத் தத்துவம் பேசிட்டு, தூரத்துல இருந்தே உருகி, மருகி, கருகிக் காய்ஞ்சுபோய்க் காதலிச்சான்.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05

அந்தப் பொண்ணு காலேஜ் என்ட்ரன்ஸ்ல கால் வைக்கும்போதே, இவனுக்கு 'துடிக்குது புஜம், கவுப்பது நிஜம்'தான். 'மவனே! இப்ப டியே பேசாம ஃபீலிங் காட்டிட்டு இருந்தா, அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு நீதான் மொய் நோட்டு எழுதணும்'னு சொன்னேன். 'என்னடா பண்றது?'ன்னான். 'அப்படிக் கேளு. நீ என்ன பண்றே, உன் ரத்தத்துலயே லெட்டர் எழுதி, அந்தப் பொண்ணுகிட்ட கொண்டுபோய்க் கொடுக்கிறே. பொண்ணு உஷார் ஆகும், காதல் வொர்க்-அவுட் ஆகும்'னேன். ரத்தம்னு சொன்னதும் டக் அடிக்கிற பேட்ஸ்மேன் கணக்கா, கொஞ்சம் டர்ராகிப் பின் வாங்கினான். கேன்டீன்ல ஊசிப்போன மெதுவடை தொடங்கி, கொய்யாப் பழம் விக்கிற கோகிலா அக்கா வரைக்கும் கவிதை சொல்ற நண்பன் ஒருத்தன் வாயைத் தொறந்தான், 'டேய், காதல்ங்கிறது ரத்தத்துல தொடங்கி முத்தத்துல முடியுறது'ன்னு அவுத்து வுட்டான் பாருங்க... ஒரு ஆஃப் பாயில் கவிதை. ஒரு வழியா கையைக் கிழிக்கச் சம்மதிச்சான் அந்தக் காதல் டைனோசர்.

கேன்டீன் கூட்டிட்டுப் போயி, ஒரு புது பிளேடு வாங்கிட்டு வந்தேன். 'சரி மச்சான், லெட்டர்ல என்ன எழுதணும்னு சொல்லு, அதுக்கேத்த மாதிரிதான் கையைக் கிழிக்க ணும்'னேன். 'இந்த மாதிரி, இந்த மாதிரி உன்னை லவ் பண்றேன். அந்த மாதிரி, அந்த மாதிரி என்னை நீ லவ் பண்றியா?'னு சொல் வான்னு பார்த்தா, அவன் கம்பரோட கசின் பிரதர் கணக்கா அவுத்துவிடறான். 'அன்னிக்கு நீ பச்சை சுடிதார் போட்டு சிரிச்சப்போதான் நான் தொலைஞ்சுபோனேன். செவ்வாய்க் கிழமை மருதாணி போட்டிருந்தே, புதன் கிழமை மஞ்சக் கிழங்கு அரைச்சுப் பூசி இருந்தே, உன் கண்ணு இருக்கே கண்ணு... அது என்னைத் துளைக்கிற மிஷின் கன்னு, மூக்கு இருக்கே மூக்கு... அது முந்தாநாள் போட்ட கேக்கு'னு சொல்லிக்கிட்டே போறான். இந்தக் காதல் கருமம் வர்றப்பவே கவிதைக் கண்றாவியும் சேர்ந்துதானே வரும்? 'சரி மச் சான், உடம்புல இருந்து ரெண்டு லிட்டர் ரத் தத்தை உருவினாதான், இந்தக் கதை எல்லாம் எழுத முடியும்'னு தேடித் தேடி கடைசியா ஒரு நரம்பைக் கண்டுபிடிச்சு வெட்டிவிட்டேன். சும்மா போர் போட்ட மாதிரி குபுக் குபுக்னு ரத்தம் வருது.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05

நானும் ரத்தத்தைத் தொட்டு எழுதறேன், எழுதறேன்... நான் எடுத்த ரத்தத்தைவிட, லிட்டர் கணக்குல ரத்தம் லீக் ஆகுது. ரெண்டு நிமிஷத்துல ரத்தத்தைப் பார்த்துக்கிட்டே அவன் மயக்கம் ஆயிட்டான். அப்புறம் அடிச்சுப் பிடிச்சு ஹாஸ்பிட்டலில் சேர்த்தேன். வேற யாரு அவனுக்கு ரத்தம் கொடுக்கிறது? நான்தான் அவனுக்கு ரத்தம் கொடுத்தேன். போன ரத்தத் தைவிட, எடுத்த ரத்தம் அதிகமோன்னு கவலைப்பட்டு யோசிக்கிற அளவுக்கு ரத்தம் எடுத்துட்டாங்க.

இதுல க்ளைமாக்ஸ் என்னன்னா, எந்தப் பொண்ணை அவன் லவ் பண்ணினானோ... அந்தப் பொண்ணுக்கு மேட்டர் தெரிஞ்சுபோச்சு. நேரா அந்தப் பொண்ணு அடுத்த நாள் என்கிட்டே வந்துச்சு. 'சந்தானம், யு ஆர் கிரேட். இந்தக் காலத்துல நண்பனுக்காக யார் இவ்வளவு தியாகம் பண்ணுவாங்க? லவ் பண்ண ஐடியா தானம் பண்ணினதோட, ரத்த தானமும் பண்றியே'ன்னு கன்னாபின்னான்னு புகழ ஆரம்பிச்சு, கடைசியில 'ஐ லவ் யூ சந்தானம்'னு முடிச்சது. ஆஹா, என்னடா ஹிஸ்டரி ரிவர்ஸ் கியர் போட்டு ஓடுதுன்னு ஷாக் ஆகிட்டேன். ஹாஸ்பிடல்ல இருந்து திரும்பின ஃப்ரெண்ட் முதல் காரியமா செஞ்ச வேலை... என் ஃப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணினதுதான்.

இப்படி காதலுக்கு உதவப்போய் ஆப்படிச்ச பின்னாலும் விட்டேனா நான்? அதே பாலிடெக் னிக்ல இன்னொருத்தன் டைரக்டா செகண்ட் இயர் சேர்ந்தான். அவன் கையில பெரிசா 'லி'னு எழுதி இருக்கும். என்னன்னா... முதல்ல படிச்ச பாலிடெக்னிக்ல ஃபர்ஸ்ட் இயர்ல லலிதாங்கிற பொண்ணைக் காதலிச்சு இருக்கான். அந்தப் பொண்ணு வழக்கம்போல, 'நீங்க எனக்கு அண்ணன் மாதிரி'ன்னு அரை கிலோ அல்வா கொடுத்துடுச்சு. இங்க வந்தவன் சும்மா இருந்தானா... வந்த தும்... எங்க கிளாஸ்ல இருந்த பொண்ணை டாவடிக்க ஆரம்பிச்சிட்டான். அந்தப் பொண்ணு பேரு இந்திரா. ஆனா, அந்தப் பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ண பெரிய தடையா இருந்தது அவனோட காதல் சின்னம். கையில 'லி' னு எழுதிட்டு இந்திராவை எப்படி லவ் பண்ண முடியும்?

என்கிட்டே அவன் பிரச்னையைச் சொன்னதும், 'இது ஒரு பிராப்ளமா, முதல்ல பீடி வாங்குடா'ன்னேன். அவனும் எதுக்குன்னு புரியாம ஒரு கட்டு பீடி வாங்கிட்டு வந்தான். ஒரு பீடியைப் பத்தவெச்சு ரெண்டு இழுப்பு இழுத்துட்டு, 'கையக் காட்டுடா'ன்னேன். 'என்னடா பண்ணப் போறே?'னு மெர்சலா மிரண்டுபோய்க் கேட்டான். 'ஒண்ணுமில்லை... இந்த லி-ஐப் பீடியால சுட்டு 'மி' ஆக்கப் போறேன்'னேன். 'ஐயையோ... அது என் காதல் சின்னம்'னு அலறினான். 'டேய்ய்ய்... ஷாஜகானே இன்னிக்கு இருந்தா... தாஜ்மகாலை வாடகைக்கு விட்டுட்டு, தாஜ் ஹோட்டல்ல ரூம் போட்டு சரக்கு அடிச்சிக்கிட்டு இருப்பாரு'ன்னு ரெண்டு அதட்டு அதட்டி பீடியால சுட்டு, லி-க்கு மேல ஒரு கோடு, கீழே ஒரு கோடு போட்டு மி ஆக்கிட்டேன். அவனும் ஆசை ஆசையாப் போய் இந்திராகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லி இருக்கான். 'உன்னை லவ் பண்றதுல ஒண்ணும் பிரச்னை இல்ல. ஆனா, ஏற்கெனவே நான் இன்னொருத்தரை லவ் பண்றேனே, என்னா பண்றது?'னு கேட்டிருக்கு அந்தப் பொண்ணு.

இந்திராகிட்ட லவ்வைச் சொல்லி 'நொந்திரா' ஆனவன், நேரா என்கிட்ட வந்தான். 'ஏன்டா, ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடி, அந்தப் பொண்ணு ஏற்கெனவே லவ் பண்ணுதா இல்லையான்னு பார்க்க மாட்டீங்களா?'ன்னு திட்டிட்டு, 'மச்சி, ஒரு பீடி சொல்லேன்'னேன். 'இப்ப எதுக்குடா பீடி?'ன்னு முழிச்சுக்கிட்டே

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05

அவனும் பீடி வாங்கிட்டு வந்தான். 'கையைக் காட்டுடா'ன்னு பீடியால சுட்டு, மி-யை வளைச்சு ஞி ஆக்கிட்டேன். 'ஏன்டா... நீ ஏ, பி, சி, டி எழுதிப் பழக என் கைதான் கிடைச்சுதா?'ன்னு செம காண்டு ஆயிட்டான். 'மச்சி, வேற வழியே இல்லை. ஞி-யில ஆரம்பிக்கிறதுதான் உன் வருங்கால மனைவியோட பேரு. உன் கையில எழுதினதையும் மாத்த முடியாது... தலையெழுத்தையும் மாத்த முடியாது'ன்னுட்டேன்.

அப்புறம் பாலிடெக்னிக் எல்லாம் முடிச்சு, படத்துல நடிச்சுட்டு இருந்த ஆரம்ப காலம். பல வருஷங்களுக்குப் பின்னாடி அந்த ஃப்ரெண்டைச் சந்திச்சேன். 'இவங்கதான் என் ஒய்ஃப்'னு ஒரு பொண்ணைக் காமிச்சான். ஆர்வம் தாங்காம, 'பேரு என்னடா?'ன்னேன். 'தேவிகா'ன்னுச்சு அந்தப் பொண்ணு. கொடுத்த வாக்கையும் மானத்தையும் காப்பாத்திட்டான்... நண்பேன்டா!

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 05
(இன்னும் கலாய்ப்பேன்)