மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04
ஒவியம்:மணி, படம்:கே.ராஜசேகரன்
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04

கவிதா கடாட்சம்!

ருமுறை கலைஞரிடம் சொன்னேன்: 'நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் நாவில் சரஸ்வதி இருக்கிறாள்; இல்லையேல், இப்படித் தகத்தகாயமாகத் தமிழ் தரையிறங்காது - உங்கள் குரல் வழி; விரல் வழி!'

உதட்டில் ஒரு புன்னகையை உட்கார்த்திவிட்டுத் தன் காது மடலைக் கட்டை விரலால் வருடினார் கலைஞர்.

என்போல் கலைஞரோடு பழகியவர்க்குத்தான் தெரியும் - காது மடலை அவரது கட்டை விரல் வருடுமாயின் - அவர் நல்ல 'MOOD'ல் இருக்கிறார் என்பது!

நான் சொல்ல வந்தது யாதெனில், கடாட்சம் இல்லாமல் கவித்துவம் வராது என்பதுதான்!

பொற்றவிசில் போஜராஜன். போட்டி நடக்கிறது. அரசவைப் புலவனை அயல்நாட்டுப் புலவன் வெல்கிறான்.

அவமானம் தாளாது அரசவைப் புலவன், அருகினில் ஓடும் 'அஸ்வினி' ஆற்றில் விழுந்து உயிர் விடுகிறான்!

இரண்டு வயதுக் குழந்தையை இடுப்பில் வைத்திருக்கும் அவனது மனைவி, வடவைத் தீயென வெகுண்டெழுந்து சூரியனைச் சான்று வைத்து சூளன்று உரைக்கிறாள்.

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04

'என் மகனைக் கவிஞனாக்கி - என் மணாளனைப் புறங்கண்ட புலவனை - என் மகனைக்கொண்டே வீழ்த்துவேன்!'

'கற்றுப் பெறுவதல்ல கவித்துவம்; அது கடாட்சத்தால் பெறுவது!' என்கிறார் முனிவர்.

'சரஸ்வதி கடாட்சத்தை என் மகன் பெற - நான் சாகவும் தயார்!' என்கிறாள் தாய்!

'நான் - ஒரு மந்திரம் சொல்வேன்; அதை சவத்தின் மீதமர்ந்து உன் சேய் திரும்பத் திரும்பச் செபித்தால் - நாழிகைப் போதில் நாமகள் கடாட்சம் கிட்டும். ஆனால், பிரேதத்தின் மீது உன் பிள்ளை பயப்படாமல் அமர வேண்டுமே!' என்றார் முனி.

'முனிபுங்கவரே! நானே என் மகனை என் நெஞ்சின் மேல் அமர்த்தி - நீங்கள் உபதேசித்த மந்திரத்தை ஓதுவேன்; மழலைச் சொல்லால் என் மகன், அதைத் திருப்பித் திருப்பி மொழிந்தவாறிருக்கையில் - நான் மெல்ல மெல்ல, ஒரு கத்தியால் என் கழுத்தை அரிந்துகொண்டே வருவேன்; நான் சவமானது தெரியாமல் என் சேய் - அந்த மந்திரத்தைச் செபித்துச் செபித்துக் கவிஞனாவான்!' என்று கனலையும் புனலையும் கண்கள் கக்கக் கூறினாள் அந்த அன்னை!

அன்னணமே செய்தாள்; செத்தாள்; பிரேதத்தின் மீதமர்ந்து மந்திரம் செபித்த மகன், கவித்துவம் வரப்பெற்று...

தந்தையைத் தோற்கடித்தவனை வாதுக்கழைத்து, அதே அரசவையில் வென்று காட்டினான்!

அந்த மகன்தான், பின்னாளில் வட மொழியில் 'காவ்ய தர்சனம்' எனும் நூலை யாத்து - உஜ்ஜயினியில் இன்னொரு காளிதாசனாய் உலா வந்த -

மகாகவி வித்யாபதி!

'காளிதாசன் கம்பன் முதலிய வரகவிகளுக்குக் காளி - வாக்கில் எழுதிய கால முதல், அநாயாசமாகக் கவி சொல்ல வாய்ந்ததையும்; குமரகுருபரர்

ஐந்தாவது ஆண்டில் அரும்பாக்கள் இயற்றினார் என்ற கதையினையும் - அபூர்வக் கற்பனைகள் என்று புறக்கணித்த நான்...

பாரதியார் ஏழாவது வயதில் பாடல் இயற்றித் தமிழ்வாணர்கள் மெச்சும்படி காட்டிய திறமையை, நேரில் கண்டபொழுதுதான் - கேவலம் படிப்பினால் பாவன்மை வராது; கவிகள் பிறப்பிலேயே அமைய வேண்டும் என்று அறிந்தேன்!'

- இது, 'பசுமலைப் புலவர்' திரு.சோமசுந்தர பாரதியார் அவர்கள் சொன்னது!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04

ஞ்சு வயதுப் பையன். வாசித்தான் புல்லாங்குழல்; வையம், மூக்கின் மேல் விரல்வைத்தது!

சின்னப் பையன் என்பதால் - அவனை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு - மேடையேறுவார், அவனுக்கு வயலின் வாசித்த மகாவித்வான் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை!

"அய்யோ! இந்தப் பையன் 'எங்கத்து ஆளாப் பொறக்கல்லியே!" என்று - தாபந்திரியப்பட்டார் நாதஸ்வரச் சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை!

குருவருள் இன்றித் திருவருள் கொண்டு - குழலூதிக் குவலயத்தை மயக்கிய அந்தப் பையன்தான் -

வேணுகான டி.ஆர்.மகாலிங்கம்!

காலிங்கம் என் வீட்டிற்கு வருவார்; என்னோடு மது அருந்துவார்; அவருக்குப் பிடித்த 'சுக்கா வறுவ'லை - வேலு மிலிட்டரியிலிருந்து வரவழைப்பேன்!

செந்தூரில் - தன் நாவரிந்து நல்லிசை வரம் பெற்றார், மதுரை மாரியப்ப சுவாமிகள்!

ஸ்ரீரங்கம் கோயில் மடைப்பள்ளியில், வெண்பொங்கல் சமைப்பவன் - வெண்பா சமைத்துக் கவி காளமேகம் ஆனான் -

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04

ஆனைக்கா அம்பிகை அவன் வாயில் தாம்பூலம் உமிழ்ந்ததால்!

'சுப்பிரமணிய துதியமுது' பாடிய நம் பாவேந்தர் - பின்னாளில் பகுத்தறிவைப் பாடினாலும் - அதையும் அவர் உள்ளிருந்து ஓதியது எம்பிரான் முருகன் எனலாம்!

நான் வானொலியிலும் மேடை நாடகங்களிலும் பாட்டெழுதிக்கொண்டு இருந்த, ஒரு சாதாரணன்.

1954 - மார்ச்சு மாதத்தில், தகவார்ந்த ஒரு தாயைத் திருச்சி தில்லை நகரில் தரிசித்தேன்.

மறுநாள் மரபுத் தமிழில் கவி சொல்லலானேன் - கற்றோர் காமுற!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind - 04
- சுழலும்...