மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 20

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 20

மனம் கொத்திப் பறவை!  - 20
மனம் கொத்திப் பறவை!  - 20
மனம் கொத்திப் பறவை!  - 20

வெளிநாடுகளைப் பார்க்கும்போது எல்லாம் 'இந்தியாவில் என்ன வளம் இல்லை?

இருந்தும், ஏன் இவ்வளவு பின்தங்கி இருக்கிறது?' என்ற கேள்வி எனக்குள் எழும். குறிப்பாக, நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் சிங்கப்பூர், சொர்க்கலோகத்தைப்போல் இருக்க, இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? அதிலும் தமிழகத்தில் உள்ள சேரி களை நினைத்தால், உள்ளம் நடுங்கும். உலகில் சேரிகள் அதிகம் உள்ள நகரங்களில், சென்னை இரண்டாவது இடம் என்கிறார் கள். முதலிடம் மும்பையாக இருக்கலாம். இதுபற்றிக் கேட்டால், 'சிங்கப்பூர் சின்ன ஊர். அதனால் அது சாத்தியம்!' என்கிறார் கள். இல்லை! முழுக்க முழுக்க சிங்கப்பூர் அரசு தான் அதற்குக் காரணம். அரசு போடும்ஒவ்வொரு திட்டமும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே தீட்டப்படுகிறது. இதற்கும் ஒரு விளக்கம் சொல் கிறார்கள். சிங்கப்பூரின் சர்வாதிகார ஆட்சிதான் காரணமாம். நம் ஊரில் மட்டும் ஜனநாயகமா வாழ்கிறது? இங்கே கருணாநிதியைக் கூட எதிர்த்து எழுதலாம். ஆனால், லோக்கல் கவுன்சிலரை எதிர்த்து எழுதினால், வீட்டுக்கு ஆட்டோ வரும். ஒவ்வொரு கவுன்சிலரும் இங்கே குறுநில மன்னர்களைப்போல் வாழ்கிறார்கள். அரசியலிலும் அதிகார வர்க்கத்திலும் மலிந்துள்ள ஊழல்தான் இந்த நாட்டின் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம்.

சென்ற ஆண்டு சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கே சில காலம் எந்த வேலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தேன். ஒரு தேசத்துக்குப் போனால், அங்கு உள்ள தமிழர்களையோ, தமிழ் எழுத்தாளர்களையோ பார்ப்பதைவிட, அந்த ஊர் மனிதர்களைச் சந்திப்பதே என் வழக்கம். அப்படி சுற்றிக்கொண்டு இருந்தபோது சிங்கப் பூரின் அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்று கவனித்தேன். அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உதாரணமாக, நான் அமெரிக்காவில் ஒரு கம்பெனி வைத்திருக்கிறேன் (சும்மா பேச்சுக்கு). அதன் பெயரில் ஒரு கோடி டாலருக்கு சீனாவில் இருந்து பொருட்களை இறக்கு மதி செய்கிறேன் என்றால், அமெரிக்க அரசுக்கு நான் 35 லட்சம் டாலருக்கு மேல் வரி கட்ட வேண்டும். அதாவது, 35 சதவிகிதம். ஆனால், இதே கம்பெனியை நான் சிங்கப்பூரில் துவக்கினால், ஒரு பைசாகூட வரி கட்ட வேண்டாம். அதுவும் பல வருடங்களுக்கு. ஒரே விஷயம், சிங்கப்பூர்வாசிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதன் பெயர் தேச பக்தியா? அல்லது, காமன்வெல்த் போட்டி பெயரைச் சொல்லி சுருட்டியது தேச பக்தியா? நம் ஊர் அரசியல்வாதி என்ன சொல்கிறார்? 'எனக்கு 30 சதவிகிதம் வெட்டு. அரசாங்கத்துக்கு 5 சதவிகிதம். சாமான்கள் எந்த கதியில் இருந்தாலும் பரவாயில்லை. ரொம்ப மோசமாக இருந்தால், அதற்குத் தனியாக பர்சன்டேஜ் உண்டு. அதைப் பிறகுபேசிக் கொள்ளலாம்!' சரி, மக்களுக்கு? ம்ஹூம்; தேவை இல்லை. தேர்தல் சமயத்தில் ஒரு ஓட் டுக்கு

1,000 கொடுத்தால் போதும். தலை கீழாக நடந்து வந்து ஓட்டு போடுவான் தமிழன்.

மனம் கொத்திப் பறவை!  - 20

சிங்கப்பூர் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக, சுற்றுலாத் துறைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம். இங்கே தமிழ்நாட்டில் மனிதர்களை மிக மோசமாகக் கேவலப்படுத்தும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு,

12,500 கோடி வருமானம்பார்க் கிறது அரசு. ஹோட்டல்களில்

10 கொடுத்து காபி குடிப்பவர்களுக்கு ஃபேன், மேஜை, நாற்காலி, இலவசமாகத் தண்ணீர் (அதிலும் சுத்தப்படுத்தியது), அருமையான டாய்லெட் என்று ராஜ உபசாரம் கிடைக்கிறது. (அதிலும் என்னைப் போன்ற 'சீனி கம்' பார்ட்டிகள் சீனிக்குப் பதில் 'ஷுகர் ஃப்ரீ மாத்திரை கொடு!' என்று செய்யும் அக்குறும்பு வேறு!) ஆனால்,

100 செலவழித்து, டாஸ்மாக்கில் குடிக்கும் மனிதர்களை இந்த அரசு எப்படி நடத்துகிறது? ஒருத்தர் குடித்துக்கொண்டு இருப்பார். பக்கத்திலேயே ஒருத்தர் 'லூ' போய்க்கொண்டு இருப்பார். அதற்குஅங்கே வேறு இடம் கிடையாது. அந்தக் காலத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, சில நாடு களில் தொழுநோயாளிகளுக்கு என்று ஊரில் இருந்து வெகு தூரம் தள்ளிக் கொட்டடிகள் அமைத்து இருப்பார்கள். அதைவிட்டுஅவர் கள் ஊர்ப் பக்கம் வரவே கூடாது. அந்தக் கொட்டடிகளை ஞாபகப்படுத்துகின்றன, நம் ஊர் டாஸ்மாக்குகள். பக்கத்தில் உள்ள கேரளத்தில்கூட இந்த அநியாயம் கிடையாது. பாரின் உள்ளே நட்சத்திர ஹோட்டல்களின் காட்டேஜைப்போல் மணல் போட்டு ரொம்பவே அட்டகாசமாக வைத்து இருப்பார்கள்.

டாஸ்மாக் பற்றி இன்னொரு விஷயம். அரசாங்கம் டாஸ்மாக்குக்கு வேண்டிய ஏராளமான மதுவைக் கொள்முதல் செய்வதில் சசிகலாவின் மிடாஸ் நிறுவனமும் ஒன்று! ஆக, மக்களைச் சுரண்டுவதில் கூட்டணி போட்டே செய்கிறார்கள் என்று தெரிகிறது!

மனம் கொத்திப் பறவை!  - 20

நான் சொல்ல வந்தது மது பற்றி அல்ல! சமீபத்தில்தான் குடியை நிறுத்தி இருப்பதால், இந்த ஹேங்க்ஓவர் போக சில காலம் பிடிக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள். நம் அரசுக்கு மட்டும் கொஞ்சமாவது மக்கள் நலனில் அக்கறை இருந்தால், சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி, டாஸ்மாக் வருமானத்தைவிட, இரண்டு மடங்கு அள்ளலாம். கர்நாடகாவில் சும்மா யானையைக் காண்பித்துக் காசு பண்ணுகிறார்கள் என்று எழுதியிருந்தேன். ஆனால், இங்கே சுற்றுலாத் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்றே தெரிய வில்லை. உலகின் மிக அழகான இரண்டு பீச்சுகள் உள்ள ஒரே நகரம் சென்னைதான். மும்பையில் மரைன் ட்ரைவ், மலேசியாவில் மலாக்கா பீச்செல்லாம் சென்னை பீச்சுகளோடு ஒப்பிட்டால், ஜுஜுபி. ஆனால், என்ன பயன்? இதன் பெருமைபற்றி சென்னைவாசிகளுக்கே தெரியாது. தெரிந்திருந்தால், இவ்வளவு டன் டன்னாக குப்பை போடுவார்களா? அதிலும், காலை நேரத்தில் அலைகளின் பக்கம் செல்ல நேர்பவர் கள் வாழ்வின் மிகப் பெரிய அதிர்ச்சியைக் காண்பார்கள். (நூற்றுக்கணக்கான பேர் கக்கா போகும் 'ஓப்பன்' டாய்லெட்'!) கடல் மாதாவுக்கு மட்டும் கண்ணிருந்தால் ரத்தக் கண்ணீர் வடிக்கும்.

சொல்லப் போனால், கேரளத்தைவிட சுற்றுலாவுக்கான அதிக ஸ்தலங்களைக்கொண்டது தமிழ்நாடுதான். தஞ்சை பெரிய கோயில் ஒன்று போதும். ஆனால், கோயிலின் எந்த வாசல் வழி யாக உள்ளே போனால், அடுத்த ஆட்சியில் நமக்குப் பிரச்னை வராது என்று யோசிப்பதிலேயே பகுத்தறிவுத் தலைவர்களுக்கு நேரம் செலவாகி விடுவதால் சுற்றுலாத் துறை பற்றித் திட்டமிட நேரம் இருக்காது.

மனம் கொத்திப் பறவை!  - 20

பெரிய கோயில் கும்பாபிஷேகத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பலியானபோதுகூட, அப்போதைய முதல்வர் கருணாநிதி, கோயிலின் முன்வாசல் வழியாகச் செல்லாமல், பின்வாசல் வழியாகத்தான் சென்றார். இப்போது, ராஜ ராஜன் 1000-வது விழாவுக்கும் பின்வாசல் வழியாகவே செல்கிறார். இதெல்லாம் எந்த ஊர் பகுத்தறிவு என்று தெரியவில்லை. முன்வாசல் வழியாகச் சென்றால், பதவி பறிபோய்விடும் என்றால், மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் சொல்லி, முன்வாசலை அடைத்து விடலாமே? சரி, வருங்காலத்தில் ராஜேந்திர சோழன் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்! (கருணாநிதி ராஜராஜ சோழன் என்றால், ஸ்டாலின் ராஜேந்திர சோழன்தானே?)

மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்வோம். அங்கே ஒவ்வொரு அங்குலம் நிலத்தையும் சுற்றுலாவை மனதில்வைத்தே திட்டமிடுகிறார்கள். அன்றாட வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும், அரிசி

1, பருப்பு

100. என்ற குழப்படி எல்லாம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரே சீரான விலை. திருமணம் செய்துகொண்ட எல்லோருக்கும் சொற்ப வாடகையில் வீடு தருகிறது அரசு. இதனால், எப்போது வீடு கிடைக்கும் என்பதைக் கணக்கில்கொண்டு ஜோடிகள் தங்கள் திருமணத்தைத் திட்டமிடுகிறார்கள்.

மேலும், எல்லாவற்றிலுமே ஒரு ஒழுங்கு தெரிகிறது. உணவு, உடை, தங்கும் இடம் மூன்றுமே எல்லா மனிதர்களுக்கும் எட்டிய விலையில் மலிவாகக் கிடைக்கிறது. எல்லாவற்றை யும்விடப் பெரிய விஷயம், வீட்டில் கிடைக்கும் உணவைவிட ருசியான உணவு சல்லிசான விலையில் கடையில் கிடைப்பதால் உணவு, சமையல் என்ற கவலை இல்லாமல் மக்கள் வேலை செய்கிறார்கள். தமிழர்களின் மிகப் பெரிய பிரச்னை, நல்ல உணவு, ஹோட்டல்களில் கிடைப்பது இல்லை. கிடைத்தால் யானை விலை, குதிரை விலை! சில சமயங்களில் நட்சத்திர ஹோட்டல்களில்கூட வீட்டுச் சமையல் மாதிரி கிடைப்பது இல்லை. சென்ற வாரம் ஒருநாள், எனக்குப் பிடித்த தட்சிண் உணவகத்துக்குச் சென்று, வஞ்சிரம் மீன் வறுவல் சாப்பிட்டபோது, அதை கருவாட்டைப்போல் வறுத்து இருந்தார்கள். உடைத்துச் சாப்பிடலாம்போல் இருந்தது. எந்த மீனையும் அதன் மிருதுத் தன்மை கெடாமல் வறுக்க வேண்டும். இரண்டு பேர் சாப்பிட்டு வருவதற்கு

4,000 ஆனது. சரி, நட்சத்திர ஹோட்டல் வேண்டாம்.

40-க்குக் கிடைக்கும் சாதாரண ஹோட்டல் சாப்பாடு நம் வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்குமா? அப்படி இருக்கக் கூடிய அருளானந்தத்தில் இரண்டு பேருக்கு

400 ஆகிறது.

நல்ல உணவகங்கள் இருந்தாலே இந்தியப் பெண்களுக்கு சமையல் அறையில் இருந்து சுதந்திரம் கிடைத்துவிடும். ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்ல உணவகங்கள் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். திரும்பின இடம் எல்லாம் பெரும் food courts இருக்கின்றன.அவர்களின் நேரம் உணவு தயாரிப் பதில் வீணாவது இல்லை என்பதால், அந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுகிறார்கள். அவர்களும் முன்னேறி, தேசமும் முன்னேறுகிறது. குறைந்த விலை, அதிக ருசி என்பதால், மூன்று வேளையும் மக்கள் வெளியே சாப்பிடுகிறார்கள். பலருடைய வீடுகளில் பால்கூட குளிர்சாதனப் பெட்டியில் இல்லை. என்னை மிகப் பெரிய ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம் இது!

ஹாக்கர் சென்டர் என்ற Food Court-ல் ஒருநாள் மலேசிய உணவை ஆர்டர் செய்தேன். ஒரு முட்டை, ஒரு சிக்கன் துண்டு (பெரிய சைஸ்), சோறு, ஒரு மீன் துண்டு (பெரிய சைஸ்), கொஞ்சம் பச்சைக் காய்கறிகள், கடும் காரமான மிளகாய்த் துகையல், ஒரு சிறிய கப் நெத்திலிக் கருவாடு. இதன் விலை என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 2 சிங்கப்பூர் டாலர். நம் காசில்

66. இதே உணவு 150 டாலருக்குக்கிடைக்கும் உணவகமும் உண்டு. ஆனால், நம்மைப் போன்ற சராசரிகள் நல்ல உணவைத் தேடி அலைய வேண்டியது இல்லை. கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கிறது. சிங்கப்பூரில்

மனம் கொத்திப் பறவை!  - 20

எனக்கு ஒவ்வாத ஒரே விஷயம், இந்தியத் தொழிலாளர்களைக் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுத்திச் சுரண்டுவதுதான். ஆனால், அப்படியுமே நம் ஊரைவிட அதிக சம்பளமாகத்தான் இருக்கிறது!

ரு சுலபமான, நல்ல சக்தி தரக்கூடிய ஒரு ரெசிப்பியைக் குறித்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு அழிச்சாட்டியம் செய்யும் குழந்தைகள், ஊட்டிவிடாமலே ரசித்துச் சாப்பிடும். கொழுப்பு நீக்கிய சோயா பால் (staeta பிராண்டு), 200 மில்லியில் போஸ்ட்மேன் பிராண்டு ஓட்ஸ் (பாதாம் பருப்பு கலந்தது), கொஞ்சத்தைப் போட்டு, அதில் ஒரு ஆப்பிளையும் துண்டு துண்டாக நறுக்கிப் போட்டுச் சாப்பிட்டால், காலை உணவு கதம் கதம். மதியம் வரை பசிக்காது. இனிப்புப் பிரியர்கள் கொஞ்சம் பேரீச்சையையும் போட்டுக்கொள்ளலாம்!

மனம் கொத்திப் பறவை!  - 20
மனம் கொத்திப் பறவை!  - 20
-பறக்கும்...