Published:Updated:

உயிர் மொழி - 17

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி - 17


உயிர் மொழி
உயிர் மொழி - 17
உயிர் மொழி - 17
ஒரு எலும்பின் கதை!
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி - 17

ன்னதான் ஆண்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்பின் அளவை வைத்து, தமக்குள்

நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி போட்டுக்கொண்டாலும், பெண்கள் மிகத் தெளிவாகவே இருந்தார்கள். ஆண்கள் ஒரு பக்கம் நீளம் குறித்த போட்டிகளில் நேரத்தை வீணடித்து, ஏமாற்றுத் தந்திரங்களில் ஈடுபட ஆரம்பிக்க, பெண்கள் சத்தமே இல்லா மல் தங்கள் தேர்வு வரையறையை மாற்றினார்கள். நீளம், அகலம் போன்ற வெளித்தோற்றத்தை விட்டுவிட்டு, செயல்பாட்டுத் திறனுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள். அதனால், என்னதான் ஆண் இனச் சின்னங்களை அணிந்து பில்-டப் கொடுத்தாலும் செயல்பாட்டில் சோப்ளாங்கியாக இருந்ததால், அவன் மரபணுச் சங்கிலி ஆட்டத்தில் இருந்து கழட்டிவிடப்பட்டான்.

ஆண்களால் சுயமாகத் தங்கள் மர பணுக்களைப் பரப்பிக்கொள்ள
முடியாதே, எப்படியும் பெண்ணுடல் தேவைப்படுமே! ஆக, பெண் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, தன்னை மாற்றிக்கொண்டே ஆக வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு. அல்லது மாற்றிக்கொண்டதாக ஒரு பாவ்லாவாவது செய்தாக வேண்டும். இல்லை என்றால், மரபணுப் போட்டி யில் அவன் இல்லை. இதனால் பெண் களின் கறாரான 'நீடித்த சுகம்' என்கிற தேர்வு விதியை அனுசரித்து, ஆணின் மரபணுக்கள் மீண்டும் மாற ஆரம் பித்தன. இதனால், அவன் உடம்பில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது!

உயிர் மொழி - 17

பொதுவாக, ஆண் விலங்குகள் அனைத்துக்கும், இனப்பெருக்க உறுப்புக்குள் பாக்குலம் (baculum) என்ற ஓர்எலும்பு இருக்கும். இந்த எலும்புதான் விறைப்புத் தன்மையை நீட்டிக்க உதவுகிறது. சிம் பன்சி மாதிரியான நம் நெருங்கியஉறவுக் கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது. ஆனால், மனித ஆண் களுக்கு மட்டும் பாக்குலம் இல்லை. ஏன்? பல நூற்றாண்டுகளாக, பல தலை முறைகளாக மனிதப் பெண், பாக்குலம் இல்லாத ஆண்களாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்ததில்... கடைசியில் மனித ஆண், பாக்குலம் இல்லாதவனாகவே போய்விட்டான். எலும்பின் உபயத்தால் விறைப்பு ஏற்படுவதைவிட, எலும்பேஇல்லாதபோதும் விறைப்புடன் இயங்குவதுதான் நிஜ வீரியத்தின்

வெளிப்பாடு. அதனால் மனிதப் பெண்கள் எல்லோரும் எலும்பு இல்லாத ஆண்க ளுடன் கூடி, அவர்களின் தரத்தை வித்தி யாசப்படுத்த ஆரம்பித்தனர். ஆணும் காலப்போக்கில் அது இல்லாமலேயே விறைப்புறும் தன்மையைப் பெற்றான்.

ஆண் விலங்குகளுக்கு பாக்குலம் இருப்பதில் ஒரு மிகப் பெரிய சௌகர்யம் இருந்தது. உதாரணத்துக்கு, நாயை எடுத்துக்கொள்வோம். ஆண் நாய், பெண்ணுடன் கூடிய பிறகும், கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு அந்தப் பெண்ணை விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். காரணம், பெண் நாய்க்கு ஒரே சமயத்தில் ஏழெட்டு கரு முட்டைகள் உற்பத்தி ஆகும். ஒரு ஆணுடன் சேர்ந்த பிறகு, உடனே அது இன்னொரு ஆணுடன் உறவுகொண்டுவிட்டால், அந்த இரண்டாவது ஆணின் விந்தணுக்கள் சில கருமுட்டைகளோடு கலந்துவிட முடியும். இன்னொருத்தனின் மரபணுக்கள் பரவிவிட்டால், தன் சந்ததியினருக்குப் போட்டி ஆகிவிடுமே என்றுதான், கிட்டத்தட்ட அரை மணி நேரம் பெண்ணைப் பிடித்துக்கொண்டே இருக்கிறது ஆண். இந்த அவகாசத்துக்குள் எல்லா கருமுட்டைகளையும் தன் விந்தணுக்களே அபகரித்துவிடும் என்பதுதான் ஆண் நாயின் கணக்கு.

உயிர் மொழி - 17

மனித ஆண் பாக்குலம் இல்லாதவனாகவே மாறியது, பெண்களுக்குச் சாதகமான ஒன்றாகவே இருந்தது. ஆணின் நிஜ உடல்/உள்ள ஆரோக்கியத் தையும், அவை வெளிப்படுத்தும் மரபணு வீரி யத்தையும் தரப் பரிசோதனை செய்ய இதுவே ஒரு சிறந்த வழியாக இருந்ததால், இதில் பெண் களை ஏமாற்றுவது முடியாத காரியமானது. பெண்கள், இப்படிக் கறாராக மரபணுக்களைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமே நல்லது என்பதால்தான், உலகின் எல்லா மதங்களும், பல நாட்டுச் சட்டங்களும் விறைப்புறும் தன்மை இல்லாத ஆண்களை நிஜ ஆண் என்று கருதுவது இல்லை. அதனால், இப்படிப்பட்ட ஆணோடு திருமணம் நடந்தாலும், அந்தத் திருமணத்தை ஒரு நிஜ திருமணமாக இவை அங்கீகரிப்பதும் இல்லை.

இதைவிட, ஆண்களுக்குப் பெரிய சவாலாக அமைந்தது என்ன தெரியுமா? ஆண், பெண் இருவருக்கும் கலவியல் செயல் பாட்டில் இருக்கும் வேறுபாடுகள். மனித

உயிர் மொழி - 17

ஆணால், ஒரு கலவி அனுபவத்தில் ஒரே ஒரு தரம்தான் உச்ச சுகத்தை அடைய முடியும். ஆனால், மனிதப் பெண்ணோ, ஒரே கலவி சேர்க்கையின்போது பல முறை உச்ச சுகத்தை உணர வல்லவள். அது மட்டுமல்ல; கலவி கொண்ட பிறகு, ஆண் அயர்ந்துவிடுவதுதான் இயல்பு. ஆனால், பெண் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டு இருப்பாள். அவன் தூங்கிவிட்ட பிறகு, இவள் வேறு பக்கம் கவனம் செலுத்திவிட்டால்? மனித ஆணுக்குத்தான் பாக்குலமே இல்லையே. இவன் விந்தணுக்கள் எல்லாம் நீந்தியோடி அவள் கருமுட்டையைச் சென்று கலக்கும் வரை, அவளை அரை மணி நேரத்துக்கு அப்படியே பிடித்துப் பூட்டிவைக்க அவனால் முடியாதே!

ஆனால், ஆணின் மரபணுக்கள் அதையும் சமாளிக்காமல் இருக்குமா என்ன? பாக்குலம் இல்லாமலேயே பெண்ணைத் தன் வசப்படுத்திவைத்திருக்க புதுப் புது யுத்திகளை உருவாக்கின ஆணின மரபணுக்கள். அதனால், மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு முறை ஆணின் உடல் அமைப்பு மாற ஆரம்பித்தது. அதுபற்றி...

உயிர் மொழி - 17
உயிர் மொழி - 17