Published:Updated:

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 04

vandenda nanbenda santhonam
பிரீமியம் ஸ்டோரி
News
vandenda nanbenda santhonam ( Writer R.Sivakumar )

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 04

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04
படங்கள்: கே.ராஜசேகரன், ஓவியம்:ஹரன்
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04

ந்தேன்டா... நண்பேன்டா!' தொடருக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் பாஸ்!

அதுவும் நம்ம தலைவர்சூப்பர் ஸ்டார் முதல் வாரம் படிச்சுட்டு, 'சந்தானத்து கிட்ட பேசணும்'னு சொன்னாராம். நான்லாம் வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து ரஜினி ரசிகன். தலையில நிறைய முடி இருந்தாலும், ரஜினி சார் மாதிரி இருக்கட்டும்னுநெத்தியில இருந்து கிருதா வரைக்கும் ரெண்டு பக்கமும் வழிச்சுட்டு ஸ்கூலுக்குப் போய் உதை வாங்கினவன். அப்பேர்ப்பட்ட தலைவரே நம்ம தொடரை ரசிச்சாருன்னா, அதுக்கு மேல என்ன வேணும் மக்களே!

இருந்தாலும், எனக்கு ஒரு மனக் குறை. ரஜினி சார்ல ஆரம்பிச்சு, எல்லா ஹீரோவோடயும் ஒரு ரவுண்ட்வந்தாலும், நம்ம 'லொள்ளு சபா' மனோகரை பீட் பண்ண முடியலையே! அவர் பாட்டுக்கு அசால்ட்டா 300, 400 படம் நடிச்சுட்டு ஓடிட்டே இருக்காரு. நான் இன்னும் 50 படத்தைக்கூடத் தாண்டலையேன்னு மனசுக்குள்ள ஓர் ஆதங்கம். 'அட... லொள்ளு மனோகர் அவ்வளவு படம் நடிச்சிருக்காரா'ன்னு ஆச்சர்யமா கேக்குறீங்களா? கடைசியில டீடெய்ல் சொல்றேன்.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04

நம்ம மனோகர் இருக்காரே... அவரு 'எந்திரன்' மாதிரி ஒரு தனிப் பிறவி. அவரு ஒரு இடத்துல இருந்தாலும் காமெடி, இல்லைன்னாலும் காமெடி, நின்னா காமெடி, நெனைச்சா காமெடி!

மனுஷனைவெச்சுநாங்க லொள்ளு சபா எபிஸோட் எடுக்கிறதுக்குள்ள குக்கர்ல சிக்குன சிக்கன் கணக்கா ஆயிடுவோம். அவருக்கு ஒரு விஷயத்தைப் புரியவெச்சு நடிக்கவைக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து டவுசர் கிழியும். இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா, அவரை மாதிரி ஒரு அப்பாவியைப் பார்க்கவே முடியாது.

'இவ்வளவு கிகிலிபிகிலியா ஒரு மனுஷன் இருப்பாரா?'ன்னு நெனைக்கவைக்கிற கேரக்டர். 'லொள்ளு சபா'வில் 'தளபதி' படத் தைக் கலாய்ச்சு எடுத்துக்கிட்டு இருந்தோம். நான்தான் ரஜினி, மனோகர்தான் மம்மூட்டி (மம்மூட்டி சார் மன்னிச்சுக்கங்க!).

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04

அன்னிக்கு ஷூட்டிங்ல மனோகருக்கு ரெண்டே ரெண்டு வார்த்தைதான் வசனம். என்னைப் பார்த்து, 'நீதான் சூர்யாவா?'ன்னு கேட்கணும்... அவ்வளவுதான். சாயங்காலம் 6.30 மணிக்கு ஷாட். காலையில 10 மணிக்குஎல்லாம் ஸ்பாட்டுக்கு வந்து பிராக்டீஸ் ஆரம்பிச்சுட்டாரு மனோகர். 'நீதான் சூஊஊர்யாஆஆவா?', 'நீஈஈஈஈதான் சூர்யாவா?', 'நீஈஈஈ ஈஈதாஆஆஆன் சூஊஊஊர்யாஆஆவா?'ன்னு பலவிதமா பேசிப் பயமுறுத்திட்டு இருந்தாரு. மாடுலேஷன் பிக்கப் பண்றாராமாம்! எங்களுக்கு செம குஷி. 'மனுஷன் கில்லியா மனப் பாடம் பண்ணிட்டாரு. சீக்கிரம் ஷூட்டிங் முடிச்சிட்டு சரக்கு அடிக்கப் போயிடலாம்னு' பயங்கர ஹேப்பி. அந்த இடத்துல ஒரு ஆளையும் விடலை மனோகர். புரொடக்ஷன் மேனேஜர், அசோசியேட் டைரக்டர் எல்லார் கிட்டேயும் 'நீதான் சூஊஊர்யாஆஆ ஆவா?'தான். அந்தப் பக்கம் ஒரு பொண்ணு பாவமேன்னு போயிட்டு இருக்கு. குடுகுடுன்னு அதுகிட்ட ஓடிப்போயி, 'நீதான் சூஊஊஉர் யாவா?'ங்கிறாரு மனோகர். அலறி அடிச்சு ஓடுது அந்தப் பொண்ணு.

ஒருவழியா மணி 6.30 ஆச்சு. நான் தளபதி ரஜினி கணக்கா காலரைத் தூக்கிவிட்டு, சட்டையில முடிச்சு போட்டு 'ராக்கம்மா கை யைத் தட்டு', 'முடியாது கையில புண்ணு'ன்னு பாடிக்கிட்டே வந்து நிக்கிறேன். கேமரா ரன்னிங். 'லொள்ளு சபா' டைரக்டர் ராம்பாலா சார் ஆக்ஷன் சொன்னதும், மனோகர் என்னைப் பார்த்து, 'நீதான் தேவாவாவா வாவாஆஆஆ?'ன்னதும் மொத்த யூனிட்டும் டர்ர் ஆயிடுச்சு.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04

இப்படி அவரைக் கட்டி மேய்க்கிறதுக்குள்ள எங்களுக்கு நுரை தள்ளி, டப்பா வெந்து, புட்டிப் பால் கக்கிடுவோம். ஒருநாள் 30 டேக் வாங்கிட்டு, கம்பாத் தெம்பா நிக்குறாரு மனோகர். ராம்பாலா டென்ஷனாகி, 'மனோகர், இன்னும் ஒரு டேக் வாங்கினே, எனக்கு பி.பி வந்து செத்துடுவே'ங்கிறாரு. மனோகர் அசால்ட்டா, எங்க பக்கம் திரும்பி, 'செத்துடுவாவாவாவாவாராம்ம்ம்பா... சும்மா சொல்றாரு'ன்னாரே பார்க்கலாம்!

ரொம்ப நாள் கழிச்சு, அன்னிக்குக் கார்ல போய்ட்டு இருக்கும்போது, மனுஷன் ஸ்கூல் பையன் கணக்கா பஸ் ஸ்டாப்ல கையைக் கட்டிட்டு நின்னுட்டு இருக்காரு. 'அட! நம்ம மனோகர் சார். போற வழியில டிராப் பண்ணிடலாம்'னு நினைச்சு காரை விட்டுக் கீழே இறங்கி, கையைக் காட்டி, 'வாங்க சார்'ங்கிறேன். அவரு, 'சரிப்பா சரிப்பா சந்தானம்... நல்லா இரு'ன்னு அங்கே இருந்தே கையைக் காட்டி, பஸ் ஸ்டாப்ல இருந்து ஆசீர் வாதம் பண்றாரு. கடுப்புல கார்ல ஏறிக் கிளம்பிட்டேன். ஷூட்டிங்குக்கு வேற லேட் ஆயிட்டு இருந்தது. மறுநாள் மனசு கேக்காம மனோகர் செல்லுக்கு போன் போட்டா, ஒரு லேடீஸ் குரல் 'ஹலோ'ன் னுச்சு. 'நம்ம மனோகர் வீட்டுல இருக்கிறவங்க குரல் மாதிரி தெரியலையே'ன்னு சந்தேகத்தோடவே 'மனோகர் இருக்காரா?'ன்னு கேட்டேன். 'நான் பக்கத்து வீட்ல இருந்து பேசறேன். மனோகர் வெளியே போயிருக்காரு'ன்னாங்க. எனக்கு ஒண்ணும் புரியலை.

மறுநாள் நேராவே போய் மனோகரைப் பிடிச்சிட்டேன். 'என்னப்பா, உங்களைப் பிடிக்கவே முடியலை. போன் பண்ணினா பக்கத்து வீட்டு லேடீஸ் பேசுறாங்க'ன்னேன். அதுக்கு அவர் சொன்ன பதில், ஈரத் துண்டைக் கட்டிக்கிட்டு கரன்ட் கம்பியில கைவெச்ச மாதிரி ஆயிருச்சு. நாமெல்லாம் வீட்டை விட்டு வெளியே போனா, கதவைப் பூட்டி சாவியைப் பக்கத்து வீட்ல கொடுத்துட்டு, 'யாராவது வந்தா, ஆள் இல்லைன்னு சொல்லிடுங்க'ன்னு சொல்லிட்டு, செல்போனை பாக்கெட்ல போட்டுட்டுப் போவோம்தானே! ஆனா, இந்த மனுஷன் வீட்டைப் பூட்டி சாவியைப் பாக்கெட்ல போட்டுக்கிட்டு, செல்போனைப் பக்கத்து வீட்டுல கொடுத்துட்டுப் போயிடுவாராம்! 'ஆமாஆஆம்பா, யாராவது போஓ ஓஒன் பண்ணினா, ஆள் இல்லைன்னா யாஆஆர் சொல்றது?'ங்கிறாரு!

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04

இப்படித்தான் அன்னிக்கு நண்பன் ஒருத்தன் மனோகர்கிட்டே 'இப்போ என்னென்ன படத்துல நடிச்சுட்டு இருக்கீங்க?'ன்னு கேட்ருக்காரு. 'அதுவாப்பா... ஆ... குஷ்பு புரொடக்ஷன்ல ஒரு படம், சுந்தர்.சி ஹீரோவா நடிக்கிற ஒரு படம், நம்ம வெங் கடேஷ் சார் டைரக்ஷன்ல ஒரு படம்'ன்னு அடுக்கி இருக்காரு. அப்பால விசாரிச்சுப் பார்த்தா, அது எல்லாமே ஒரே படம்தான். குஷ்பு மேடம் தயாரிக்க, சுந்தர்.சி நடிக்க, ஏ.வெங்கடேஷ் சார் டைரக்ட் பண்ண 'வாடா' படம் அது. அந்த நண்பன் பயங்கர காண்டு ஆகி, மனோகர்கிட்ட போயி, 'ஏம்ப்பா, நீ நடிக்கிறது 'வாடா'ன்னு ஒரே ஒரு படம்தானே!'ன்னு கேட்டு இருக்கான். அதுக்கு நம்ம மனோகரு கொஞ்சம்கூட அலட்டிக்காம, மேலயும் கீழேயும் தலை ஆட்டிட்டே, 'ஆமாம்பா... 'வாடா'ன்னும் ஒரு

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04

படம் பண்றேன்!'னு சொல்லி இருக்காரு. சொன்னா நம்புங்க... நிஜமாவே சேர்ல இருந்து கீழே விழுந்து விழுந்து சிரிச்சோம்.

எப்பவாவது போரடிச்சா மனோகருக்கு போன் போட்டு, 'என்ன மனோகர், உங்க படம் எத்தனை ரிலீஸ் ஆகுது?'ன்னு கேட்பேன். "அதுவாஆஆப்பா... காசி தியேட்டர்ல ஒரு படம், உதயம் தியேட்டர்ல ஒரு படம், சத்யம் தியேட்டர்ல ஒரு படம்!'னு அடுக்கிக்கிட்டே போவாரு. அத்தனையும் ஒரே படமாத்தான் இருக்கும். இப்படியே தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை தியேட்டரையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, மனோகர் 300, 400 படம் நடிச்சி இருப்பார்ல?

ஓ.கே. அடுத்த வாரம் நம்ம காதல் கதைகளைப் பார்ப்போம். 'காதல் கதை சரி, அது என்னா கதைகள்னு யோசிக்கிறீங்களா?' ஒரு வாரம் பொறுங்க பிரதர்!

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம்  - 04
(இன்னும் கலாய்ப்பேன்)