Published:Updated:

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03

vandenda nanbenda santhonam
News
vandenda nanbenda santhonam ( Writer R.Sivakumar )

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03
கலாய்க்கிறார் சந்தானம்
படம்:கே.ராஜசேகரன், ஒவியங்கள்:ஹரன்
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03

புதுசாக் கல்யாணம் கட்டிக்கிட்ட மாப்பிள்ளைகிட்ட அப்படி என்ன கேட்டேன்

தெரியுமா?

அடுத்தவனை அல்லாடவிட்டு, டுமாங்கோலி கொடுக்குறதுன்னா, அவனவனுக்கு என்னா ஒரு சொகம்?!

நான் அவர்கிட்ட, 'அங்கிள் குழந்தை எப்படிப் பிறக்குது?'ன்னு கேட்டேன். அப்போ எனக்கு 10 வயசுக்குள்ளதான் இருக்கும். ஈரக் கையோடு கரன்ட் கம்பியைத் தொட்ட மாதிரி, அப்படியே ஷாக் ஆகிட்டாரு மாப்பிள்ளை. திருதிருன்னு முழிக்கிறாரு... அப்பிடிக்கா இப்பிடிக்கா நெளியிறாரு. ஹஸ்பென்ட் சங்கடத்தைப் போக்க, அந்த புதுப் பொண்ணு என்னைக் கூப்பிட்டு மடியில் உட்காரவெச்சு, தலையெல்லாம் கோதிவிட்டு, 'கண்ணா... வானத்தில் இருந்து ஒரு தேவதை வருவாங்க. அவங்க குழந்தையைக் குடுத்துட்டுப் போயிருவாங்க'ன்னு என்னைச் சமாதானப்படுத்தப் பார்த்தாங்க. நான் டக்குனு மடியில் இருந்து குதிச்சு, 'அங்கிள் இந்த ஆன்ட்டிக்கு ஒண்ணுமே தெரியலை. எல்லாத்தையும் கத்துக்குடுங்க'ன்னு சொல்லிட்டு ஓடிட்டேன். இப்போ ஆன்ட்டியும் அசடு வழியுறாங்க. அங்கிள் எகிடுதகிடா ஷாக் ஆகிட்டார். இப்படித்தாங்க... உடான்ஸ்விடுறது, உட்டாலக்கடி அடிக்கிறதுலாம் விவரம் தெரியிறதுக்கு முன்னாடியே புரொஃபஷனலாப் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03

பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப, அறுந்த வாலு, ரெட்டை வாலுன்னு அத்தனை பட்டமும் நமக்குத்தான். பொங்கல், வடை, காபிலாம் திவ்யமா முடிச்சுட்டு, காலங்காத்தால ஸ்கூல் போனா, பிரேயர்னு சொல்லி வெயில்ல நிக்க வெச்சு வறுத்தெடுப்பாங்க. சும்மா கடவுள் வாழ்த்துப் பாடி, சல்யூட் அடிச்சுட்டு கலைஞ்சு ரலாம்னாகூடப் பரவாயில்லை. கிடைச்ச கேப்புல கெடா வெட்டுற மாதிரி, மைக் வாய்க்குக் கிடைச்சதும் ஹெச்.எம். ஒபாமாவுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா மாதிரி லொபலொபான்னு மொக்க போட ஆரம்பிச்சுடுவாரு.

ஒரு நாள், ரெண்டு நாள் பொறுத்துக்கலாம். ஒவ்வொரு நாளும் இப்படியேன்னா... நம்ம கிரிமினல் மைண்ட் வேலை செய்ய ஆரம்பிச்சது. ஒருநாள் பிரேயர்ல ஹெ.எம். பேசிட்டு இருக்கும் போது, புருஷனுக்கு ஆபத்து வரும்போது மயங்கி விழுற ஹீரோயின் மாதிரி, நானும் சேஃப்பா மடங்கி மயங்கி விழுந்தேன். சும்மா உல்லுல்லாயி ஆக்டிங். உடனே, பதறி, சிதறி, என்னைத் தூக்கிட்டுப் போய், ஃபேனுக்கு அடியில பெஞ்ச்ல படுக்கவெச்சாங்க. 10 நிமிஷம் ஜாலியாக் குட்டித் தூக்கம். எந்திரிச்சதும் ஜூஸ் கிளாஸ் நீட்டினாங்க. கேக்கவா வேணும்... அடிக்கடி பிரேயர்ல மயங்கி விழ ஆரம்பிச்சேன். நிறைய ஜூஸ் கிடைச்சது. நமக்கு எதிரியே நம்ம வாய்தானே. 'எப்பூடி நம்ம மாஸ்டர் ப்ளான்?'னு ஒரு நண்பன்கிட்டே உண்மையைச் சொன்னேன். அவன் நாலே நாலு பசங்ககிட்ட இந்த ரகசியம் உடைச்சுட்டான். முறைவெச்சு பிரேயர்ல தினமும் ரெண்டு ரெண்டு பேரா மயங்கி விழ ஆரம்பிச்சிட்டானுங்க. (நம்ம பசங்க என்னிக்கு நல்ல விஷயத்தை ஃபாலோ பண்ணி இருக் கானுங்க?) ஒருத்தன் பண்ணுனா வரலாறு... ஊரே பண்ணுனா தகராறுதானே!

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03

எங்க கிளாஸ் பசங்க மட்டும் ஏன் அடிக்கடி மயங்கி விழுறாங்கன்னு விசாரணை கமிஷன் போட்டு உண்மையைக் கண்டுபிடிச்சாங்க. அடிச்சாங்க பாருங்க அடி. அப்போதாங்க... நிஜமாவே மயங்கி விழுந்தேன்!

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03

ஸ்கூல் பையனா இருக்குறப்போ, காலேஜ் போற பசங்களைப் பார்த்தா, செம காண்டா இருக்கும். ஒரே ஒரு புக்கை விரல்ல சுத்திக்கிட்டே போறதைப் பார்த்தா, ராவாக் குடிச்சா மாதிரி எனக்கு வயிறெல்லாம் எரியும். நமக்கு மட்டும் ரோடு ரோலர் லோடு கணக்கா புத்தகப் பை. இவனுங்களுக்கு சிங்கிள் புக்கானு பொருமித் தவிப்பேன். அதுவும் இல்லாம, ஒவ்வொரு பையனும் தன்னோட நிறம், மணம், குணத்துக்கு ஏற்ப ஒரு ஃபிகரைக் கட்டம் கட்டி கூட்டினு போயிட்டே இருப்பானுங்க. அதை எல்லாம் வெறிச்சு வெறிச்சுப் பார்த்து, ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவோட திரிவோம். இதுக்காகவே நாம எப்படா காலேஜ் போவோம்னு காத்துட்டு இருந்தேன். ஆனா, அங்கதான் ஆண்டவனே எனக்குவெச்சான் ஆப்பு!

அப்பா, என்னை பாலிடெக்னிக்ல சேர்த்துவிட்டாரு. புஸ்தகத்தோட... ஸ்கேல், காம்பஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ், ரப்பர்லாம் எடுத்துட்டுப் போகணும். மெகா சீரியல் கணக்கா, நம்ம வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் பார்த்தீங்களா?

ரொம்ப வெறுத்துப்போய், ஒருநாள் நானும் ரெண்டு ஹாஸ்டல் ஃப்ரெண்ட்ஸும் கிளாஸ் கட் அடிச்சுட்டுக் கிளம்பிட்டோம். அதுல ஒருத்தன் ஏற்கெனவே மூணு பொண்ணுங்களை உஷார் பண்ணிவெச்சிருந்தான். அவங்களைக் கூட்டிட்டு (தள்ளிட்டு இல்லீங்க!) பீச்சுக்குப் போனோம். மொளகா பஜ்ஜி சாப்பிட்டு, கடலை வாங்கி, கடலை போட்டு, காத்தாடிவிட்டு, கட்டக்கடைசியா வந்த இடம் பீச் ஸ்டுடியோ. ஜோடி ஜோடியா சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டோம். 'அட்ரஸ் தாங்கப்பா... வூட்டுக்குப் போட்டோ வித் நெகட்டிவ் அனுப்புறேன்'னு போட்டோகிராஃபர் சொன்னார். 'நீ என் வூட்டுக்குப் போட்டோ அனுப்புனா... என்னை வீட்டைவிட்டே அனுப்பிடுவாங்க'ன்னு நான் நழுவிட்டேன். 'கூல் மச்சி... இதெல்லாம் ஒரு மேட்டரா?'ன்னு ஹாஸ்டல் பையன் ஒருத்தன் அட்ரஸ் எழுதிக் கொடுத்தான். வீட்டு அட்ரஸ் எழுதிக் கொடுத்திருப்பான்னு நினைச்சா, நாதாரிப் பய... ஹாஸ்டல் அட்ரஸ் எழுதிக் கொடுத்திருக்கான். ஹாஸ்டலுக்கு வர்ற லெட்டர் எல்லாமே நேரா பிரின்ஸிபல் டேபிளுக்குத்தான் போகும். அவர் பிரிச்சுப் பார்த்து, கையெழுத்துப் போட்டு, ஹாஸ்ட லுக்கு அனுப்பி, அதை ஹாஸ்டல் வார்டன் சரிபார்த்து, அவர் பங்குக்கு முத்திரை பதிச்சுதான், பசங்களுக்குத் தருவாரு. இது ஹாஸ்டல் விதி. அதுல சிக்கிச் சின்னாபின்னமானது எங்க விதி!

'என்னடா, ஸ்டுடியோவில் இருந்து லெட்டர் வந்திருக்கு?'ன்னு பிரிச்சுப் பார்த்த பிரின்ஸிபல், பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டார். 'ஏதோ மேட்டராம். சந்தானமும் ரெண்டு சகலபாடிகளும் அப்பா வைக் கூட்டிட்டு ஆஜர் ஆக ணும்'னு ஆள் அனுப்பி, தாக்கல் சொன்னாங்க. அப்பாவைக் கூட்டிட்டு பிரின்ஸிபல் ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே பதறிட்டேன். வீட்டுல பிள்ளையார் படத்தைப் பெரிய சைஸ் பிரின்ட் போட்டு மாட்டி இருப் பாங்கல்ல... அந்த சைஸ்ல பிரின்ஸிபல் எங்க போட்டோவை பிரின்ட் போட்டு, தலைக்கு மேல மாட்டிவெச்சிருக்கார். அப்பாவைப் பார்த்ததும், 'வாங்க சார், உங்க மருமகளைப் பார்த்தீங்களா?'ன்னு எரியுற நெருப்புல பெட்ரோல் குண்டைப் பிச்சு வீசுறாரு. அப்பா கண் சிவந்து, நின்ன மண் சிவந்து, லுக்விட்டார். அதுக்கு என்ன அர்த்தம்னா... 'மவனே வூட்டுக்கு வா... உரிச்சு உப்புக்கண்டம் போட்றேன்!'

கொத்து பரோட்டா ஆகி வெளியில் வந்தா, மத்த ரெண்டு பசங்களும் விவரம் தெரியாம சிரிச்சுட்டு இருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். இத்தனைக்கும் போட்டோவில் நான் பொண்ணுககிட்டே இருந்து ரெண்டு அடி தள்ளி நிக்குறேன்.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03

அதுக்கே இந்த பரேடு. ஒருத்தன் பொண்ணு மடியில படுத்திருக்கான். இன்னொருத்தன் தோள்ல கை போட்டு இருக்கான். 'சப்பை மேட்டருடா. நம்ம பெர்ஃபார்மன்ஸ் கிளாஸ் ரூம்ல நல்லா இருக்குன்னு பிரின்ஸி பாராட்டினாரு. அவர் ஒரு வெங்கடாசலபதி படத்தைத் தலைக்கு மேல மாட்டி இருக்கார். அவ்ளோ தெய்வகடாட்சம். ரூமுக்குள்ளே போகும்போது, ஒரு கும்பிடு போட்டுக்கோ'ன்னு சொல்லி அனுப்புனேன். பிரின்ஸி அந்தப் பசங்களைக் கைமா பண்ணிட்டாரு.

இப்பவும் அந்த பாலிடெக்னிக் பசங்க என்னைப் பார்த்தா, 'அண்ணே... உங்க

போட்டோவை காலேஜ் லேப்ல பார்த்தோம்'னு பதறவைக்குறானுங்க. அடப் பாவிகளா!

இன்னுமாடா அந்தக் கருமத்தைக் கழட்டி எறியாம வெச்சிருக்காங்க. அது சரி... நாம மகாத்மா காந்தி போட்டோவையே போலீஸ் ஸ்டேஷன்லதானே மாட்டிவெச்சு இருக்கோம்?

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 03
(இன்னும் கலாய்ப்பேன்)