Published:Updated:

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02

vandenda nanbenda santhonam
News
vandenda nanbenda santhonam ( Writer R.Sivakumar )

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02
கலாய்க்கிறார் சந்தானம்
படம்:கே.ராஜசேகரன்
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02

'ஹை...ஹை'ன்னு இப்போதாங்க ஹைதராபாத் ஃப்ளைட்ல இருந்து இறங்கி வர்றேன்.

யப்பா... ஊரா அது? குடிக்கக் கொஞ்சம் தண்ணி கேட்டா, அதுலயும் கொஞ்சம் மொளகாப் பொடி தூவிக் கொடுக்குறாங்க!

பொறந்த நாளுக்கு சாக்லேட்டுக்குப் பதிலா, டப்பா நிறைய குடை மொளகா நீட்டுவானுங்களா இருக்கும். 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்'னு பாடத் தோணுது நண்பர்களே!

ந்த வாரம் இந்த 'அவதார' புருஷன் அவதரிச்ச கதை பேசுவோமா?

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02

நான் அப்பா - அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவங்களுக்குக் கல்யாணமாகி 10 வருஷம் கழிச்சுப் பொறந்தேன். அது வரைக்கும் அவங்க ஏறாத கோயில் இல்லை, இறங்காத குளம் இல்லை. முதல்ல, 'என்னடா குழந்தை இல்லையே?'ன்னு வருத்தப்பட்டு இருப்பாங்க. அப்பால நான் பொறந்து பண்ணுன அழிச்சாட்டியம் பார்த்து, 'கடவுளுக்குக் கருணையே இல்லையா... இப்படி ஒரு அராத்தைக் கொடுத்துருச்சே!'ன்னு புலம்பி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

கூடப் பிறந்தவங்க யாருமே இல்லாததால, தனி ஆளா நின்னு கலாய்ச்சுக் கலாய்ச்சுக் கபடி விளையாடுவேனாம். அப்பா கார்பென்ட்டரா இருந்து, பில்டிங் கான்ட்ராக்டரா மாறினவர். அவர்கிட்டே 25 பசங்க வரைக்கும் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. இத்தனூண்டா இடுப்புக்குக் கீழே நின்னுட்டு, அத்தனை பேரையும் கலாய்ச்சுட்டு இருப்பேனாம். 'இதுக்கு வயசுக்குத் தகுந்த சகவாசம் இருக்கா?'ன்னு அப்ப இருந்தே அப்பா ஒரே புலம்பல்ஸ்தான்.

இந்த சொப்பு விளையாடுறது, கோலிக்குண்டு அடிக்கிறது, காத்தாடி விடுறதுல்லாம் நம்ம லைப்ரரி, ஹிஸ்டரி எதுலயும் கிடையாது பாஸ். ஒன் அண்ட் ஒன்லி விளையாட்டு... கலாய்ச்சுக் கலாய்ச்சு கவுன்ட்டர் கொடுக்குறதுதான். எதுனா சாமான் வாங்க என்னைக் கடைக்கு அனுப்பணும்னா, எங்க வீட்ல இருக்குறவங்களுக்கு கண்ணாமுழி பிதுங்கிப் போயிடும். 'பட்டாணி வாங்கிட்டு வாடா'ன்னு சொன்னா, 'பட்டாணி இல்லைன்னா?'ன்னு எதிர்க் கேள்வி கேட்பேன்.

'சரி, வேர்க்கடலை வாங்கிட்டு வா...' 'வேர்க்கடலையும் இல்லைன்னா?' 'அப்ப உப்புக்கடலை வாங்கியா...' 'உப்புக்கடலையும் இல்லைன்னா?' - இப்படி நான் சரமாரியா கேக்குற கொலவெறி கொஸ்டீன்ஸ்ல காண்டாகி, 'எதுனா துன்றதுக்கு வாங்கிட்டு வாடா'ன்னுவாங்க. 'கடையே இல்லைன்னா?'ன்னு நான் கடைசியாக் கேட்பேன் பாருங்க ஒரு கேள்வி... பொடனியில பொக்ரான் அணுகுண்டு கணக்கா நாலு பூசை போடுவாங்க. அதையும் சிரிச்சே சமாளிச்சுட்டு வெளியே வேற யாரையாவது கலாய்க்கக் கிளம்பிருவேன்!

விவரம் புரியற வரைக்கும் சின்ன வயசுல பொம்பளைப் பசங்க, ஆம்பளைப் பசங்கலாம் சேர்ந்துதானே சுச்சா, கக்காலாம் போவோம்! அப்போ ஒரு பொம்பளைப் புள்ளைக்கு அஞ்சு வயசாயிடுச்சு. அதனால அது எங்ககூட வர்றதை நிறுத்திடுச்சு! அதென்ன ஐ.நா சபை அவசர காலக் கூட்டமா... வரலைன்னா விட்டுட்டுப் போக வேண்டியதுதானே! ஆனா, என் சுழி விடலையே. ஒருநாள் ரோட்டுல அவங்க அம்மாகூட அந்தப் பொண்ணு நடந்து போய்ட்டு இருந்தது. நான் விடுவிடுன்னு பக்கத்துல போய், 'நீ இப்போ முன்ன மாதிரி இல்லை. இப்போலாம் ஏன் எங்ககூட நீ சுச்சா, கக்கா போக வர்றதில்லை'ன்னு கேட்டு, ஒரே கலவரம் பண்ணிட்டேன். அவங்க அம்மா எங்க வூட்டுல வந்து மானாவாரியாத் திட்டிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் அந்தப் பொண்ணு வளந்து, கல்யாணம் முடிச்சு, அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்க வீட்டுக்கு வந்தப்போ, 'இந்தப் பொண்ணைத்தான் நீ டாய்லெட்டுக்குக் கூப்பிட்டு டபாய்ச்சே'னு அம்மா சிரிக்கிறாங்க. எனக்கு உள்ளுக்குள்ளே கிடுகிடுங்குது. 'ஏம்மா, உனக்கு எந்த நேரத்துல எதை ஞாபகப்படுத்துறதுன்னு வெவஸ்தையே இல்லையா?'ன்னு அம்மாவைத் திட்டி, ஒரு மாதிரி சமாளிச்சேன். ஆனா, அப்போ 'ஏன்டா சந்தானம்... பை பர்த் நீ நல்லவன்தானேடா! அப்புறம் ஏன் அகராதியாப் போயிட்டே?'னு என் மைண்ட் வாய்ஸ் கேட்டது. அதுக்கு இன்னும் பதில் கிடைக்கலை!

எங்க வீட்டுலதான் பொம்பளைப் பசங்களே கிடையாதுல்ல.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02

அதனால அம்மா எப்பவும் எனக்கு மிடி, ஃப்ராக்னு மாட்டிவிட்டு போட்டோ எடுக்கிறது, கண் மைவெச்சு ரிப்பன் கட்டிவிடுறது, மூஞ்சி முழுக்க எண்ணெய் வழிஞ்சு இறங்க தலை வாரிவிடுறதுன்னு அதகளப்படுத்துவாங்க. ஒரு தடவை அப்படி பொம்பளைப் புள்ளை டிரெஸ் மாட்டிவுட்டு, தலை வாரி, ரிப்பன்வெச்சு போட்டோ எடுக்க ஸ்டுடியோ கூட்டிட்டுப் போனாங்க. பல்லாவரத்துல ஒரு பெரிய காம்ப்ளெக்ஸ்ல இருந்தது ஸ்டுடியோ. அங்கே போனதும் எனக்குத் திடீர்னு ஒன் பாத்ரூம் வந்திருச்சு. 'அம்மா மூச்சா'ங்கிறேன். 'இதுக்கு எப்பவுமே இப்படித்தான்... நேரங்காலம் தெரியாம வரும்'னு அம்மா திட்ட, 'பச்சப் புள்ளையை ஏம்மா திட்டுறே?'னு பக்கத்துல இருந்த ஒரு பாட்டி, எனக்கு சப்போர்ட்டா வந்தாங்க. அவங்களே என் கையப் புடிச்சு பாத்ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அது லேடீஸ் பாத்ரூம். அங்கே நான் சுச்சா போன ஸ்டைலைப் பார்த்துட்டு, உள்ளே இருந்த லேடீஸ்லாம் கடுப்பாகிட்டாங்க. 'ஏய், நீ ஆம்பளைப் பையனா?'ன்னு அவங்க கேட்க, 'என் பேரு சந்தானம். அப்படின்னா ஆம்பளைப் பையன்தானே. இந்த ஆயாதான் என்னைக் கூட்டாந்துச்சு'னு ஆயாவை மாட்டிவிட்டுட்டேன். அப்புறம் ஆயா... பாயா ஆனது தனிக் கதை!

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02

இப்படித்தாங்க, தமிழக வாழ் பெருமக்களே! நம்ம வாழ்க்கை முழுக்கப் பல கிக்கிலி பிக்கிலி சிரிப்பு அத்தியாயங்கள் ஜஸ்ட் லைக் தட் பாஸ் ஆகும். சினிமாவுக்குன்னு பல காமெடி ஸ்க்ரிப்ட்கள் நாங்க வொர்க்-அவுட் பண்ணுவோம். சமயங்கள்ல நிஜ வாழ்க்கை சம்பவங்களையே தடாலடி கோட்டிங் கொடுத்து, காமெடி டிராக் ஓட்டிருவோம்!

வாண்டுப் பையனா இருந்தப்போ, அப்பா சில சொந்தக்காரப் பசங்களோட என்னை ஐஸ்க்ரீம் பார்லருக்குக் கூட்டிட்டுப் போனாரு. ஐஸ்க்ரீம் வாங்கிட்டு, பர்ஸ் எடுக்கலாம்னு பாக்கெட்டுக்குள்ள கைவிட்டா, பர்ஸ் இல்லை. வீட்லயே மறந்துவெச்சிட்டாரு. 'சந்தானம், வீட்டுல போய் பர்ஸ் எடுத்துட்டு வா'ன்னாரு அப்பா. 'எடுத்துட்டு வரேன். ஆனா, நான் வர்ற வரைக்கும் யாரும் ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது'ன்னேன். 'சரிடா செல்லம்... போயிட்டு வந்துரு'ன்னு அனுப்புனாரு அப்பா.

அஞ்சு நிமிஷம்... பத்து நிமிஷம்... ஆளைக் காணோம். ஐஸ்க்ரீம் உருக ஆரம்பிச்சுட்டுது. 'சரி, சந்தானம் காசு எடுத்துட்டு வரட்டும். நீங்க ஐஸ்க்ரீமைச் சாப்பிடுங்க'ன்னு எங்க அப்பா சொல்றாரு. அந்தப் பசங்க ஆசை ஆசையா ஐஸ்க்ரீம்ல வாய் வெக்குறாங்க... நான் தடால்னு அவங்க முன்னாடி குதிக்கிறேன். 'பார்த்தீங்களா... என்னைவிட்டுட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட மாட்டேன்னு சொன்னீங்க. இப்போ சாப்பிடுறீங்க! போங்கு போங்கு. அதான் நான் பர்ஸ் எடுக்கப் போகாம, அங்கே ஒளிஞ்சு நின்னு பார்த்துட்டே இருந்தேன்!'னு அழுகுறேன். அப்போ வந்த கோபத்துக்கு, எங்க அப்பா என்னை மாறு கால் மாறு கை வாங்காம இருந்ததே பெரிய விஷயம். இன்னமும் எங்க வீட்டுல இதைச் சொல்லிச் சொல்லி, என்னைக் கலாய்ப்பாங்க!

இந்த காமெடியைத்தான் 'காளை' படத்துல சேர்த்திருந்தோம். நாலு ஃப்ரெண்ட்ஸ் சரக்கு அடிக்க உக்காருவோம். 'லொள்ளு சபா' ஈஸ்டரை மினரல் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வர அனுப்புவோம். 'நான் வர்றதுக்குள்ள யாரும் சரக்கு பாட்டிலை ஓப்பன் பண்ணக் கூடாது'ன்னு சத்தியம் வாங்கிட்டுப் போவான். முழுசா ரெண்டு மணி நேரம் ஆகிரும். இவ்வளவு நேரமாகியும் ஆளைக் காணோமேன்னு ராவா ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சரக்கு பாட்டில் எடுத்தா, 'பார்த்தீங்களா... பாட்டில் மூடிகூடத் திறக்க மாட்டேன்னு சொல்லிட்டு, இப்போ ராவாவே அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இப்படிலாம் பண்ணுவீங்கன்னுதான் நான் வீட்டு வாசல்லயே ஒளிஞ்சிட்டு இருக்கேன்'னு சொல்வான்.

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02

இப்படித்தாங்க, நேரம் காலம் பார்க்காம எனி டைம் அலும்பு பண்ணிட்டே திரிவோம். இப்படித்தான் அன்னிக்கு பக்கத்து வீட்டுல இருந்து புதுசா கல்யாணம் ஆன ஜோடி எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. மாப்பிள்ளை சார் ரொம்பக் கூச்ச சுபாவம்போல. மண்புழு கணக்கா நெளிஞ்சுட்டே இருந்தாரு. நான் தம்மாத்துண்டு பையன். அப்பா, 'நீ போய் அவர்கிட்ட கொஞ்சம் கலகலன்னு பேசுடா'ன்னு சொன்னாரு. நான் போய் அவர்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்... பார்ட்டி மெரண்டு மெர்சலாயிட்டாரு. அப்படி என்ன கேட்டேன்னு கேக்குறீங்களா? இப்போதைக்கு அப்பீட்டு... அடுத்த வாரம் அந்தக் கதை ரிப்பீட்டு!

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02
வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 02
(இன்னும் கலாய்ப்பேன்)