மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind... - 02

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind... - 02

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02
வாலி
ஓவியம்:மணி
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02

நியாயமான கோபம்!

'அண்ணா! நேத்துதான் நெனச்சேன்; அடடா! துர்வாசருக்குப் பத்திரிகை

கொடுக்கவில்லையே என்று!'

இப்படிச் சொல்லியவாறு - ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு; பழம்; மஞ்சள்; குங்கு மம்; கல்யாணப் பத்திரிகை - இவற்றோடு என் வீட்டிற்கு வந்தார் அந்த நடிகர்.

'நானா துர்வாசர்?' என்று கேட்டேன். 'ஆமாண்ணா! ரொம்பக் கோபம் உங்களுக்கு; ரொம்ப ரொம்பக் கோபம்; அடிக்கடி வரது!' என்று செல்லமாக என்னைக் கடிந்துகொண்டார் அவர்!

தற்கு இரண்டு வாரம் முன்புதான் -இன்னொரு நடிகர் என் வீட்டிற்கு வந்தார்.

'அண்ணா! நான் நடிக்கிற படத்துல- நானும் கதாநாயகியும் கப்பல்லே - மாறி மாறி வசன கவிதையிலே, எங்க எண்ணங்களைப் பரிமாறிக்கிறோம்; நான் - அந்தக் கவிதையை எழுதி - ரிக்கார்ட் பண்ணியிருக்கேன்; நீங்க கேக்கணும்! திடீர்னு உங்களுக்குக் கோபம் வரும்; கவிதை நன்னால்லேன்னா, திட்டுவேள்னு தெரியும். இருந்தாலும் நீங்க என் குரு! உங்க ஆசீர்வாதம் தேவை!' என்று - அவரும் கதாநாயகியும் அவரவர் குரலிலேயே - SOUND OF MUSIC படம் வந்ததே - அதுபோல் ஒரு தாளகதியில் பாடியிருக்கும் கவிதையை, எனக்குப் போட்டுக் காண்பித்தார்.

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02

நான் - ஒரு தடவைக்கு இரு தடவை, அதைக் கேட்டேன்; அதில் பாசுரங்கள் பற்றியெல்லாம் வருகிறது; நல்ல ஆழமான கவிதை! 'ப்ரமாதம்; பிச்சு உதறிப்புட்டே...' என்று பாராட்டினேன்.

'அப்பா! உங்க கோபத்திலிருந்து தப்பிச்சேன்!' என்று பெருமூச்சுவிட்டார், அந்த நடிகர்!

'என்ன இது! எல்லாரும் என்னைக் கோபக் காரன் என்கிறார்களே!' என்று யோசித்தேன். உடனே கோபம் வந்தது - எனக்கு என் மீது!

'ஆறுவது சினம்!'

'ரௌத்திரம் பழகு!'

முன்னது - அவ்வை சொன்னது;

பின்னது - ஆண் அவ்வை சொன்னது!

எதைத் தழுவ?

எதைத் தவிர்க்க?

HYPER TENSION; PEPTIC ULCER; NEUROTIC DISORDER; இத்யாதி இத்யாதி...

சினத்தால் வரும் சீக்குகள் எனச் செப்புகிறார். என் DAUGHTER LIKE DOCTOR திருமதி ஹேமலதா செந்தில்குமார்!

1966. என் மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன். பிளட் பேங்க்கில் இருந்து, பிளட் வர வேண்டும். கல்யாணி ஆஸ்பத்திரி யில் கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்.

'அன்னமிட்ட கை' படத் தயாரிப்பாளரில் ஒருவரான சிவசாமி அய்யர் போன் செய்கிறார்.

'வாலி சார்! கே.வி.மகாதேவன்; கிருஷ்ணன் நாயர் எல்லாரும் வெயிட்டிங்; ராமாவரத்தில்இருந்து சின்னவரும் புறப்பட்டுவிட்டார். பாட்டு நாளைக்கு ரிக்கார்டிங்; மறுநாளே தேவிகுளம் பீர்மேடு புறப்படுகிறோம்... நீங்க உடனே வந்தாத் தேவலே!'

'என்னால வர முடியாது சார்! மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன் நடக்கப்போறது; நான் டென்ஷன்ல இருக்கேன்!' என்றேன்.

உடனே சிவசாமி அய்யர், 'ஆபரேஷன் நீரா பண்ணப்போறீர்?' என்று சற்று நக்கலாகக் கேட்டதும், நான் கோபத்தின் உச்சிக்குப் போனேன்.

'போனைக் கீழே வையுடா; நான் கறி திங்கற பாப்பான்... எங்கிட்ட வெச்சுக்காதே... உன் பாட்டும் வேணாம், ஒரு ம...ம் வேணாம்!' என்று கத்தினேன்!

'சின்னவர் வந்துட்டார்!' என்றார் அவர்.

'நான் சொன்னதை வரிவிடாம - அவர்கிட்ட சொல்லுய்யா! நான், யாரையும் நம்பி - சென்னைக்கு வல்லே!' என்று சீறினேன்.

றுநாள் என் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போன் செய்து -

'உங்க கோபம் நியாயமானது; அவர் அப்படிப் பேசியது தப்புதான்... ஆனா, எனக்கு உங்க பாட்டு வேணும்... அவசரமில்லே!' என்று சொல்லிவிட்டு -

மாலை கல்யாணி நர்சிங் ஹோமுக்கு வந்து - என் மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு - குழந்தை கையில் ஒரு பவுன் காசைத் திணித்துவிட்டுப் போனார்!

லைஞர் கதை வசனம்; இராமநாராயணன் படம்; ஏவி.எம்மில் பூஜை. கலைஞர் தலைமை யில் எல்லோரும் பேசினோம்.

'இராமநாராயணன் நூறு படம் எடுத்தவர்; அதில் எழுபது படம் நான் பாட்டு எழுதிஇருக்கிறேன். எல்லாப் படத்திலும் பாம்பு பாடும்; நான் மொத்த நாகத்துக்கும் எழுதிவிட்டேன்; இனி துத்தநாகம்தான் பாக்கி!' என்று பேசினேன்.

அடுத்துப் பேச வந்தவர் - அவரும் பாட்டு எழுதுபவர்தான் - 'நான் துத்தநாகத்துக்குஎல்லாம் பாட்டு எழுத மாட்டேன்!' என்று எகத்தாளமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்!

ரு வாரம் கழித்து அந்தப் படத்திற்குப் பாட்டெழுத என் வீட்டுக்கு வந்தார்

திரு. இராமநாராயணன்.

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02

'என்னைப் பற்றி மேடையில், எகத்தாளமாகப் பேசப்பட்டபோது - நீங்களோ கலைஞரோ அதைக் கண்டிக்கவில்லை; ஆகவே, நான் இந்தப் படத்திற்குப் பாட்டெழுத மாட்டேன்!' என்று மறுத்துவிட்டேன்.

அன்று இரவு, கலைஞர் என்னோடு தொலைபேசியில் பேசினார்.

'உங்கள் கோபம் நியாயமானது; அந்த ஆள் அப்படிப் பேசியது தப்புதான்; ஆனா, எனக்கு உங்க பாட்டு வேணும்... நீங்க எழுதணும்!' என்றார். எழுதினேன்.

எம்.ஜி.ஆர். சொன்னதுபோலவே, கலைஞரும் சொன்னார்; சான்றோர் சான்றோரே!

து சரி; ஆரம்பத்தில் நான் எழுதியிருக்கும் அந்த நடிகர்கள் யாரென்று சொல்ல வேண்டாமா?

கல்யாணப் பத்திரிகையோடு வந்தவர்; திரு.ரஜினிகாந்த்!

கவிதையோடு வந்தவர்; திரு.கமல்ஹாசன்!

கவிதை - 'மன்மதன் அம்பு' படத்தில் வருகிறது!

ஒன்று புரிந்துகொண்டேன். என் கோபத்தைச் சுட்டிக்காட்டி, என்னை ஆற்றுப்படுத்திய மாண்புமிகு மனிதர்கள் -

திரு.ரஜினி; திரு.கமல்!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 02
- சுழலும்...