ஸ்பெஷல் -1
Published:Updated:

சமாதானப் பிரியர்!

சமாதானப் பிரியர்!


விகடன் பொக்கிஷம்
சமாதானப் பிரியர்!
சமாதானப் பிரியர்!
சமாதானப் பிரியர்!
தொகுப்பு:ரவிபிரகாஷ்
சமாதானப் பிரியர்!

ரு தடவை, கலைவாணர் தனியாக திடீரென்று நள்ளிரவு 2 மணிக்கு பங்களூருக்குப்

புறப்பட்டார். சைதாப்பேட்டையைத் தாண்டி பரங்கிமலை வந்ததும், ரோடு ஓரம் ஒரு கோயிலில் தெருக் கூத்து நடந்துகொண்டிருந்தது. வண்டியை நிறுத்தச்சொல்லி, அங்கேயே போய் உட்கார்ந்துவிட் டார். காலை 5 மணிக்குக் கூத்து முடிந்ததும், அந்தக் கோயில் நிர் வாகிகள் இவருக்கு மாலை போட்டு, மரியாதைகள் செய்து, பிரசாதம் கொடுத்து, கோயில் திருப்பணிக்காக நன்கொடை கேட்டனர். பங்களூர் செலவுக்காக வைத்திருந்த 500 ரூபாயையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு, பங்களூர் போகாமல் வீடு திரும்பி விட்டார் என்.எஸ்.கே.

சிவாஜி நடித்த 'அம்பிகாபதி' படம் நடந்துகொண்டு இருந்த போது, அந்தப் படத்தின் பாடல் ஆசிரியர் கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. பத்திரிகைகளில் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டனர். கலையுலகப் பெரு மையும் கலைஞர்களிடையே ஒத்துழைப்பும் கெட்டுவிடக் கூடாது என்பதில் கலைவாண ருக்கு அதிக கவலை உண்டு.

சமாதானப் பிரியர்!

இருவரையும் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி, அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, தின இதழ்களில், இருவரின் கூட்டு அறிக்கையைப் பெரிய அளவில் விளம்பரமாக வெளிவரச் செய்தார். இந்த விளம்பரச் செலவுகூட கலைவாணர் கைப்பொறுப்பிலாகும்.

நாட்டை விட்டு மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான கொள்கை உடையவராயிருந்தார் கலைவாணர். இதைப் பகிரங்கமாக உலகமறிய, 'நல்ல தம்பி' படத்தில் வரும் 'இந்திர சபா' தெருக் கூத்தில் சிறப்பாகப் பாடி, நடித்து தெளிவுபடக் காட்டியிருக்கிறார். அவரை விடவும் யாரும் மதுவின் தீமைகளையும், அது ஒழிக்கப்பட்டால் ஏற்படக் கூடிய நன்மைகளையும், பாமரர் முதல் பண்டிதர் வரை சகலரும் உணரும்வண்ணம் விளக்கிக் காட்டியிருக்க முடியாது.

'தாய்க்குப் பின் தாரம்' படக் கதை, தயாரிப்பு போன்ற விஷயங் களில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக் கும் பெரும் கருத்து வேற்றுமை ஏற்பட, படப்பிடிப்பு தொடர்ந்து வளராமல் நின்றுவிட்டது.

அந்த சமயத்தில் தேவர், நஷ்டங்களைத் தாங்கக்கூடிய நிலையில் இல்லை. கொள்கை மற்றும் சில விஷயங்களில் விட்டுக் கொடுக் காத மனப்பான்மை கொண்டவர் எம்.ஜி.ஆர். எவர் சொன்னாலும் தன் நிலையிலிருந்து இறங்கமாட் டார். தேவரின் சிரமமான நிலை யைக் கண்டு, துணிந்து எம்.ஜி.ஆரு டன் பேசி, சமாதானப்படுத்திப் படப்பிடிப்புக்கு நாட்கள் வாங்கிக் கொடுத்தார் கலைவாணர்.

- 'கலைவாணர் வாழ்வில்' என்ற நூலிலிருந்து...

சமாதானப் பிரியர்!
சமாதானப் பிரியர்!