ஸ்பெஷல் -1
Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

சென்ற ஆண்டு இறுதியில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவருக்கு

அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த ஆண்டின் முதல் இதழின் அட் டைப் படத்தில் எம்.ஜி.ஆரின் படத்தை வெளியிட்டு, உள்ளே தலையங்கம், கார்ட்டூன்கள் மற்றும் பல கட்டுரைகளை வெளி யிட்டுள்ளது ஆனந்த விகடன்.

மந்திர மூன்றெழுத்து!

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத் துக்களில் கட்டுண்ட ரசிகர்கள், பல லட்சக்கணக்கானவர்கள். கடந்த சில ஆண்டுகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த புதிய படங்கள் எதுவும் வராமல் போனாலும், அவர் நடித்த பழைய படங்கள் இன்றும் தமிழக மெங்கும் உள்ள தியேட்டர்களில் நாள்தோறும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. பெரிய விளம்பரங்க ளுடன் வரும் இன்றைய சில புதிய படங்கள், அவருடைய பழைய படங்கள் பெறும் வசூலில் பாதி யைக்கூடப் பெறமுடியாமல் தடு மாறுகின்றன.

காலப்பெட்டகம்

1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி, ஸ்ரீலங்காவில் உள்ள கண்டி நகரில் பிறந்தவர் எம்.ஜி.ராமச் சந்திரன். தந்தை மருதூர் கோபால மேனன்- ஒரு நீதிபதி. தாயார் சத்ய பாமா. நல்ல வசதியுடன் வாழ்ந்த அந்தக் குடும்பம், கோபாலமேனனின் மறைவுக்குப் பிறகு வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டது. வேறு வழியின்றி பிழைப்பைத் தேடி தன் அன்னை, அண்ணன் எம்.ஜி.சக்ர பாணியுடன் தமிழ்நாட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். வேலை தேடி அலைந்த அவரை, கலைத்தாய் அழைத்துக் கொண்டாள். தன் அன்பு அன்னை யைக் காப்பாற்ற, தனது ஏழாம் வயதில் நடிகர் எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார் நடத்தி வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார் எம்.ஜி.ஆர். அப்போது அவருக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர், பழம் பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம். ஆரம்பத்தில் சினிமா வில் நடிக்க எம்.ஜி.ராமச்சந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வேதனை ததும்பும் அனுபவங்களாக இருந்தன. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் அவர் பெற்ற துயர அனுபவங்கள், எதிர்கால வெற்றிகளை அடையும் மனப்பக்கு வத்தை அவருக்குத் தந்தன.

காலப்பெட்டகம்

'சதிலீலாவதி' படம் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் அறிமுக மானார். எம்.கே.ராதா, கலைவாணர் என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா போன்ற பல பிரபல நடிகர்களுக்கும் 'சதிலீலாவதி'தான் முதல் படம்! இதைத் தொடர்ந்து சிறு வேடங்க ளையே எம்.ஜி.ஆர். ஏற்க நேர்ந்தது. முருகனாக, அர்ஜுனனாக, சிவனாக புராணப்படங்களில் நடித்த அவர், 'அசோக்குமார்' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் நண்பராக வந்து சிறப்பாக நடித்திருந்தார்.

பின்பு, பி.யூ.சின்னப்பா நடித்த 'ரத்னகுமார்' படத்தில் சில காட்சிகளில் வில்லனாக வந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்தார். இதற் கிடையில் எம்.ஜி.ராமச்சந்திரன் பலவித நடிப்புப் பயிற்சிகளைக் கற்றுத் தேர்ந்தார். மற்போர், வாள் வீச்சு, சிலம்பாட்டம் அனைத்தையும் பயின்றார்.

எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயக னாக ஒப்பந்தமான முதல் படம் 'சாயா'. ஆனால், இந்தப் படம் வெளிவரவில்லை. ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ஷனில், கலைஞரின் வசனத் தோடு, ஜூபிடர் நிறுவனத்தாரின் 'ராஜகுமாரி' படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வந்த முதல் வெற்றிப்படம்! ஆயினும், ரசிகர்கள் நடுவில் எம்.ஜி.ராமச்சந்திரனை நன்கு அறிமுகப்படுத்திய படம், கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய, மாடர்ன் தியேட்டர்ஸின் 'மந்திரகுமாரி'தான்.

காலப்பெட்டகம்

'மருதநாட்டு இளவரசி', எம்.ஜி. ஆரின் திரையுலக வாழ்வில் மட்டு மல்ல, இல்லற வாழ்க்கையிலும் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் தன்னுடன் நாயகியாக நடித்த வி.என்.ஜானகியை அவர் தன் இல்லத் துணைவியாக ஆக்கிக்கொண்டார்.

பின்னர் 'ஜெனோவா', 'மோகினி', 'மர்மயோகி', 'சர்வாதிகாரி' \ இப்படிப் பல படங்கள் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தன. சண்டைக் காட்சிகளில் அவர் காட்டிய அசுர வேகம் பலரை மலைக்க வைத்தது. அவர் நடித்த படங்களைக் காண ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். இவ்வேளையில் தான் பக்ஷிராஜாவின் 'மலைக்கள்ளன்' வந்தான்; ரசிகர்களின் மனத்தை வென்றான்.

'மலைக்கள்ள'னில் பல வேடங்களைத் தாங்கி எம்.ஜி.ஆர். சிறப்பாகவே நடித்திருந்தார். 1954-ல் சிறந்த தமிழ்ப்படம் என்பதற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற படம் அது.

தமிழில் தயாரான முதல் வண்ணப் படம், எம்.ஜி.ஆரின் 'அலி பாபாவும் 40 திருடர்களும்'.

பழங்கதைகளில் ஒன்றான 'குலே பகாவலி' கதையை ராமண்ணா படமாக இயக்க, எம்.ஜி.ராமச்சந்திரன் நடிப்பில் அது வெளிவந்தபோது வசூல் சாதனை படைத்தது. திரை யரங்குகளில் வெற்றி உலா வந்தது. இதன்பின், 30 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 100 நாள் வெற்றி கண்டான் 'மதுரை வீரன்'.

தேவரின் முதல் தயாரிப்பான 'தாய்க்குப்பின் தார'த்தில் ரசிகர்களை உருக வைக்கும் மாறுபட்ட நடிப்பைத் தந்தார் எம்.ஜி.ஆர். 'எந்தத் திசையிலும், எந்தக் கோணத்திலும் தமிழ்ப்பட வசூல் நாயகன் எம்.ஜி. ஆர்தான் என்று ஒருமுகமாகப் பேசப்பட்ட வேளை அது. அந்தக் காலகட்டத்தில்தான் எம்.ஜி.ராமச்சந்தி ரனின் லட்சியத் திரையீடாக 'நாடோடி மன்னன்' வந்தது. தமிழ்த் திரைப்படவுலகில் எம்.ஜி.ராமச்சந்தி ரனின் புகழுக்கு முத்திரை பதித்தது. 'நாடோடி மன்னனை' இயக்கியது டன், இரட்டை வேடங்களில் நடித்தும் பெரும் சாதனையைச் செய்தார் எம்.ஜி.ஆர். இரண்டு லட்சம் மக்கள் கூடியிருக்க, மதுரையில் நடைபெற்ற வெற்றிவிழாவில், எம்.ஜி.ராமச்சந்திர னைப் பாராட்டி, தங்க வாள் பரிசாக அளிக்கப்பட்டது.

'திருடாதே', 'தாய் சொல்லைத் தட்டாதே' 'தெய்வத்தாய்', 'பணத் தோட்டம்'... இப்படித் தொடர்ந்து வந்த பல படங்கள் இவரை சமூகப் படங்களின் வெற்றி நாயகனாக மாற்றின.

காலப்பெட்டகம்

இவற்றைத் தொடர்ந்து வெளி வந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படம், எம்.ஜி.ஆர்.தான் வசூல் மன்னன் என்பதைச் சந்தேகமற நிரூபித்தது. கோழை, வீரன் ஆகிய இரட்டை வேடங்களில் 'எங்க வீட் டுப் பிள்ளை'யில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகராக எம்.ஜி.ஆர்., ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். அதே ஆண்டில் பி.ஆர்.பந்துலுவின் அற்புதப் படைப்பாக வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்', மீண்டும் எம்.ஜி.ஆரைச் சாகசப்பட வெற்றி நாயகனாக மக்கள் முன் நிறுத்தியது.

எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமான 'சதி லீலாவதி' படத்துக்குக் கதை எழுதிய எஸ்.எஸ்.வாசன், ஜெமினி நிறுவனம் சார்பில் தயா ரித்து அளித்த வண்ணப்படம் 'ஒளி விளக்கு'. இது எம்.ஜி.ஆரின் 100-வது படமாக அமைந்தது.

லட்சக்கணக்கன பொருட் செலவு, நேரம், உழைப்பைச் செலவழித்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய பிரமாண்டமான சித்திரம் 'அடிமைப் பெண்'. அவர் தயாரித்து அளித்த 'உலகம் சுற்றும் வாலிபன்', தமிழ்த் திரையுலகின் மற்றொரு சாதனையாக இன்றும் கருதப்படுகிறது. 'ரிக்ஷாக்காரன்' படம் 'பாரத்' விருதைப் பெற்றுத் தந்தது.

தனக்கு வரும் சோதனைகளை வென்று காட்டும் திறன் படைத்தவர் எம்.ஜி.ஆர். ஒரு மேடை நாடகத் தின்போது நிகழ்ந்த விபத்தில், இவருக்குக் கால் முறிவு எற்பட்டது. 'இனி இவர் எழுந்து நடமாட முடி யாது' என்று அப்போது பொதுவாகப் பேசப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர். பழைய தெம்புடன் எழுந்து, அசுர வேகத்தில் இயங்க ஆரம்பித்தார்.

1967-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, அவருக்குத் தெளிவாகப் பேச முடியாத நிலை உண்டாகியது. 'இவர் சகாப்தம் முடிந்தது' என்று பலர் எண்ணினர். ஆனால், அவர்களின் எண்ணத்தைத் தவறாக்கி, ரசிகர்களின் ஆதரவுடன் அதன் பிறகும் புதுப்புது சாதனைக ளைப் புரிந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரிடம் உள்ள தனிச்சிறப்பு, அவர் ஏற்படுத்திய வசூல் சாதனைகளை அவரே வென்று காட்டியதுதான்.

பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்தார்.

சீர்காழி தந்த பெட்டிகள்!

காலப்பெட்டகம்

க்திப் பாடல்களைப் பதிவு செய்வதற்கு முன் ரிகர்சல் பார்த்துக் கொள்ள வசதியாக அண்மையில் வீட்டிலேயே ஒரு ஹாலை ஏற்பாடு செய்தார் சீர்காழி கோவிந்தராஜன். அந்த ஹாலைப் பக்காவாக ரெடி பண்ண வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அந்த அறையில் ஒரு பழைய ட்ரங்க் பெட்டியும், சுருதிப் பெட்டியும் இருந்தன. அந்த இரண்டையும் எடுத்த சீர்காழி, தன் மகன் சிவ சிதம்பரத்தை அழைத்தார். "இதோ பாருப்பா! நான் மாடர்ன் தியேட்டர் ஸில், கலைத்துறையில் அடியெடுத்து வைக்கும்போது என் அப்பா வாங் கிக் கொடுத்தவை இவை. இவற்றை நீ பத்திரமாகக் கொண்டு போய்ப் பூஜை அறையில் வை. அது மட்டு மல்ல, தவறாமல் ஒவ்வொரு நாளும் நீ இவற்றைப் பார்க்கவேண்டும். அப்போதுதான் என் உழைப்பின் உயர்வு உனக்குத் தெரியும்" என்று ட்ரங்க் பெட்டியையும், சுருதிப் பெட்டியையும் மகனிடம் ஒப்ப டைத்தார். இந்த நிகழ்ச்சி நடந்தது, சீர்காழி இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்.

திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத்தைக் காணவேண்டும் (முதல்முறையாக) என்று கடந்த டிசம்பரில் குடும்பத்துடன் திடீ ரென்று கிளம்பிவிட்டார் சீர்காழி. தீபம் சரியாகத் தெரியவில்லை என்று சின்ன மனக்குறை. எப்படி யாவது பார்த்தே தீருவது என்று ஒரு வேகத்துடன், முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் வீட்டுக் குச் சென்றார். "தீபம் தரிசிக்கணும். மாடியிலிருந்து தரிசிக்கிறேனே!" என்று சொல்லிவிட்டு, மாடிக்குச் சென்றார். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தது தான் தாமதம்... ஜகஜ்ஜோதியான தீப தரிசனம் கிடைத்தது!

இலங்கையில் தமிழர்கள் கொல் லப்படுவதைப் பற்றிய செய்திக ளைக் கேட்கும்போதெல்லாம், "முருகா! இதென்ன சோதனை? உன் புகழைப் போற்றி நான் பாடும் பாடல்களைக் கேட்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தினமும் மடிவதை என்னால் தாங்க முடியவில்லையே!" என்று உள்ளம் உருகி, நல்லூர் கந்தசாமி கோயில் முருகனை நினைத்து வேண்டுவாராம் சீர்காழி.

மார்ச் 23-ம் தேதி புதன்கிழமை, மாலை 6 மணிக்கு சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மிருதங்க வித்துவான் பாஸ் கரராவைப் பார்த்துவிட்டுக் கிளம்பிய சீர்காழி, அங்கிருந்து நேராக டாக்டர் நண்பர் ஒருவர் வீட்டில் பேசிவிட்டு, இரவு வீடு திரும்பியிருக்கிறார். இரவு 11 மணிக்கு, "அப்பா மூச்சு விட முடியாம திணறுறாங்க" என்று அம்மா அழைத்தவுடன், பதறிப் பாய்ந்தோடி வந்த சிதம்பரம், அவசர சிகிச்சை அளித்திருக்கிறார். அந்தச் சமயத்திலும் கந்தர் அலங்காரத்தை யும், சஷ்டி கவசத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார் சீர்காழி. மெதுவாக அவரை காரில் ஏற்றி, காரிலேயே ஹார்ட் மசாஜ் செய்து, தேவகி மருத் துவமனைக்குச் சென்றும் பலனில் லாமல் போய்விட்டது. நவசக்தி விநாயகர் கோயிலருகே, "உலகம் வாழ்க!" என்று சொல்லியபடியே சாய்ந்துவிட்டார் சீர்காழி.

- சுந்தரன்

ஆரம்ப காலத்திலிருந்தே சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் ஆனந்த விகடனின் சேவை, விசுவரூபம் எடுத்துப் பரவலாக வெளிப்படத் தொடங்கியது, குழந்தை மணிகண்டனின் இதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி திரட்டித் தந்தபோது தான். 'மணிகண்டனுக்கு... கெடு - ஒரு மாதம்!' என்ற தலைப்பில் 13.11.88 இதழில், ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. பிறக்கும் போதே இதயக் கோளாறுடன் இருந்த மணிகண்டன் பற்றிய அந்தக் கட்டுரை, விகடன் வாசகர்களைக் கலங்கடித்துவிட்டது.தாயுள்ளத்தோடு பதறித் துடித்து, அந்தக் குழந்தை நல்லபடியாகப் பிழைக்கவேண்டுமே எனப் பிரார்த்தித்துக்கொண்டு, தொலைபேசியிலும், கடிதம் மூலமும் கவலையோடு விசாரித்து, ரத்தம் கொடுத்து உதவி, மற்றும் சிகிச்சைக்குத் தேவையான தொகைக்கு மேலேயே நிதிகளை தாராளமாக அள்ளி வழங்கிய அத்தனை விகடன் வாசகர்களுமே மேன்மைக்குரியவர்கள் என்கிற பெருமிதம் விகடனுக்கு என்றென்றும் உண்டு.

மணிகண்டன் பற்றி விகடனில் தொடர்ந்து நாலைந்து வாரங்களுக்கு வெளியான கட்டுரைகளிலிருந்து சிற்சில பகுதிகள் இங்கே...

மணிகண்டனுக்கு... கெடு-ஒரு மாதம்!

காலப்பெட்டகம்

ணிகண்டனின் இருதயத்தில் என்ன கோளாறு என்று விளக்கி னார், டாக்டர் கே.எம்.செரியன்.

"இருதயத்திலிருந்து சுத்தமான ரத்தத்தை உடம்பின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு போக ஒரு குழாயும், உடம்பு முழுக்க ஓடிய ரத்தத்தை மீண்டும் இருதயத்துக்குக் கொண்டு வர இன்னொரு குழாயும் உண்டு. மணிகண்டன் விஷயத்தில் இந்தக் குழாய்கள் இயற்கைக்கு மாறாக இடம் மாறியிருக்கின்றன. ஆகவே, அவன் உடம்பில் ஓடுகிற ரத்தம் சுத்தப்படுத்தப்படுவதே இல்லை. அவன் உயிர் வாழ்வதே கடினமாகிவிடுகிறது. இடம் மாறிய குழாய்களை மீண்டும் சரியானபடி மாற்றிப் பொருத்தவேண்டும். அதற் குத்தான் இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரி!"

மெய்சிலிர்க்க வைத்த வாசகர்கள்..! மணிகண்டனுக்கு... குவிந்தது பணம்!

குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் முதல் அதிக பட்சம் இருபதாயிரம் ரூபாய் வரை, வாசகர்கள் தங்கள் சக்திக்கேற்ப பணம் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்- மணி கண்டனின் இருதய அறுவை சிகிச்சைக்காக.

திடீரென்று எங்கள் பொறுப்பு விசுவரூபமெடுத்தது. எல்லா பணத்தையும் வரவு வைத்து முறைப்படி கணக்குகள் எழுதி, மணிகண்டன் சிகிச்சைக்கான எல்லாவித ஏற்பாடுகளும் செய்ய, விகடன் அலுவலகத்தில் ஒரு தனி இலாகாவே போடப் பட்டது. வந்த பணத்தோடு, விகடன் அலுவலக ஊழியர்கள் தங்கள் பங்குக்கு 14,000 ரூபாய் சேர்த்தார்கள்.தவிர, பாங்க்குகள், இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்கள் எனப் பல தரப்பிலிருந்தும் மணிகண்டன் பற்றிய கவலை கலந்த அக்கறையான தொடர்ந்த விசாரிப்பு, பண உதவி. இப்படியாக 5.12.88 திங்கட்கிழமை வரையில் வந்து சேர்ந்த பணம் சுமார் இரண்டு லட்சம்!

தொகை பெரியது. பொறுப்பாகவும், பத்திரமாகவும் பணத்தை வைத்திருந்து, அதை மணிகண்டனுக்காகச் செலவிட வேண்டும் என்பதற்காக, விகடன் ஆசிரியர் 'மாஸ்டர் மணிகண்டன் மெயின் டெனன்ஸ் ட்ரஸ்ட்' என்று ஒரு ப்ரைவேட் ட்ரஸ்ட்டையே உரு வாக்கியிருக்கிறார். கூடவே, 'வைத்திய உதவிக்காக விகடன் வாசகர்கள் ட்ரஸ்ட்' (Vikatan Readers Charitable Trust for Medical Aid) என்ற ஒன்றையும் விகடன் ஆசிரியர் தொடங்கியுள் ளார்.

ஆபரேஷன் வெற்றி!

வியாழக்கிழமை (8.12.88)

'இருதய அறுவை சிகிச்சையின் போது மணிகண்டனுக்குத் தேவைப்படும் ரத்தம் முழுக்க நாங்களே தருகிறோம்' என்று சில வாசகர்கள் தயாராக இருந்ததை முன்பு குறிப் பிட்டிருந்தோம். சொன்னபடியே விகடன் வாசகர்கள் மணிகண்டனுக்குத் தேவையான 'பி-பாசிடிவ்' ரத்தம் (பத்து பாட்டில்கள்) கொடுத்து விட்டார்கள். ரத்தம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள், மவுன்ட் ரோடிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.

வெள்ளிக்கிழமை (9.12.88)

மணிகண்டனுக்கு காலை 8 மணிக்கு ஆபரேஷன்!

ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கும்போது பி-பாசிடிவ் ரத்தம் உள்ள சிலரைத் தயாராக இருக்கச் சொல்லியிருந்தார் டாக்டர் கே.எம்.செரியன். "ஐயப்ப மலைக்குப் போறேன். தினமும் ஒருவேளைதான் சாப்பிடறேன். அதனால் நான் ரத்தம் கொடுக்கக்கூடாது. இருந்தாலும் மணிகண்டனுக்குத்தானே... பரவாயில்லை!" என்று அடமாய் ரத்தம் கொடுக்க வந்திருந்தார் ஒரு வாசகர்.

அவர், தான் வந்த ஆட்டோவில் மணிகண்டனைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்திருப்பார் போலிருக்கிறது. ஆஸ்பத்திரி வந்தவுடன், 'ஆட்டோ சார்ஜ்' வாங்க மறுத்து விட்டார் டிரைவர்.

"மணிகண்டனைப் பத்தி நானும் படிச்சேங்க. அவனுக்கு ரத்தம் கொடுக்கப்போறதாச் சொல்றீங்க. உங்களை ஃப்ரீயா கொண்டு வந்ததாவே இருக்கட்டும். ஏதோ என்னால் முடிஞ்சது" என்று சொல்லிவிட்டுப் போனார். அந்த நல்லிதயம் படைத்த ஆட்டோ டிரைவரின் பெயர் நாசர். இப்படியாக, ஒவ்வொரு நாளும் மனிதநேயம் விஸ்வரூபமெடுத்த நிகழ்ச்சிகள்தான் எத்தனை!

சரியாக இரண்டரை மணிக்கு டாக்டர் கே.எம்.செரியன், ஆபரேஷன் தியேட்டர் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டார். நம்மையும், மணிகண்டனின் பாட்டி மீனாட்சியம்மாளையும் அமைதியாக நெருங்கி...

"பாட்டி! உங்க பேரன் பிழைச்சுட்டான்" என்று சொல்லிவிட்டுப் பளீரென்று சிரித்தார்.

காத்திருந்த அத்தனை பேர் முகத்திலும் சூரியகோடிப் பிரகாசம்! ஆறரை மணி நேர அவஸ்தையான காத்திருப்பு அத்தோடு முடிந்தது.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்