ஸ்பெஷல் -1
Published:Updated:

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்
ம.கா.செந்தில்குமார்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!

செயில் நிறுவனத்தில் 180 பணியிடங்கள்!

'செயில்' என்று சுருக்கமாக அழைக்கப் படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் உட்பட மூன்று பிரிவுகளில் காலியாக உள்ள 180 பணிஇடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். விண்ணப்பங்களை 4.10.2010-க்குள் அனுப்ப வேண்டும். வயது வரம்பு, தெளிவான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களுக்கு: new.sail.co.in

அலகாபாத் வங்கிப் பணி!

லகாபாத் வங்கியில் முதுநிலை மேலாளர், மேலாளர் உட்பட 10 பிரிவுகளில் 127 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் அமையும். ஆன்லைனில் விண்ணப்பிக்க, 4.10.2010 கடைசித் தேதி. கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களுக்கு: new.allahabadbank.in

எல்லைக் காவல் படை பணி!

த்திய அரசின் எல்லைக் காவல் படையில் ரேடியோ ஆபரேட்டர், பிட்டர் உள்ளிட்ட 629 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப 9.10.2010 கடைசித் தேதி. மேலும் விவரங்களுக்கு, 4-10 செப்டம்பர் 2010 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும்!

இந்திய விமானப் படை விமானி ஆக...

ந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய விமானியாகப் பணிபுரிய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 4.10.2010-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://careerairforce.nic.in/

கேரியர் கைடன்ஸ்!

துணை ராணுவப் பணி!

த்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் துணை ராணுவப் படையில் 8 ஆயிரத்து 366 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப 8.10.2010 கடைசித் தேதி. விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களுக்கு: new.ssbrectt.gov.in

ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டதாரிகளுக்கு!

த்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் ஒரிஸ்ஸாவில் இயங்கி வரும் ஆயுதத் தளவாடத் தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சென்றடைய 25.9.2010 கடைசித் தேதி. மேலும் விவரங்களுக்கு, 4-10 செப்டம்பர் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும்.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 150 காலியிடங்கள்!

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 150 புரொபேஷனரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை பட்டப் படிப்புடன் சி.ஏ., அல்லது ஏ.சி.எஸ்., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் மூலம் பணி நியமனம் நடைபெறும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப 30.9.2010 கடைசித் தேதி. மேலும் விவரங்களுக்கு: new.bankofmaharashtra.in

NIT கருத்தரங்கில் கலந்துகொள்ள...

திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (nit) 'நேனோ பொருட்களும் அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாணவர்கள் கருத்தரங்கத்தை அக்டோபர் 23-ம் தேதி நடத்த உள்ளது. இதில் படைப்புகளைச் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர்களை முன்னதாகவே பதிவு செய்துகொள்ள வேண்டும். விவரங்களுக்கு: http://new.nitt.edu/home/

jmet தேர்வு அறிவிப்பு!

மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட ஏழு ஐ.ஐ.டி-க்களில் எம்.பி.ஏ., உள்ளிட்ட முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் டிசம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது. 'ஜாய்ன்ட் மேனேஜ்மென்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' (jmet) என்று அழைக்கப்படும் இந்தத் தேர்வை இந்த ஆண்டு புதுடெல்லி ஐ.ஐ.டி. நடத்துகிறது. விண்ணப்பங்களை அனுப்ப அக்டோபர் 8-ம் தேதி கடைசித் தேதி. கல்வித் தகுதி, தேர்வு மையம், பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களுக்கு: new.iitd.ac.in

கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!