ஸ்பெஷல் -1
Published:Updated:

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!
டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!
டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!
கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!
டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

மு.மனோகர், சேத்தியா தோப்பு.

"25 வயதிலேயே எனக்குத் தலைமுடியில் ஆங்காங்கே நரைமுடி எட்டிப்பார்க்கிறது. 'இளநரை, தானாகவே குணமாகிவிடும்' என்கிறார்கள் சிலர். 'தினமும் ஒரு முழு நெல்லிக்காய் சாப்பிட்டால், முடி நரைக்காது!' என்கிறார்கள் சிலர். குழப்பமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?"

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

பிரியா, சரும நோய் நிபுணர்.

"20 வயதுக்குள் முடி நரைத்தால் பரம்பரை மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். சமீபமாகத்தான் பிரச்னை என்றால், வைட்டமின் பி-12 குறைபாடு மற்றும் தைராய்டு பிரச்னைகள் காரணங்களாக இருக்கலாம். சிகரெட், மதுப் பழக்கம், அதிக மன அழுத்தம் போன்றவைகளும் நரைமுடி வளர்ச்சியைத் தூண்டும். மலேரியா நோய் மற்றும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உட்கொள்ளப்படும் சில மாத்திரைகளும் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும். தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால், குணமாகிவிடும் என்பதெல்லாம் நம்பிக்கைதானே தவிர, அறிவியல்பூர்வ ஆதாரங் கள் ஏதும் இல்லை. மற்றபடி, நெல்லிக்காய் அதிகம் சாப்பிடுவதால், நெகட்டிவ் பாதிப்புகள் எதுவும் உண்டாகாது. நரையை ஓரளவு குணப்படுத்தப் பல மாதங்கள் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளை சரும நோய் நிபுணர்களின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்!"

எம்.பிரபு, சென்னை-34

"நான் ஒரு வங்கியில் பெர்சனல் லோன் பெற்றிருந்தேன். எட்டு மாதங்களாக ஒழுங்காக வட்டி செலுத்தி வந்தேன். சில சிக்கல்கள் காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாக என்னால் வட்டி செலுத்த முடியவில்லை. என் நிலைமையை வங்கி அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் வட்டி வசூலிக்க ஏஜென்ட்டுகள் என்ற பெயரில், தடிதடியான நபர்களை என் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் தகாத வார்த்தைகளால் என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டுகிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். அந்த வங்கி மீது சட்டரீதியாக நான் நடவடிக்கை எடுக்க முடியாதா?"

சங்கர், வழக்கறிஞர்.

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

"நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் பிரபு. தனியார் அல்லது பொதுத் துறை என எந்த வங்கியாக இருந்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். வங்கி தொடர்பான சேவைக் குறைபாடுகள், பிரச்னைகள் இவற்றுக்காக ரிசர்வ் வங்கி, ஆம்பட்ஸ்மன் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கி இணையதளத்துக்குச் (http://new.rbi.org.in/home.phpx) சென்று அதில் புகார்கள் என்ற பிரிவில், வங்கி மீதோ அல்லது அவர்கள் அனுப்பும் ஏஜென்ட்டுகள் மீதோ உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். நீதி மன்றம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில்கூட வழக்கு தொடரலாம். வங்கிக் கடன் அட்டைகள் குறித்தான பிரச்னைகளுக்கும் இதே வழிமுறைகள்தான்!"

கே.நிர்மல் கலீஸ், திருநெல்வேலி.

"நான் எம்.காம்., படித்துள்ளேன். ஒன்பது மாதக் குழந்தைக்குத் தாயாக இருக்கும் நான், கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்ற விரும்புகிறேன். அதற்கு நெட் தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள். கிராமத்தில் இருக்கும் எனக்கு அதுபற்றிய தகவல்களை அளிப்பீர்களா?"

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

முனைவர் சிவக்குமார்
பேராசிரியர், சாந்தோம் பயிலகம், சென்னை
.

"பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) மூலம் நடத்தப்படும் தேர்வுதான் NET (National Eligibility Test). அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு CSIR NET (Council for Scientific and Industrial Research) என்றும், கலைப் பிரிவுப் பாடங்களுக்கு U.G.C-NET என்றும் இரண்டு வகைத் தேர்வுகள் நடைபெறும். இத் தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப் பிரிவின் முதுகலைப் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். NET தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றும் தகுதி உங்களுக்குக் கிடைக்கும். மூன்று தாள்கள் இத் தேர்வில் இருக்கின்றன. முதல் தாள், பொது அறிவு சார்ந்ததாகவும், இரண்டாம் தாள், நீங்கள் எடுத்துக்கொண்ட துறை சார்ந்த பாடங்களில் இருந்து கொள்குறி வகையிலும் (objective), மூன்றாம் தாள், அதே துறை சார்ந்த கட்டுரை வடிவில் விடையளிக்கும் வகையிலும் இருக்கும். ழிணிஜி தேர்வுக்கான விண்ணப்பத்திலேயே JRF (Junior Research Fellow) எனப்படும் அட்டவணைப் பிரிவும் இருக்கும். JRF தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், எம்.ஃபில் படிக்காமல் நேரடியாகவே ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளலாம். JRF தேர்வில் தேர்ச்சி பெற்று ஆய்வுப் படிப்புகளை முடித்தால், பிறகு NET தேர்வு எழுதத் தேவை இல்லாமலேயே, விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி அடையும்பட்சத்தில், படிப்புக்காக நிதியுதவியினை U.G.C அளிக்கும். வருடத்தில் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் இத் தேர்வுகள் நடக்கும். இதற்கான அறிவிப்புகள் நாளிதழ்களிலும், U.G.C இணையதளத்திலும் வெளியிடப்படும்!"

சி.மாரிமுத்து, ஸ்ரீவைகுண்டம்.

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

"செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் 'வாடிக்கையாளர் சேவை' என்ற பெயரில் காலர் டியூன்கள், ஜோக்ஸ், ஸ்லோகங்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் அனுமதியோடும், அனுமதியின்றியும் ஆக்டிவேஷன் செய்துவிட்டு, மாத வாடகையாக ரூபாய் 30 ஆகவும், அந்த சேவையை நிறுத்த வேண்டும் என்றால் மூன்று ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கிறார்கள். இதுபற்றி யாரிடம் புகார் அளிக்கலாம்?"

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

பால் பர்னபாஸ்
தலைவர், மாநில நுகர்வோர் பாதுகாப்பு மையம்.

"நாம் சிம்கார்டு இணைப்பு விண்ணப்பத்திலேயே அந் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்படுவதாக ஒப்புதல் அளித்துக் கையெழுத்து இடுகிறோம். அதனால், அவர்கள் இதுபோன்ற வியாபாரத் தகவல்களை அழைப்புகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தியாகவோ அனுப்பி, நம் அனுமதியைக் கேட்கிறார்கள். தவறுதலாக நாம் அதற்கு 'ரிப்ளை' செய்துவிட்டால், அது ஆக்டிவேஷன் ஆகிவிடும். அப்போது அதை நிறுத்தவும் கட்டணம் செலுத்த வேண்டும். இவைபோன்ற நடைமுறைகளை எதிர்த்து, ஏற்கெனவே நுகர்வோர் அமைப்புகள் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நுகர்வோர் அமைப்புகளிடம் தெரிவித்தால், நீதிமன்றம் மூலம் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்படும். TRAI (http://new.trai.gov.in.Default.php) இணையதளத்தில் உங்களின் புகாரை அளித்தால், தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!"

வி.சியாமளா, கோயம்புத்தூர்.

"எனது மகன் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. விளையாட்டு, கலை போன்ற வேறு துறைகளிலும் நாட்டம் இல்லை. வெளியே இலக்கில்லாமல் அலைந்துவிட்டு வீட்டுக்கு வருவான்.

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

யாரிடமும் சரியாகப் பேசுவதும் இல்லை. இப்படியே இருந்தால், அவன் எதிர்காலம் என்னாகுமோ என்று அச்சமாக இருக்கிறது. அவனை நல்வழிப்படுத்த ஏதேனும் வழிவகை உள்ளதா?"

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!

செந்தில்வேலன், மனநல நிபுணர்.

"இதற்கு குடும்பச் சூழல், மன அழுத்தம் மற்றும் இயல்பிலேயே ஐ.க்யூ. திறன்கள் குறைவாக இருப்பது, தாழ்வு மனப்பான்மை எனப் பல காரணங்கள் இருக்கலாம். சமயங்களில், மனச் சிதைவுக்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். இருந்தாலும் பதற்றப்படத் தேவை இல்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தக்க மனநல மருத்துவரிடம் உங்கள் மகனுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது!"

டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!
டீன் கொஸ்டீன் : கடனை வசூலிக்க... அடியாட்கள் வருகிறார்கள்!