மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 38

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 38


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 38
நீயும் ... நானும்! - 38
நீயும்... நானும்! - ஒரு கோப்பை வாழ்க்கை!
கோபிநாத் , படம் :'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 38

ர் ஊரில் ஓர் அறிஞர் இருந்தார். அவரைச் சந்திக்க ஓர் இளைஞன் சென்றிருந்தான்.

சிறந்த தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அதற்காகப் பல்வேறுவிஷயங்களை அவன் தெரிந்துவைத்திருந்தான். ஆனால், ஏனோ அவன் தொழிலதிபர் ஆவதற்கான முயற்சியில் தோற்றுக்கொண்டே இருந்தான். இன்னும் என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் தொழிலதிபர் ஆகலாம் என்பதை அறிந்துகொள்வதற்காக வந்திருந்தான்

அறிஞர் அவனை காலை 8 மணிக்கு வரச் சொல்லி இருந்தார். மணி 9 ஆகிவிட்டது. அறிஞரைச் சந்திக்க 7.30 மணிக்கே வந்திருந்த இளைஞன், பொறுமை இழந்து காத்திருந்தான். ஒரு வழியாக 9.30 மணிக்கு வந்து சேர்ந்தார் அறிஞர்.

'வணக்கம் தம்பி, சொல்லுங்கள்... என்ன சேதி?' என்றார் அறிஞர். இளைஞன் ஆரம்பித்தான். 'ஒரு தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது என் கனவு. அதற்காக, நான் கடுமை யாக உழைக்கிறேன். அந்த எண்ணத்துடனே எப்போதும் செயல்படுகிறேன். தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். பெரிய நிறுவனங்களின் தலைவர்களுடன் நட்பை வளர்த்துக்கொண்டேன். ஒரு நிறுவனத்தின் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கான பயிற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன்.

நீயும் ... நானும்! - 38

என்னிடம் இருக்கும் பணம், என் தந்தை எனக்குத் தந்த சொத்து எனப் பலவற்றையும் சேர்த்துவைத்து இருக்கிறேன். இப்படிப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டும், சேர்த்துக் கொண்டும் இருக்கிற என்னால், தொழிலதிபர் ஆக இயலவில்லை. என்ன செய்வது?'

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அறிஞர், 'டீ குடிக்கிறீர்களா தம்பி?' என்றார். இளைஞனுக்குக் கொஞ்சம் எரிச்சல்தான். இருந் தாலும், 'சரி' என்றான். டீ கோப்பையை அவன் கையில் கொடுத்த அவர், அதில் டீயை ஊற்ற ஆரம்பித்தார். டீ கோப்பை நிரம்பியது, இருந் தாலும் அறிஞர் டீ ஊற்றுவதை நிறுத்தவில்லை. கோப்பை நிரம்பி வழிந்ததும், இளைஞன் இன்னமும் எரிச்சலானான். 'என்ன அறிஞரே இப்படிச் செய்துவிட்டீர்கள்?' என்று கோபமாகக் கேட்டான். அறிஞர் அமைதியாகச் சொன்னார், 'தம்பி, உங்கள் மனசும் இப்படித்தான்இருக் கிறது. டீ கோப்பை நிரம்பி இருக்கும்போது மேலும் மேலும் டீயை ஊற்றினால், அது எப்படி பயனின்றி வெளியே கொட்டுமோ, அதேபோல் நீங்கள் சேர்க்கிற, தெரிந்துகொள்கிற எல்லா விஷயங்களும் வீணாக வெளியே வழிந்துவிடுகின்றன' என்றார் அறிஞர்.

இளைஞனுக்குப் புரியவில்லை. அறிஞர் தொடர்ந்தார். 'தம்பி தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற முனைப்பில் நீங்கள் அறிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள். அதற் குத் தேவைப்படும் விஷயங்களைச் சேர்க்கிறீர்கள். ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ள உங்கள் மனதில் இடம் இல்லை. அதனால், அவை வீணாக வெளியேறுகின்றன. உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும் நீங்கள், எதையெல்லாம் சேர்த்துக்கொள்கிறீர்களோ, அதைவிட முக்கியமானது தேவை இல்லாத விஷயங்களை அழிப்பதுதான். அப்போதுதான், நீங்கள் சேர்க்கும் விஷயங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கும்!' என்றார் அறிஞர்.

இந்த அறிஞர் சொன்னது வாழ்வியல் நிர்வாகம் குறித்த ஒரு தத்துவம். நமது குறைகளைக் களையாமல், புதிய நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது. சேர்த்தல் எவ்வளவு முக்கியமோ, நீக்கலும் மிக முக்கியம். இளைஞர் இப்போது தன்னைப்பற்றி சுய ஆய்வு மேற்கொண்டார். ஒரு தொழிலதிபர் ஆக முயலும் என்னிடம் இருக்கும் குறைகள் என்னென்ன என்று பட்டியல் இட்டார். ஆர்வம் இருக்கும் அளவு பொறுமை இல்லை. வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. நிறைய சோம்பேறித்தனம் இருக்கிறது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போடும் குணம் இருக்கிறது.

நீயும் ... நானும்! - 38

தெரிந்துகொள்வதில் இருக்கிற துடிப்பு, புரிந்துகொள்வதில் இருப்பது இல்லை. அந்தப் பட்டியல் கொஞ்சம் நீளமாகத்தான் இருந்தது.

இந்தக் குறைகளைக் களையாமல், தொழிலதிபர் ஆவதற்காக எடுக்கப்படும் வெளி முயற்சிகள் எந்தப் பலனையும் தரப்போவது இல்லை. எனக்கும் நான்கு தொழிலதிபர்களைத் தெரியும் என்று வேண்டுமானால், சொல்லிக்கொள்ளலாம். அந்தத் தொழிலதிபர் சொல்கிற கருத்துக்களைக் கவனித்துக் கேட்கிற பொறுமை இல்லாமல் போனால், அந்த நட்பு எந்த அறிவையும் தரப்போவது இல்லை.

தொழில் தொடங்குவதற்கான பணம் இருக் கிறது. அதனைப் பொறுப்பாகக் கையாள்வதில் இருக்கிற சுய கோளாறுகளைக் களையாமல், அந்தப் பணம் பயன்படப்போவது இல்லை. சொந்த அடிப்படைகளை ஆராய்ந்து, அதில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்குவதே இலக்கை நோக்கிய முனைப்பின் முதல் படி.

எனக்கு சூரிய நமஸ்காரம் முறையாக செய்யத் தெரியும். ஆனால், அதிகாலையில் எழுவது பிடிக்காது என்றால், அந்த ஆற்றல் அர்த்தமற்றதே.

எல்லா மனிதருக்குள்ளும் ஆக்கபூர்வமான ஒரு திறன் இருக்கிறது. அதை அடையாளம் காணவும் வளர்த்தெடுக்கவும் தேவையற்ற பகுதிகளை அழிப்பது மிக அவசியம் என மேலாண்மைத் தத்துவங்கள் வலியுறுத்து கின்றன.

எல்லா பாறைக்குள்ளும் சிலை இருக்கிறது. அந்தப் பாறையின் தேவை இல்லாத பகுதிகளை நீக்குவதன் மூலமே, அதற்குள் இருக்கும் சிலை வெளிப்படும்.

நீயும் ... நானும்! - 38

பாறையாகவே இருந்துகொண்டு என்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று எத்தனை உத்வேகத்தோடு முனைந்தாலும், அது பலன் தரப்போவது இல்லை. முதலில் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது!

என்னிடம் சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் அனைத்தும் இருக்கின்றன. சரி, அதில் இருப்ப வற்றைப் படித்துத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் எவ்வளவு இருக்கிறது? நாளை படித்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிற அந்தக் குணத்தை மாற்றிக்கொள்ளாதவரை, அந்தப் புத்தகங்கள் அலமாரியை மட்டுமே அழகு செய்யும்.

எனக்கு நிறைய பெரிய மனிதர்களைத் தெரியும். அவர்கள் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்... நல்ல விஷயம். ஆனால், அவர் களைச் சந்திக்கத் தேவைப்படும் பொறுமையும், அந்தச் சந்திப்பில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்த தகவல்களும் தயாராக இருக்கின்றனவா?

நீயும் ... நானும்! - 38

ஓடி ஓடி உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்சம் தூங்க லாம் என்று சொல்கிற மனசு மாறாமல் எந்த ஓட்டமும் நடக்கப்போவது இல்லை.

ஒரு விஷயத்தை அடைவதற்கான எல்லா புறச் சூழல்களும் வாய்த்திருந்தும், நினைத்ததை அடைய முடியவில்லை என்றால், அகச் சூழல் இன்னும் மாற வில்லை என்பதுதான் உண்மை.

அறிஞரிடம் சென்ற அந்த இளைஞர்போலத்தான் நம்மில் பலர் இருக்கிறோம். ஒரு தொழிலதிபர் ஆக என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்குரிய படிப்பு வேண்டும்... படித்தாகிவிட்டது. நல்ல வியாபாரத் தொடர்புகள் வேண்டும்... செய்தாகி விட்டது. பணம் வேண்டும்... சேர்த்தாகிவிட்டது.

சேர்க்க வேண்டிய விஷயங்களைச் செய்துவிட்டோம். ஆனால், நீக்க வேண்டிய விஷயங்கள் அப்படியேதான் இருக்கின்றன. செங்கல்லும் சிமென்ட்டும் தயார். கட்டடம் கட்ட வேண்டிய இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

முதலில் தேவை இல்லாத அந்தத் தண்ணீரை வெளியேற்றுவோம். தேவையற்றவற்றை நீக்கி விட்டால் தேவையானது கிடைக்கும்.

தமிழருவி மணியன் ஒரு மேடையில் சொன்னார், 'தேவை இல்லாதவற்றை விரட்டுங்கள்... உங்க ளுக்குத் தேவைப்படுவது தானாக வரும்' என்று.

எல்லாப் பாறைகளுக்குள்ளும்
ஒரு சிலை
இருக்கிறது!

நீயும் ... நானும்! - 38
நீயும் ... நானும்! - 38
- ஒரு சிறிய இடைவேளை