சினிமா
Published:Updated:

இப்படியே இருக்கட்டும் என் தலை!

இப்படியே இருக்கட்டும் என் தலை!


விகடன் பொக்கிஷம்
இப்படியே இருக்கட்டும் என் தலை!
இப்படியே இருக்கட்டும் என் தலை!
"இப்படியே இருக்கட்டும் என் தலை!"
இப்படியே இருக்கட்டும் என் தலை!
இப்படியே இருக்கட்டும் என் தலை!

'சோ'வின் 1000-வது நாடகம் மியூஸிக் அகாடமியில் நடந்தது. நாடகத்தின் இடையே

சோ தன் நண்பர்களுக்கு நன்றி சொன்னார். சொன்ன விதத்தில் தவறு நேர்ந்துவிட்டதோ என்னவோ - சரியாக நினைவில்லை \ அது ரசிகர்களைச் சிரிக்க வைத்துவிட்டது.

உடனே சோ சிம்ம கர்ஜனையில், "ஸ்டாப் இட்... ப்ளீஸ் ஸ்டாப் இட்!" என்று குரல் கொடுத்தார். கப்பென்று ஒரு நிசப்தம்!

சோ தொடர்ந்தார்... "உண்மையிலேயே சொல்கிறேன், 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்' நண்பர்கள் இல்லையென்றால், என்னால் இந்த அளவு வளர்ந்திருக்க முடியாது. நான் பெற்றிருக்கும் பேருக்கும் புகழுக்கும் அவர்கள்தான் காரணம்" என மேடையிலேயே கண் கலங்கினார்.

சிரித்தவர்கள் 'சூ' கொட்ட ஆரம்பித்தனர். அந்தக் கூட்டத்தின் பரிகாசச் சிரிப்பை அடக்கித் தன் பேச்சைக் கவனிக்க வைத்த சோவின் திறமை வியப்பை அளித்தது.

அது மட்டுமல்ல; பல மேடைகளில் கூட்டத்தினரோடு அவர் பேசுவது, கேள்விக்குப் பதில் சொல்லுவது... எல்லாமே சுவையாக இருக்கும். முன்பு பல சினிமா விழாக்களில் எம்.ஜி.ஆரும் சோவும் பேசுவார்கள். அப்போது இருவரும் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டுப் பதில் சொல்லிக் கொள் வார்கள்; அல்லது, ஒருவர் பேசும்போது மற்றவர் இடையே புகுந்து தன் எண்ணத்தைச் சொல்வார். கேட்பவர்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

இப்படியே இருக்கட்டும் என் தலை!

சாதாரணமாகப் பெரிய பேச்சாளர்கள்கூட கல்லூரிக் கூட்டங்களுக்குப் போனால், மிக ஜாக்கிரதையாகப் பேசி விட்டு வந்துவிடுவார்கள். மாணவர்கள் கலாட்டா செய்து விடுவார்களோ என்று பயம். ஆனால், பல கல்லூரிகளில் சோ எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார். மாண வர்கள் செய்யும் தவறுகளைத் துணிச்சலாக எடுத்துச் சொல்வார்.

ஒருமுறை, உடல்நலக் குறைவால் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார் சோ. அதன்பின், எதனாலோ அவர் தலைமுடி உதிர ஆரம்பித்து, தலை மொட்டையாகிவிட்டது. முடி இல்லாத குறையை மறைக்க, பம்பாயிலிருந்து ஒருவர் 800 ரூபாய்க்கு 'விக்' செய்து வந்து கொடுத்தார்.

அதைத் தலையில் மாட்டி, கண்ணாடி முன் நின்று பார்த்தார் சோ. சுற்றி இருந்தவர்கள், "ரொம்ப இயற்கையாக இருக்கிறது!" என்று பாராட்டினார்கள். ஆனாலும், சோ 'விக்'கைக் கழற்றியெறிந்துவிட்டார்.

"என் தலை மொட்டையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! எதற்காக நான் அதை மூடி மறைத்து, ஏமாற்ற வேண்டும்? உருவத்திற்கும் எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம்? இனி, நான் இப்படியே மொட்டைத் தலையோடுதான் இருப் பேன்" என்று சொல்லி, அப்படியே இருக்க முடிவெடுத்து விட்டார். அவர் எண்ணத்திலும் உண்மை இருந்தது. எதற்கு, யாரை, ஏன், ஏமாற்ற வேண்டும்?

சில வருடங்களுக்கு முன், அண்ணா சாலையில் தி.மு.க- வின் மாபெரும் ஊர்வலம் ஒன்று போய்க்கொண்டிருந்தது.கூட்டத்தின் நடுவே சோ வந்து மாட்டிக்கொள்ளப் போகிறாரே என்று பலரும் பயந்துகொண்டிருந்தார்கள். காரணம், அப்போது அவர் தி.மு.க-வின் கொள்கைகளைக் காரசாரமாக விமரிசித்துக்கொண்டிருந்தார்.

சோ, டி.வி.எஸ்-ஸுக்குப் பக்கத்திலிருக்கும் ஸ்மித் ரோடில் காரை நிறுத்திப் பூட்டிவிட்டு, நடந்தே ஊர்வலத்திற்குள் புகுந்து, அண்ணாசாலையைக் குறுக்கே கடந்து, துக்ளக் ஆபீஸுக்கு வந்துவிட்டார். சரியான துணிச்சல்காரர்!

எதற்கும் அஞ்சமாட்டார். ஒளிவு மறைவு கிடையாது. தவறு செய்தவர்களைக் கடிந்துகொள்வார். பின்னர், "ஏதோ வேகத்திலே கோபிச்சுக்கிட்டேன். இருந்தாலும், நீ செய்தது தப்பு!" என்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிப்பார்.

\ பாலா

இளவரசர் திருமணத்தில் ராஜன் பாட்டு!
இப்படியே இருக்கட்டும் என் தலை!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கல்யாணத்திற்குப் போனவர்களும், தூர இருந்தே எட்டிப் பார்த்துவிட்டு வந்தவர்களும், "நான் சார்லஸ் கல்யாணத்திற்குப் போனேனே" என்று பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால்-

"இதெல்லாம் என்ன பெருமை..? சார்லஸ் கல்யாணத்தில் நான் நலங்கே பாடிட்டு வந்தி ருக்கேன்" என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார் சீர்காழி கோவிந்தராஜன்.

பி.பி.ஸி. ஒளிபரப்பில், இளவரசரின் திரு மணத்தையட்டி, பல்வேறு நாடுகளின் சார் பாக, ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு தொகுப் பைத் தயார் செய்து பரிசாக அளிக்க முடிவு செய்தது. அந்த வகையில், பாரத நாட்டின் பரிசாக ஒரு பாடலை அளிக்கும் வாய்ப்பு தமிழ்ப் பிரிவுக்குக் கிடைத்தது. பி.பி.ஸி. 'தமிழோசை' தயாரிப்பாளரான திரு.சங்கரமூர்த்தி, அவசர அவசரமாக ஒரு நலங்குப் பாட்டைத் தானே எழுதினார். கச்சேரிக்காக லண்டன் வந்திருந்த சீர்காழி, அந்தப் பாடலுக்குத் தானே டியூன் போட்டுப் பாட, அது டேப்பில் பதிவு செய்யப்பட்டது. அந்த டேப்பின் ஒரு பிரதி உடனே பக்கிங்காம் அரண்மனைக்குப் பரிசாக அனுப்பப்பட்டது. 30-ம் தேதி காலை 8 மணிக்கு பி.பி.ஸி. தமிழோசையில், சீர்காழி பாடிய 'மகராணி மெச்சும் ஒரு மாட்டுப் பொண்ணு... பிரின்ஸ் சார்லஸ் மனங் கவர்ந்து கரம் பிடித்த டயானா கண்ணு' என்னும் அந்த நலங்குப் பாட்டு ஒலிபரப்பானது.

இப்படியே இருக்கட்டும் என் தலை!
இப்படியே இருக்கட்டும் என் தலை!