ஒரு கடன்காரன் திடீரென்று வந்துவிடுகிறான். அவனை விரட்டுவதற்காக கணவன் மனைவியை அடிப்பதும், மனைவி கடன்காரன் காதில் விழும்படி 'குய்யோ முறையோ' என்று அழுது அலறுவதுமாக காட்சி ஆரம்பமாகிறது. கடன்காரன் தலை மறைந்ததும், அவன் ஏமாந்துபோய்விட்டான் என்று இருவரும் மெச்சிப் பேசிக் கொள்கின்றனர். அந்த நேரத்தில், கதவின் பின்னால் மறைந்திருந்த அந்தக் கடன்காரன், 'எப்படி நான் போகாமல் வந்தேன்' என்று சொல்லி, முன்னால் வந்து நிற்கி றான். நமது கிராமத்துப் பழங் கதையைத் தத்ரூபமாக மூவரும் நடித்துக் காட்டினர்.
எத்தனையோ நடிகர்களைத் தயாரித்த டைரக்டர் சுப்ரமணியம், அன்று கலைவாணர் டைரக்ஷனில் நடிகராக நடிக்க நேர்ந்தது. அனைவரும் கலைவாணரின் திறனை மிகவும் பாராட்டினர்.
வாகினி ஸ்டூடியோவில் 'டாக்டர் சாவித்திரி' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கலைவா ணர், போட்டோ ஸ்டூடியோ உரிமையாளராக நடித்தார்.
திடீரென்று படத் தயாரிப்பு நிர்வாகியை அழைத்து, ரசிகமணி டி.கே.சி., கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பேராசிரியர் கல்கி மூவரின் பெரிய சைஸ் புகைப்படங் களை உடனே கொண்டு வருமாறு சொன்னார் கலைவாணர். படங் களை வைத்து என்ன செய்யப் போகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
படங்கள் மாட்டப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியது. கலைவாண ருடன் ஸ்டூடியோ பாயாக நடித் தவர் அந்தப் படங்களைச் சுட்டிக் காட்டி, "இவர்கள் யார்?" என்று கேட்க, "தெரியாதா உனக்கு? இதோ, வெள்ளை மீசை யுடன் கவர்ச்சியாக இருக்கிறாரே இவர்தான் ரசிகமணி டி.கே.சிதம் பரனாத முதலியார். உத்தரியத்தை மூடிக்கொண்டு சாதுவாக இருக் கிறாரே, அந்தப் பெரியவர்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. நேர் வகிடு எடுத்துக் கொண்டு, கண்ணாடியுடன் கண் ணியமாக இருக்காரே, இவர்தான் 'எழுத்துமணி' பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி" என்று விளக்கிச் சொல்லி, அந்தப் பெரியவர்களைப் பெருமைப்படுத்தும்விதமாக ஒரு காட்சியை அமைத்துவிட்டார் கலைவாணர்.
- ரேவதி
|