சினிமா
Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

40 பேருக்கு கல்தா!

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸும் அவர் மனைவி டயானாவும் சமீ பத்தில் ஆஸ்திரேலியாவிலும் பிறகு அமெரிக்காவிலும் டூர் அடித்தார்கள். பத்திரிகை நிருபர்களும், போட்டோ கிராபர்களும் இவர்களைப் பற்றிய சூடான செய்திகளையும், போட் டோக்களையும் வெளியிட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றிலிருந்து சில...

இளவரசக் கணவரின் அரண்மனைக்கு டயானா வந்தவுடன் செய்த முதல் வேலை அரண்மனையில் வேலை பார்த்து வந்த 40 பேரை கல்தா கொடுத்து அனுப்பியதுதான். வம்பு பேசுகிறவர்கள், கோள்மூட்டி விடுபவர்கள், அதிக பந்தாவோடு நடப்பவர்கள், ஹோமோ செக்ஸுவல்கள் போன்றவர்கள் யார் யார் என்று ரகசியமாக விசாரித்துத் தெரிந்துகொண்டு, உடனே அவர்களை அரண்மனையை விட்டு வெளியேற்றினார் டயானா.

அடுத்தபடி, டயானாவின் பார்வை கணவரின் காதுகளில் சென்றது. கொஞ்சம் பெரிய சைஸ் காதுகள்! வழக்கமான அரண்மனை முடிதிருத்துபவரிடம் சொல்லி சார்ல ஸின் தலைமுடி நீளத்தை அதிகப் படுத்தி, காதுகளைக் கொஞ்சம் மறைப்பது மாதிரி ஹேர் ஸ்டைலை மாற்றச் செய்தார்.

காலப்பெட்டகம்

உடைகளுக்காக, வாரத்துக்கு 2,500 டாலர் செலவழிக்கிறார் டயானா! இப்போது சற்றுக் குறைத் துக்கொண்டிருப்பதாகக் கேள்வி!

முடிந்த அளவுக்குக் குழந்தை களோடு ஜாலியாகப் பொழுதைப் போக்கவே விரும்புகிறார் டயானா. சும்மா ஆயாக்களிடம் விடாமல், தானே சாப்பாடு ஊட்டுவது, தோட்டத்து ஊஞ்சலில் உட்கார வைத்து விளையாட்டுக் காண்பிப் பது... இப்படி! ஆனால், அம்மாவை விட அப்பாவுக்குக் குழந்தைகள் மீது கொள்ளை ஆசை. ஒரு தடவை முக்கியமான பார்ட்டிக்குப் போக நேரமாகிவிட்டதே என்று இளவரசரை அரண்மனை முழுக்கத் தேடிக் கொண்டு போனால்... கடைசியில் சார்லஸ், குழந்தைகளோடு பாத்ரூமில் ஷவருக்குக் கீழே லூட்டியடித்துக் கொண்டிருந்தாராம்!

அது சரி! டயானாவும் எலிசபெத் மகாராணியும் பழகுவது எப்படி?

பெரிதாகப் பாசமும் கிடையாது; சண்டையும் கிடையாது. மகாராணிக் கும் பிரதமருக்கும் உள்ள உறவு போல ஒரு 'ஃபார்மல்' மரியாதை யோடு... மொத்தத்தில், ஒருவரை ஒருவர் காலை மிதிக்காமல், சற்று ஒதுங்கியவாறு இருக்கிறார்கள்.

சென்னை நகருக்குள் இருந்த மிருகக்காட்சி சாலை வண்டலூருக்கு மாற்றப்பட்டது இந்த ஆண்டு தான்.

வண்டலூர் - ஒரு விஸிட்!

வண்டலூரில்- உயிரியல் பூங்கா அதாவது ஜூ (ZOO) திறப்புவிழா.

முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் ஆர்.எம்.வீ. வரவிருக்கிறார்கள் என்பதால், செங்கல்பட்டு மாவட்டமே படு சுறுசுறுப்பில் இறங்கியது. தாம்பரத்தில் மதியம் ஒரு மணியி லிருந்தே போலீஸாரின் தடியடிக்குப் பயந்து பிளாட்பாரத்துப் பழ வண்டி களெல்லாம் பின்வாங்கிக்கொண்டிருந்தன. சுமார் இருபது லாரிகளாவது நின்றுகொண்டிருக்கும் இரும்புலியூரில், ஒரு லாரிகூட இல்லாமல் கறுப்புப் பட்டையாய் ட்ரங்க் ரோடு பளிச்சென்று இருந்தது. எப்போதும் விளக்குகள் இல்லாமல் வாகனங் களை விபத்துகளுக்குள்ளாக்கும் பெருங்களத்தூர் பாலம், வண்ண வண்ண விளக்குகளால் 'மேக்கப்' போட்டுக்கொண்டிருந்தது. "இது மாதிரி பெரிய மனுஷங்க நம்மூருக்கு அடிக்கடி வந்தா லைட் வெளிச்சமாச்சும் கிடைக்குமே!" என்று உள்ளூர்க் காரர் ஒருவர் அலுத்துக்கொண்டார்.

சரியாக 6:30 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்ததும், அதுவரை மேடையில் மங்கல கீதம் வாசித்துக்கொண்டிருந்த நாகசுரக்காரர்கள் நடையைக் கட்ட, பாண்டுவாத்தியம், "நீங்க நல்லா யிருக்கணும் நாடு முன்னேற" என்று வாழ்த்தியது! பின்னர் அதிர்வேட்டு கள் முழங்க, எம்.ஜி.ஆர். பட்டனைத் தட்டி மினியேச்சர் கேட்டைத் திறந்து வைத்தார். ஆனால், அதிர் வேட்டுக்களின் சத்தத்தினால் யானைகள் பிளிறாமல் பின்வாங்கி விட்டன.

- எஸ்.சுபா

'மிருகங்களுக்கு ஜாலி மூட்!'

சென்னை மிருகக்காட்சிச்சாலை யில் நோஞ்சானாக இருந்த எல்லா மிருகங்களும் வண்டலூர் வந்ததும் கிளாஸ்கோ பேபியாய்க் கொழுத் திருப்பதாகவே தோன்றுகிறது. இயற்கைச் சூழலில், எல்லாம் நல்ல ஜாலி மூடில் இருப்பதாகத் தெரிகிறது! பத்து வருடங்களாக இனவிருத்தி செய்யாமல் இருந்த சாரஸ் கொக்கு, இங்கு வந்த ஆறாவது மாதம் ரெண்டு ஜூனியருக்கு அம்மாவாகி யிருக்கிறது. அதே போல், முன்பு மாநகராட்சி மிருகக்காட்சிச்சாலையில் பெட்ரூம் வசதி இல்லாமல் தனித் தனி கூண்டில் ஏங்கிக்கொண்டிருந்த தென் அமெரிக்க பஞ்சவர்ணக் கிளி களுக்கு இங்கு வந்துதான் 'சாந்தி முகூர்த்தம்' நடந்தது. ரிசல்ட்: அந்த பஞ்சவர்ணக் கிளிகள் குழந்தைக ளுடன் கொஞ்சிக்கொண்டிருக்கின் றன. இதே போல், மான்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. இனவிருத்திக்கேற்ற சூழல் வண்டலூரில் இருக்கிறதோ?

சிங்கம், புலி போன்ற துஷ்ட மிருகங்கள் சுதந்திரமாகத் திரிய, 'சஃபாரி பூங்கா' அமைக்கப் போகி றார்கள். இதன் சிறப்பம்சம்- விலங் குகள் எல்லாம் சுதந்திரமாகத் திரியும், மனிதர்கள் கூண்டுக்குள் இருந்து பார்க்கவேண்டும்.

மலைகள் சூழ்ந்துள்ளதால், முதலில் கொஞ்சம் தண்ணீர் பிரச்னை இருந்தது. இப்போது பாலாறு வாட்டர் சப்ளையாகிறது. எனவே, நோ வாட்டர் ப்ராப்ளம்!

உயிரியல் பூங்கா நுழைவாயி லின் வரைபடம் முதல்வரின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டபோது, 'பூங்காவில் நுழையும்போது சிறைச் சாலையில் நுழைவதுபோல் இருக்கக் கூடாது' என்று அதை மாற்றியிருக் கிறார்.

எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்த தும் தனது நாற்காலியைத் தானே நகர்த்திப் போட்டு வசதி செய்து கொண்டார். இரட்டை இலை சின் னத்தை இரண்டு விரல்களில் காண் பித்துக்கொண்டிருந்த ரத்தத்தின் ரத்தங்களுக்குப் புன்னகையுடன் கையாட்டினார். கைகூப்பி வணக்கம் செய்தார். தமிழ்த்தாய் வாழ்த்தின் போது, பாடலின் வரிகளை அவர் உதடுகள் முணுமுணுத்தன.

இ.காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர் டி.யசோதா பேசும்போது, "புரட்சித் தலைவர் இன்னும் இரு தினங்களில் மறுபடியும் ஜப்பான் செல்கிறார். வரும்போது இன்னும் ஓர் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரும்பி வருவார்" என்று, சிகிச்சைக் காக முதலமைச்சர் ஜப்பான் செல் வதை ரகசியமாக வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அமைச்சர் முன்னிலையிலேயே போட்டு உடைத்துவிட்டார்.

காலப்பெட்டகம்

விழா ஏற்பாடுகளை முன்தினம் கவனிக்க வந்தபோது, உயிரியல் பூங்காவின் அருகிலிருந்த ஏழெட்டு குடிசைகளை இரவு 11 மணிக்கு, கொட்டும் மழையில் ரெவின்யூ அதிகாரிகள் பிரித்துப் போட்டுவிட் டார்களாம்! பிறந்து பத்தே நாள் ஆன குழந்தையுடன் ஒரு தாய்க் குலம் கண்ணீருடன், தங்குவதற்கு ஓர் இடம் தேடி அலைந்தது, தங்கள் மனத்தைப் பிழிந்ததாகச் சிலர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. மிருகங்கள் வசதியாக வாழவேண்டியதுதான்; அதற்காக மனிதர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமா?!

- ஜாசன்

சென்னையில், மீனம்பாக்கத் துக்கும் பல்லாவரத்துக்கும் இடையே 'திரிசூலம்' ரயில்வே ஸ்டேஷன் உருவானது.

ஒரு புதிய ஸ்டேஷன் உருவாகிறது!

சென்னை பீச்-தாம்பரம் மின்சார ரயில் பாதையில், மீனம் பாக்கத்துக்கும் பல்லாவரத்துக்கும் இடையேதான் தொலைவு அதிகம். இந்த இரு ஸ்டேஷன்களுக்கு மத்தி யில்தான் 'மெயின் லைன்' ரயில்களுக்கும், மின்சார ரயில்களுக்கும் 'ரேஸ்' நடக்கும்! இனி இதற்கெல்லாம் சான்ஸ் இல்லை.

தற்போது புதிய விமான நிலையம், இவ்விரு ரயில் நிலையங்களுக்கும் இடையில்தான் அமைந்திருக்கிறது. எனவே, விமானப் பயணிகளின் நலன் கருதி, ஏர்போர்ட்டுக்கு எதிரில் ஒரு புதிய ரயில் நிலையம் படுவேகமாகக் கட்டப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டம்!

பத்து வருடங்களாக, திரிசூலம் கிராமத்து மக்கள் என்ன முயன்றும் கொண்டு வர முடியாத ஒரு ரயில்வே ஸ்டேஷனை, புது விமான நிலையம், வந்த சில மாதங்களிலேயே கொண்டு வந்துவிட்டது.

'புது ஸ்டேஷனுக்கு என்ன பெயர் வைப்பது?' என்று ஏகக் குழப்பங்கள் ஏற்பட்டதாகக் கேள்வி. 'ஏர்போர்ட் ஸ்டேஷன்' என்று முதலில் பெயர் வைப் பதாக இருந்தது. ஆனால் நேஷனல், இன்டர்நேஷனல் என இரண்டு விமான நிலையங்கள் இருப்பதால், இது தவிர்க்கப் பட்டிருக்கிறது.

"இந்த ஸ்டேஷனுக்கு 'திரிசூலம்' என்ற பெயர் வருவதற்கு என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்" என்று உள்ளூர் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்ததாக ஊர் மக்கள் கூறி னார்கள். 'திரிசூலம் ஸ்டேஷன்' என்ற பெயரில்தான் ரயில்நிலைய வேலைகளெல்லாம் இயங்கிக்கொண்டும், வழங்கப்பட்டும் வருகின்றன.

"எந்த ஸ்டேஷன்லேயும் இல்லாத வகையில் இங்கே மாடிப்படிக்குப் பதிலா சுரங்கப் பாதை கட்டறோம். இந்த சுரங்கப் பாதையை நேரா விமான நிலையத்தின் நுழைவாயிலுடன் இணைக்கலாமானுகூட ஒரு ஐடியா இருக்கு!" என்றார் ஸ்தலத்தில் இருந்த அதிகாரி முத்துகிருஷ்ணன்.

- எஸ்.சுபா

அன்றைக்கே தலையங்கத்தில் எய்ட்ஸ் பற்றிய அபாய மணி அடித்திருக்கிறது விகடன்!

அலட்சியம் ஆபத்தாகும்!

விஞ்ஞானபூர்வமான மருத்துவ வசதிகள், சுறுசுறுப்பான கண்டுபிடிப்புகள், விரைந்து செயலாற்றும் திறமை ஆகியவை நிறைந்த அமெரிக்க நாடே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிதாகக் கிளம்பியிருக்கும் 'எய்ட்ஸ்' வியாதி பற்றி. இந்த நோய் பற்றி இன்று மேற்கத்திய நாடுகளிலெல்லாம் அச்சத்தோடு ஆராய்ச்சி நடக்கிறது. அமெரிக்க நடிகர் ராக்ஹட்ஸன் இந்த நோய் தாக்கியதால் மரணமுற்றதை அடுத்து, இதைப் பற்றி உலகெங்கும் ஒரு விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நோய்க்கு அமெரிக்காவில் மட்டும் 6,000 பேருக்கு மேல் பலியாகியிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பைச் சேர்ந்த உலக சுகாதார நிறுவனம் எல்லா அரசாங்கங்களுடனும் தொடர்பு கொண்டு, அவர்களது நாட்டில் 'எய்ட்ஸ்' நோய் இருக்கிறதா என்று கவலையுடன் விசாரித்திருக்கிறது. பல நாடுகள் இது பற்றித் தகவல்கள் அனுப்ப, ரஷ்யாவும் இந்தியாவும் புள்ளிவிவரம் எதையும் அனுப்பவில்லை யாம். 'மேற்கத்தியக் கலாசார சீரழிவின் விளைவு 'எய்ட்ஸ்' நோய். எங்கள் நாட்டில் இந்த நோய் கிடையாது; வராது' என்று சோவியத் நாடு பதில் சொல்லியிருக்கிறது. நமது அரசு எந்தக் கருத்தையும் இதுவரை சொன்னதாகத் தெரியவில்லை.

பல மருத்துவ நிபுணர்கள், இந்த நோய் நமது நாட்டில் இல்லை என்று மேலெழுந்தவாரியாகச் சொல்லிக்கொண்டாலும், சிலர் நம் நாட்டிலும் 'எய்ட்ஸ்' பரவத் தொடங்கியி ருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். நமது அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. உயர்மட்ட மருத்துவ நிபுணர் குழு ஒன்று அமைத்து ஆலோசனை பெற வேண்டும். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் ரத்தப் பரிசோதனை செய்ததற்கான சான்றிதழுடன்தான் வர வேண்டும் என்று உடனடியாக அரசு உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

வருமுன் காக்காமல், வந்த பின் ஒப்பாரி வைத்தே பழக்கப்பட்ட நாம், இந்த பயங்கர நோய் விஷயத்திலாவது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அலட்சியம் ஆபத்தில் கொண்டு போய் விடும்!

காலப்பெட்டகம்

அந்த பயங்கர உண்மை!

வல்லரசுகளின் அணு ஆயுதக் குவிப்பால் உலகம் எந்த அள வுக்கு அழிவுப் பாதையை நோக் கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் படம்தான் அது. இரண்டாம் உலகப்போரின் போது (நாகசாகி- ஹிரோஷிமா வில் போடப்பட்ட அணுகுண்டு உள்பட) பயன்படுத்தப்பட்ட அனைத்து எரிசக்தியையும், நடுவில் உள்ள கட்டத்தில் இருக்கும் அந்த ஒற்றைக் கரும்புள்ளி குறிக்கிறது. மற்ற கட்டங்களில் உள்ள புள்ளிகள்? இன்று உலகம் முழுவதும் இருக்கும் அணு ஆயுதக் குவிப்புதான் அவை!

இதில் இரண்டே இரண்டு கட் டங்களில் இருக்கும் சக்தியை மட்டும் வைத்து உலகில் உள்ள அனைத்து சிறிய, பெரிய நகரங்களையும் ஒரு சில நிமிடங்களில் அழித்துவிட முடியும்!

- எம்.ரமேஷ்



விகடனில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிப் புகழ்பெற்ற 'அது ஒரு நிலாக் காலம்' தொடர்கதை இந்த ஆண்டு வெளியாகியுள்ளது.

தொடர்க

காலப்பெட்டகம்

தை அறிவிப்பிலும் ஒரு புதுமையைச் செய்திருக்கிறது விகடன். இந்த ஆண்டு ஏப்ரலில் பாலகுமாரன் எழுதும் 'கரையோர முதலைகள்' முற்றுப் பெறுகிறது. அதன் கீழேயே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழில், பாலகுமாரன் எழுதும் 'தாயுமானவன்' புதிய தொடர் கதை ஆரம்பிக்கப்பட உள்ளதாக மிக மிக அட்வான்ஸாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது விகடன்.

மூர்மார்க்கெட் தீப்பற்றி எரிந்தது இந்த ஆண்டுதான். 'திகைக்க வைத்த தீ விபத்து' என்னும் தலைப்பில் விகடன் அப்போது எழுதிய தலையங்கம், 17.9.2008 இணைப்புப் புத்தகத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

உலக அறிஞர்களின் பொன்மொழிகளை வாரம் ஒன்றாக வெளியிட்டு, ஒவ்வொன்றுக்கும் பொருத்தமாக சுஜாதா உள்ளிட்ட பல பிரபல கதாசிரியர்களிடம் சிறுகதை கேட்டு, 'பொன்மொழிக் கதைகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது விகடன்.

ஆரம்ப காலந்தொட்டே ஆனந்தவிகடன், எழுத்தாளர் களுக்குத் தருகிற அதே அளவு முக்கியத்துவத்தை ஓவியர்களுக்கும் தந்து வந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. மரபு வழி ஓவியங்கள் அல்லாது, நவீன பாணி வகை ஓவியங்களுக்கும் விகடன் தன் வாசல் கதவைத் திறந்து வைத்தது இந்த ஆண்டுதான். இந்த ஆண்டு டிசம்பரில், 'ஆத்ம லயிப்பு' என்னும் சிறுகதைக்கு ஓவியர் மருது வரைந்த படம் இங்கே.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்