சினிமா
Published:Updated:

பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்

பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் கேள்வி பதில்
பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்
பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்
பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது?
பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்

கி.மாதவன், பொள்ளாச்சி.

ஏன், விளையாட்டு என்று வந்துவிட்டால், ஒவ்வொன்றிலும் அரசாங்கம் இப்படிச் சொதப்புகிறது? - லேட்டஸ்ட் செஸ் விஸ்வநாதனுக்கு டாக்டர் பட்டம்?!

ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், விளையாட்டுத் துறையைத் 'துட்டு பண்ணுகிற' இடமாக மாற்றிவிட்டதுதான் காரணம். உயிரைக் கொடுத்து உழைத்து, நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் யாரேனும் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்களா? வெகு காலமாகவே ஏதாவது போட்டிக்காக நான்கு ஸ்போர்ட்ஸ்மென் வெளிநாட்டுக்குப் போனால், 40 அதிகாரிகள் ஷாப்பிங் செய்வதற்குக் கூடவே போவார்கள். ஹாக்கி டீமே செலெக்ட் செய்யப்படாததால், காமன் வெல்த் போட்டியில் பங்கேற்பதே சந்தேகம் என்கிறார்கள். பெண் வீராங்கனைகள் மீது பாலியல் பலாத்காரம், இந்திய டென்னிஸ் வீரர்களுக்குச் சம்பள பாக்கி, காமன் வெல்த் 'சுருட்டல்'பற்றி கேட்கவே வேண்டாம். இப்போது 'விஸ்வநாதன் இந்தியரா?' என்று யாரோ அதிகப்பிரசங்கி கேட்டிருக்கிறார். இப்படிப்பட்ட கொடுமைகள் வேறு எந்த நாட்டிலும் நிகழாது!

பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்

..............., சென்னை-31.

என் காதலி என்னைச் சில சமயம் ரொம்ப மோசமாக நடத்துகிறாள். நான் செய்யாத தவறுக்காகக் கன்னாபின்னாவென்று திட்டுகிறாள். இருப்பினும் எனக்கு அவளிடம் கோபமே வருவதில்லை. ஏன் இப்படி? (அதுதான் காதல் என்று நழுவ வேண்டாம்).

பெயர் சொல்லவே பயப்படுகிறீர்கள் பாருங்கள்! அதாவது, கண்ணில் இருந்து இரண்டு ரோடுகள் போகின்றன. ஒன்று, மூளைக்குப் போய், பிறகே மற்ற இடங்களுக்குச் செல்கிறது. இன்னொரு ரோடு (பைபாஸ்?) ஒன்று உண்டு. அது கண்ணில் இருந்து நேராக இதயத்துக்குப் போகிறது. உங்களுடைய டிராஃபிக் இரண்டாவது வகை. ('அதுதான் காதல்' என்று இந்தப் பதிலை நான் முடிக்க விரும்பவில்லை!).

கே.எல்.ஸ்ரீமதி, திருச்சி-4.

எனக்கு நாய்களைப் பார்த்தால் பயம். அதற்கேற்ப நாயும் என்னைப் பார்த்தால் குரைக்கிறது! நாய்க்கும் பிடித்தவர், பிடிக்காதவர் என்று உண்டா?

கிடையாது! கொஞ்ச நாள் பழகினால், அதே நாய் உங்கள் மீது உயிரையேவைக்கும். நாய் குரைக்கக் காரணம் - நாயினால் உங்கள் பயத்தை முகர முடிகிறது - Dog can smell fear. நாயைத் தவிர, வேறு ஒரே ஒரு பிராணிக்கும் அந்த சக்தி உண்டு - குதிரை!

ஜெ.விக்னேஷ்வர், சென்னை-7.

சென்னையில் பூங்காக்கள் எல்லாம் அழகாக மாறி வருகின்றன. நீங்கள் ஏதாவது பூங்காவுக்குள் சென்று பார்த்தது உண்டா?

எட்டிப்பார்த்தது உண்டு! இதற்கு முக்கியக் காரணம், நம் மேயர் மா.சுப்பிரமணி யன். இப்படி நாள்தோறும் சுறுசுறுப்பாக 'ரவுண்டு' அடிக்கிற மேயரை இதுவரைநான் பார்த்தது இல்லை. துணை முதல்வர் ஸ்டாலின் இவருக்குப் பெரிய பக்க பலம் என்கிறார்கள். மேயர் மேலும் சாதிக்க, துணை முதல்வர் வழிகாட்ட வேண்டும். ஒரு விஷயத்தில் மட்டும் மேயர் வெற்றி பெற வில்லை. கொசுத் தொல்லை! கொசுக்களை முழுசாக ஒழிக்க, அவரைச் சில சக்திகள் அனுமதிக்காதோ என்று தோன்றுகிறது. இந்த விஷயத்தில் மேயர் வெற்றி பெற்றால், சென்னை வரலாற்றிலேயே மிகச் சிறந்த மேயர் இவர்தான் என்று புகழ் பெறுவார்! ஆனால், நடக்குமா?!

பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்

ரா.அன்பழகன், கோவை-4.

சாதாரணமாக, எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்புகூட எனக்குக் கிடைப்பது இல்லை. நான் துரதிருஷ்டசாலிதானே?

வாய்ப்பு என்கிற ஒரு கதவு மூடிக்கொள்ளும்போது, வேறு பல கதவுகள் திறக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த பழைய பொன்மொழிதான்! பலர் என்ன செய்கிறார்கள் என்றால், மூடிய கதவுக்கு அருகே, அதையே பார்த்துக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்தானே மற்ற கதவுகள் திறப்பது தெரியும்!

சுகந்தாவாசன், பெங்களூரு-20.

இந்தியர்களைப்போல 'நேரம் தவறாமை'பற்றி கவலையே படாத மக்கள் வேறு எந்த நாடுகளில் உண்டு?

எத்தனை நாடுகள் அப்படி என்று தெரியாது! ஏன்? தமிழ்நாட்டிலேயே, மறைந்த தொழில் - விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு மணி 11.23' என்று அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவிட்டு, கரெக்டாக அங்கே இருப் பவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். பிரான்ஸ் நாட்டில் எல்லோரும் 'லேட்'டாக வருவதால் பிரச்னை இல்லை. நான் மூன்று முறை கரெக்டாகப் போனால், இரண்டு தரம் லேட்டாகப் போகிறேன். மனசு கூசு கிறது. 'லேட்'டாகப் போவது ஆபத்தானது.

பிப்ரவரி 15, 1876-ல் அமெரிக்காவில் எலிஷா க்ரே என்பவர், ஒரு கருவியைக் கண்டுபிடித்துவிட்டு Patent office-ல் பதிவு செய்ய சாவ தானமாகச் சென்றார். 'அடடா! இரண்டு மணி நேரத்துக்கு முன்னால்தான் மிஸ்டர் கிரஹாம் பெல் என்பவர் இதே கண்டுபிடிப்புடன் வந்து பதிவு செய்துவிட்டாரே!' என்றார்கள். டெலிபோன்!

லீலா இராம், தக்கலை.

புகழ், செல்வம் - மனிதனுக்கு கட்டுக்குள் அடங்காத தாகம் எதில் அதிகம்?

செல்வம் கட்டுக்குள் அடங்கும். புகழ் அடங்காது. ஒரு கோடீஸ்வரர் என்னிடம் கேட்டார்... 'ஏதாவது சினிமாவில் ஒரே ஒரு ஸீனில் நான் வரும்படி செய்ய முடியுமா?!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

உங்கள் பிறவிப்பயனாக எதைக் கருதுகிறீர்கள்?

நான் கருதுவது ஒன்றுதான். பிறவி, பயனாக அமைய வேண்டும்!

பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்
பயந்தால் நாய் ஏன் குரைக்கிறது? - ஹாய் மதன்-கேள்வி பதில்