Published:Updated:

உயிர் மொழி! - 09

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 09


ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
உயிர் மொழி!  - 09
உயிர் மொழி!  - 09
உயிர் மொழி!
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 09

ண், பெண்ணை அடிமைப்படுத்திய கதை நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால்

பெண், ஆணைப் பதிலுக்கு அடிமைப்படுத்திய கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. லேசில் வெளியே தெரியாத ரகசிய உத்திகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப்பற்றி சொல்வதற்கு முன்னால், மார்கரெட் மேலரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

மார்கரெட் மேலர், ஹங்கேரியில் பிறந்து, அமெரிக்காவில் பணியாற்றிய ஒரு மனநல மருத்துவர். குழந்தைகளின் சமூக வளர்ச்சிபற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். தாய்-சேய் உறவில் பல நிலைகள் இருப்பதை அவர் கவனித்தார்.

உயிர் மொழி!  - 09

முதல் நிலை: பிறந்த குழந்தைக்குப் புற உலகம் புரியாது. அது பெரும்பாலான நேரத்தைத் தூக்கத்திலேயே செலவிடுகிறது. ஆனால், மூன்று மாதம் தாண்டிய பின், அதற்குத் தன் தாயை மிக நன்றாகத் தெரியும். ஆனால், தாய் என்பவள் வேறு... நான் என்பது வேறு என்பது குழந்தைக்குத் தெரியாது. 'நான் என்றால், அது நானும் என் அம்மாவும்' என்கிற அளவில்தான் அந்தக் குழந்தையின் செயல்பாடு இருக்கும். அம்மா தன்னுடன் இருந்தால்தான் தன்னால் இயங்கவே முடியும் என்று நினைப் பதால், வெளியாட்கள், அம்மா இல்லாத தனிமை என்றால், குழந்தை உடனே பயந்து அழும். அம்மா பக்கத்து அறையில் இருந்தாலும், தன் கண் எதிரே இருந்தால்தான் அவள் தன்னு டன் இருப்பதாக அர்த்தம் என்று எப்போதுமே தாயின் நேர டிப் பாதுகாப்பை நாடிக்கொண்டே இருக்கும்.

இரண்டாம் நிலை: ஆனால், இதே குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், பள்ளிக்கூடம், பக்கத்து வீடு, உறவினர்கள், நண்பர்கள் என்று வெளி உலக மனிதர்கள் பலரை அது சந்திக்கும். ஆக, அம்மாவைத் தவிரவும் இந்த உலகில் பல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களும் என்னைப் பாதுகாப் பவர்கள்தான் என்பதைக் குழந்தை உணரும். அதே சமயம், குழந்தையின் மூளையும் லேசாக முதிர்வதால், அம்மா என் பார்வை வளைவில் இப்போது இல்லை என்றாலும், என் வட்டாரத்தில் எங்கேயோ இருக்கத்தான் செய்கிறாள், தேவையானபோது அவள் பாதுகாப்புக்குள் தஞ்சம் புகுந்துகொள்ளலாம் என்கிற நம்பிக்கை குழந்தைக்கு வரும். இப்படித் தாயைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், அவளை மனதில்ஒரு பிம்பமாக உருவகப்படுத்தி, அவள் எப்போதும் என்னுடனே தான் நிரந்தரமாக இருக்கிறாள். அதனால், அவளைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டாம் என்கிற முதிர்ந்த நிலைக்கு குழந்தை வந்துவிடுகிறது. இதை ஆப்ஜெக்ட் கான்ஸ்டென்சி object constancy என்பார் மேலர்.

உயிர் மொழி!  - 09

மூன்றாம் நிலை: குழந்தை மேலும் அதிகமாக வளர்ந்து அதன் மூளை இன்னும் கொஞ்சம் முதிரும்போது, அதற்கு 'நான் என்பது வேறு. என் அம்மா என்பது வேறு' என்பது புரிந்துபோகும். தன்னை ஒரு தனி உயிரி யாகக் கருதி, தனக்கெனத் தனி அபிப்ராயம், தனி நம்பிக்கைகள், பிரத்தியேகமான ஒரு வாழ்க்கை என் றெல்லாம் குழந்தை யோசிக்க ஆரம்பிக்கும். அதனால், அது தாய்- தந்தையோடு முரண்படும். இப்படி தாயி டம் இருந்து பிரிந்து, தனக்கு என்று ஒரு தனி சுய அடையாளத்தைக் குழந்தை ஏற்படுத்திக்கொள்வதைத் தான் Separation-Individuation என்பார் மேலர். இப் படிப் பிரிந்து, தனித்துவமாவதுதான் எல்லா ஜீவராசிக் குட்டிகளுக்கும் இயல்பு. இந்த நிலையை அடைந்தால்தான், குட்டி எங்கு சென்றாலும், பிழைத்துக்கொள்ளும் பக்குவத்தைப் பெறும்.

மார்கரெட் மேலர் சொன்ன இந்தச் சங்கதி எல்லா உயிர்களுக்கும் பொது. பருவ வயதை அடையும்போதே எல்லாக் குட்டிகளும், 'எனக்கு என்று ஒரு தனிப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து, என் தனி ராஜ்யத்தை அமைத்துக்கொண்டு, இனி என் மரபணுக்களைப் பரப்பும் வேலையைப் பார்க்கிறேன்' என் கிற அணுகுமுறைக்கு மாறிவிடுகின்றன. இதே காலத்தில், எதிர் பாலின ஈர்ப்பும் மிக அதிகமாகி விடுவதால், துணை தேடி, இனம் சேரும் உந்துதலும் தலை தூக்கிவிடுகின்றன.

இதெல்லாம் இயற்கையின் அமைப்பு. காலங் காலமாக மனிதர்களும் இதற்கு உடன்பட்டார்கள். அவ்வளவு ஏன், இன்றும்கூட பெண்கள் அதிக சுதந்திரமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. ஆனால், எங்கெல்லாம் பெண்கள் இன்னும் அடிமைகளாக, இன்செக்யூராக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தம் பிழைப்பை அதிகரித்துக்கொள்ள, பெண்கள் இந்த விதியை அப் படியே மாற்றிவிடுகிறார்கள். தனக்கு அதிக பாது காப்பு தரும் குழந்தையை, எந்த வயதிலும்பிரிய விடாமல் தன்னுடனேயே தக்கவைத்துக்கொள்கிறார்கள்.

அம்மா இப்படிச் செய்தால், அவள் குழந்தைக்கு எங்கே போச்சாம் அறிவு?

ஆடு, மாடு, புலி, சிங்கம், அவ்வளவு ஏன், எலி, அணில் மாதிரியான ஐந்தறிவு ஜீவன்கள்கூடச் சரி யான பருவத்தில் தனித்துவமாகி, சுயமாக இயங்கும் போது, ஆறறிவு இருப்பதாக அலட்டிக்கொள்ளும் மனிதர்கள், இப்படி இன்னும் 'அம்மாவும் நானும் ஒண்ணு' என்று முதிராத நிலையிலேயே நிற்கும் மாயம் என்ன?

உயிர் மொழி!  - 09

விஷயம் இதுதான்... மனிதத் தாய் மட்டும் தன் குழந்தையின் மனதை முழுமையாக வளரவிடுவது இல்லை. தனக்குச் சேவை செய்ய ஒரு பணியாள், ஏவல் புரிய ஒரு தொண்டன், ஆபத் துகளில் இருந்து பாதுகாக்க ஓர் ஆயுதம், சம்பாதித்துத் தர ஓர் ஊழியன், பெருமைப் பட்டுக்கொள்ள ஒரு பொக்கி ஷம், முதுமைக் காலத்துக்கு ஒரு காப்பீட்டுத் திட்டம்... என்கிற அளவில் இயங்க மட் டுமே தன் மகனைப் பழக்கிவைக்கிறாள். மற்றபடி, தாயி டம் இருந்து பிரிந்து தனித்துவ மாகி என்கிற சமிக்ஞை லேசு பாசாகத் தென்பட்டாலும் உடனே, தன் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி, அதை எப்படி யாவது தடுத்துவிடுகிறாள்!

'எல்லா அம்மாக்களுக்கும் அப்படி இல்லை. எல்லா மகன்களும் அப்படி இல்லை' என்று ஆட்சேபிக்கத் தோன்றினால், நல்லவேளையாக அது உண்மை தான். எல்லா அம்மாக்களும் இப்படிச் சுயநலமாக இருப்பது இல்லை. எல்லா மகன்களும் இப்படி முட்டாளாக இருப்பதும் இல்லை. ஆனால், துர திர்ஷ்டவசமாக இன்றும் இந்தியத் திருமணங்கள் பல முறிய, பெரும் காரணமாக இருப்பது இப்படிப் பட்ட அப்நார்மல் அம்மாக்களும், முதிராத அவர் களின் மகன்களும்தான். இயற்கைக்கு விரோதமான இப்படிப்பட்ட அதிசய அம்மா - மகன் உறவுகள் எப்படி உருவாகின்றன என்பதை அலசாமல்விடுவது ஆபத்துதானே?

உயிர் மொழி!  - 09

அது சரி, இந்த அம்மாக்களிடம் அப்படி என்ன அஸ்திரங்கள் இருக்கின்றன? இப்படி மகன்களை விசித்திரமாகப் பழக்கிவைக்க அவள் என்னென்ன உத்திகளைப் பயன்படுத்துகிறாள்?

பெண்கள் பயன்படுத்தும் அஸ்திரங்கள் எல் லாமே மனம் சம்பந்தப்பட்டவை. அவை கண் ணுக்குத் தெரிவதே இல்லை. இயற்கையாகவே அமைந்த சில அம்சங்களை இவள் அஸ்திரங்களாகப் பயன்படுத்துவதால், அவை அஸ்திரங்கள் என்பதே நமக்கு ரொம்ப நேரத்துக்குப் புரிவது இல்லை.

இப்படிப் பெண்கள் பயன்படுத்தும் இந்த improvised weapons என்ன என்ன என்று தெரிந்துகொள்ளக் காத்திருங்கள்.

உயிர் மொழி!  - 09
உயிர் மொழி!  - 09
(காத்திருங்கள்...)