ஸ்பெஷல் -1
Published:Updated:

லட்ச ரூபாய் நடிகை!

லட்ச ரூபாய் நடிகை!


விகடன் பொக்கிஷம்
லட்ச ரூபாய் நடிகை!
லட்ச ரூபாய் நடிகை!
லட்ச ரூபாய் நடிகை!
லட்ச ரூபாய் நடிகை!
லட்ச ரூபாய் நடிகை!

ந்தியாவில் முதன்முதலாக ஒரே படத்தில் நடிக்க ஒரு லக்ஷ ரூபாய் ஊதியமாகப்

பெற்றார் என்ற தனிப் பெருமை ஸ்ரீமதி கே.பி. சுந்த ராம்பாளுக்கு உரியதாகும். ஸ்ரீமதி சுலோசனா மாதச் சம் பளமாக ஐயாயிரம் ரூபாய் வாங்குகிறார் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், 'ஆ' என்று ஆச்சரியமுற்றனர் பலர். ஸ்ரீமதி சுந்தராம் பாளுக்கு ஒரு லக்ஷ ரூபாய் என்றதும் அத்தகையோர்கள் தம் காதுகளையே நம்பியிருக்க மாட்டார்கள் என்பது திண் ணம். "மேநாட்டு நடிகன்கூட முதன்முதலில் இவ்வளவு பெருந்தொகையைக் கண்டிருக்க மாட்டார்களே! இது வாஸ்தவமாக இருக்குமா?" என்று ஐயுற்றனர் சிலர். ஆனால், ஸ்ரீமதி சுந்தராம்பாள் ஒரு படத்திற்கு லக்ஷ ரூபாய் பெற்றது உண்மைதானென்று தெரிந்தபோது, அந்தப் பெருமையடைந்தது ஒரு தமிழ் நடிகையென்பது குறித்துத் தமிழ்நாட்டார் பெருமகிழ்ச்சிஅடைந்தார்கள்.

லட்ச ரூபாய் நடிகை!

இத்தகையதோர் அரிய சந்தர்ப்பத்தைத் தம் வாழ்க்கையில் பெற்ற ஸ்ரீமதி சுந்த ராம்பாளின் ஜீவிய சரிதம் மிகவும் ருசிகரமானதாகும். இவர் திருச்சி ஜில்லாவைச் சேர்ந்த கரூரில் பிறந்தவர். ஆனால், இவர் வளர்ந்தது கொடுமுடியில்! சிறு பெண் ணாயிருக்கும்போதே, இவர் நன்றாகப் பாடுவா ராம். யாராவது பாடினால், அதை சூக்ஷ்மமாகக் கவனித்து, அதுபோலவே தாமும் திரும்பப் பாடுவாராம்.

தக்க வயது வந்ததும் இவர் நாடக மேடையில் தோன்றினார். இவருடைய புகழ் நாளடைவில் பெருகி வந்தது. காலஞ்சென்ற ஸ்ரீமான் எஸ்.ஜி.கிட்டப்பா, கன்னையா கம்பெனியிலிருந்து பிரிந்து இவரோடு சேர்ந்து தனி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர், ஸ்ரீமதி சுந்தராம்பாளின் பெயர் பிரசித்தமாயிற்று. ஸ்ரீமான் கிட் டப்பாவும், ஸ்ரீமதி சுந்தராம்பாளும் நாளுக்கு நாள் நல்ல பெயர் பெற்று வந்தனர். வெண்ணெய் திரண்டு வரும் சமயம் தாழி உடைந்ததென்பதைப்போல், அவர்களுடைய புகழ் உச்ச நிலைமையில் இருந்த சமயத்தில், ஸ்ரீமான் கிட்டப்பா காலமானார். ஸ்ரீமான் கிட்டப்பாவை மணம் புரிந்த பதியாகவே கருதி ஒழுகி வந்த ஸ்ரீமதி சுந்தராம்பாள் சோகக் கடலில் ஆழ்ந்தார். அவரது அஸ்தியைக் கங்கையில் கரைத்துவிட்டு வந்து ஏழைகளுக்கு அன்னமளித்தார்.

லட்ச ரூபாய் நடிகை!

ஸ்ரீமான் கிட்டப்பாவின் பிரிவிற்குப் பின், அவரது வாழ்வில் ஒரு மாறுதல் ஏற்பட்டது.

லட்ச ரூபாய் நடிகை!

"இனி வேறெந்த ஆண் நடிகருடனும் பெண் வேடத்தில் தோன்றுவதில்லை. இனி, சுக சௌக்யங்கள் எதுவும் எனக்குத் தேவையில்லை" என்ற விரதம் பூண்டார். தூய வெள்ளைக் கதராடையே அணியத் தொடங்கினார். தம்மாலியன்ற அளவில் தேசத் தொண்டும் செய்து வருகிறார்.

ஸ்ரீமதி சுந்தராம்பாள் நாடக மேடையில் பிரபலமானது தவிர, கிராமபோன் சங்கீதத்திலும் பெயர் பெற்றார். கொலம்பியா கிராமபோன் கம்பெனியில் இவர் பல பிளேட்டுகள் கொடுத்திருக்கிறார். அவை ஏராளமாக விற் பனையாகியிருக்கின்றன. முக்கியமாக, 'பண்டித மோதி லால் நேரு' மரணத்தைப் பற்றி அவர் கொடுத்த பிளேட் டைப் போல அவ்வளவு விற்பனையான பிளேட் வேறில்லையென்றே சொல்லலாம்.

லட்ச ரூபாய் நடிகை!
லட்ச ரூபாய் நடிகை!