Published:Updated:

உயிர் மொழி! - 15

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 15

உயிர் மொழி!  - 15
உயிர் மொழி!  - 15
உயிர் மொழி!  - 15
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 15

பெண்கள் காலத்துக்கு ஏற்ப வரையறைகளை மாற்றி கலவியல் தேர்வு செய்தார்கள்.

இதை அனுசரித்து கெட்டிக்கார ஆண்களும் தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டே வந்தார்கள். இப்படி மாறி வந்த ஆண்களின் மரபு அணுக்கள் பரவின. மாறாத ஆண்களின் மரபு அணுக்கள் மறைந்துபோயின. 'இவை எல்லாம் கேட்க கோவையாகத்தான் இருக்கிறது. ஆனால், என்ன ஆதாரம்' என்கிறீர்களா? அதில் ஒளிந்திருக்கிறது சுவாரஸ்யம்!

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். பெண்கள் வேட்டைக்குப் போனார்களா? அது ஆண்களின் வேலை அல்லவா என்று ஆச்சர்யம் எல்லாம் படக் கூடாது. எல்லா விலங்குகளிலும் ஆணைவிடப் பெண்தான் அதிக வேட்டுவத் தன்மைகொண்டு இருக்கும். கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் அப்பிராணி, கடிக்காது. ஆனால் பெண், துரத்தித் துரத்திக் கடித்து மலேரியாவைப் பரப்பும். காரணம், பெண்ணுக்குத்தான் தன் குட்டிகளைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத் திறன், அதிக பார்வைக் கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித் திறன், அவ்வளவு ஏன்... துரித கதியில் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றைத் தகவமைத்து இருக்கிறது. இந்தப் புலன் நுணுக்கத்தினாலேயே ஆணைவிட, பெண் அதிக திறமையுடன் வேட்டையாட முடிகிறது.

உயிர் மொழி!  - 15

மனிதர்களுக்கும் இந்தப் பொது விதி பொருந்தும் என்பதால், ஆதிகால மானுடப் பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாக இரை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுடக் கூட்டங்களைப் பெண் தலைவிகளே வழி நடத்திச் சென்றார்கள். ஆக, பெண்கள் எதற்குமே ஆண்களை நம்பி வாழாத காலம் அது. அப்படி ஒரு காலம் இருந்ததா? இதற்கு என்ன ஆதாரம்?

ஆதாரம்-1 காங்கோ நதிக்கரை ஓரமாக இன்றும் வாழ்ந்து வருகிறது பொனோப்போ என்ற வானர இனம். இந்த பொனோப்போக்கள் அச்சு அசல் மனிதர்களைப்போலவே நடந்துகொள்ளும். இவை தமக்குள் பேசிக்கொள்கின்றன. பயிற்றுவித்தால், சைகை மொழியில் மனிதர்களுடனும் உரையாடுகின்றன. இவற்றுக்கு சிரிப்பு, அழுகை, வேடிக்கை, விளையாட்டு எல்லாமே உண்டு. இவற்றைவிட விசேஷம், இவை கலவிகொள்ளும் விதம் அப்படியே மனிதர்களைப் போலவே இருக்கிறது.

மனிதர்களைப்போலவே என்றால் என்ன அர்த்தம்? மிருக கலவிக்கும், மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. எல்லா மிருகங்களும் முகமே பாராமல்தான் கூடிப் புணரும். அதுவும் இனப்பெருக்க காலத்தில் மட்டும். எந்தவித சுகமும் உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்புச்சப்பு இல்லாத சம்பிரதாயமாக இருக்கும். ஆனால், முகம் பார்த்து, இன்னாருடன் உறவுகொள்கிறோம் என்று அறிந்து, பருவ காலம் மட்டும் அல்லாமல், தனக்குப் பிடிக்கும்போது எல்லாம் ஆசைக்காக உறவுகொள்ளும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்குத்தான் உண்டு. ஒன்று, மனிதன். இன்னொன்று, பொனோப்போ. நடத்தையிலும் மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறது என்றால், மரபு அணுக்களில்? பரிசோதனை செய்துபார்த்தால் ஆச்சர்யம். ஆனால், உண்மை. பொனோப்போக்களின் மரபு அணுப் புரதங்கள் 98 சதவிகிதம் மனிதர்களைப்போலவே இருப்பதைக் கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள். ஆக, மரபு அணுரீதியில் பார்த்தால் மனிதர்களும், பொனோப்போக் களும் சகோதர இனங்கள். இவற்றுக்குள் இனக் கலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்கக்கூட வாய்ப்பு இருக் கிறது.

ஆனால், இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன. இவை மட்டும் அல்ல; நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பன்சிகளும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன. அப்படியானால், மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூக முறையைத்தான் கடைபிடித்து இருப்பார்கள் என்றுதானே அர்த்தம்!

உயிர் மொழி!  - 15

ஆதாரம்-2 இன்றும் மனிதர்களுக்கு அம்மா சென்டிமென்ட்தான் பலமாக இருக்கிறது. அப்பா சென்டிமென்ட் அத்தனை ஸ்ட்ராங்க் இல்லை!

ஆதாரம்-3 தொல்காப்பியம் மாதிரியான பண்டைய இலக்கண நூல்களும், மனிதர்கள் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூகமாகத்தான் வாழ்ந்தார்கள் என்கிறது!

ஆதாரம்-4 தொன்மையான எல்லா கலாசாரங்களிலும் ஆரம்ப காலத்தில் தாய் தெய்வங்களே இருந்து உள்ளன. இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்தது இல்லை. உதாரணம், தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும் வேட்டுவ தெய்வமாகவும் வணங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள்தான் பிரதான கடவுள். அதன் பிறகு, இவள் வனகாளியாக மாறி, வேலனுக் குத் தாய் ஆகி, அப்புறம் சிவனின் மனைவி ஆனது எல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.

அது எல்லாம் சரி, நம்ம சங்கதிக்கு வருவோம். கொற்றவை காலத்துப் பெண் ஒருத்தியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இவள், தானே வேட்டைக்குச் செல்வாள். பெண் வழி சமூகமாக வாழ்ந்த தால் இவள் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இவளுக்கு சொத்துக்கள் எதுவும் கிடையாது. ஆக, எதற்காகவும் ஓர் ஆணை அண்டிப் பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இவள் இல்லை. இப்படி வாழும் இந்தப் பெண் எதற்காக ஓர் ஆணை நாடுவாள்? சிம்பிள்... அந்த ஆணால்

உயிர் மொழி!  - 15

அவளுக்கு ஏற்படும் கலவியல் கிளர்ச்சிக்காக மட்டுமே. அந்தக் காலத்தில் தனிச் சொத்து என்கிற சமாசாரமே இல்லை. அதனால் கற்பு என்கிற நம்பிக்கையும் இல்லை. அதனால் பெண்கள் தமக்குப் பிடித்த ஆண்கள் பலரோடு கூடி மகிழ்ந்தார்கள். இப்படி ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் இந்த முறையைத்தான் பாலி ஆண்ட்ரி (poly andry) என்போம்.

இப்படி பாலி ஆண்ட்ரி புரியும்போது, பல ஆண்களோடு கூடி தனக்கு அதிக சுகத்தைத் தருகிறவன் யார் என்பதைக் கண்டுகொள்ள பெண்களுக்கு வாய்ப்பு இருந்ததால், அவளை மகிழ்விக்கத் தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் கூடினாள். இதனால், பெண்களை மகிழ்விக்கத் தெரிந்தவனின் மரபு அணுக்கள் மட்டுமே பரவின. மகிழ்விக்கத் தெரியாதவர்கள் மரபு அணு ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால், ஒரு கூட்டத்தில் பல ஆண்களுக்குப் பெண்ணை மகிழ்விக்கத் தெரிந்து இருந்தால், இவர்களுக்குள் போட்டி ஏற்படுவது இயல்புதானே. அதனால், ஒருவரை அடுத்தவர் மிஞ்சிவிட ஆண்கள் முயல, காலப்போக்கில் மனித ஆண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதுபற்றி அடுத்த வாரம்!

உயிர் மொழி!  - 15
உயிர் மொழி!  - 15
(காத்திருங்கள்)