மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 15

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 15

மனம் கொத்திப் பறவை! - 15
மனம் கொத்திப் பறவை! - 15
மனம் கொத்திப் பறவை! - 15

ந்தத் தொடரில் நான் குறிப்பிடும் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று பல

வாசகர்கள் கேட்கின்றனர். அவை இங்கு உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்காது. லண்டனில் உள்ள Foyles என்ற கடையில்தான் கிடைக்கும். உலகத்திலேயே மிகச் சிறந்த புத்தகக் கடை அது. அல்லது, Flipcart மற்றும் amazon.com என்ற இணையதளங்களில் வாங்கலாம். நம் நாட்டில் உள்ள புத்தகக் கடைகள் இரண்டு விஷயங்களில் எனக்கு எரிச்சல் ஊட்டுகின்றன.

1. பிரபலமான ஆங்கில எழுத்தாளர்களை மட்டும்தான் வைத்திருக்கிறார்கள். 2. தமிழ் நூல்களை அவமதிக்கிறார்கள். 5 ஆயிரம் புத்தகங்கள்கொண்ட புத்தகக் கடையில், தமிழ்ப் புத்தகங்கள் 50 அல்லது 100தான் இருக்கின்றன. அதுவும் 'எப்படி?' புத்தகங்களாக (சாம்பார் செய்வது எப்படி?) உள்ளன. உலகில் எந்த இடத்திலுமே இப்படி ஓர் அநியாயத்தைப் பார்க்க முடியாது. பாரிஸில் ஃபிரெஞ்சு, பெர்லினில் ஜெர்மன், லண்டனில் ஆங்கிலம், பெய்ஜிங்கில் சீனம், டோக்கியோவில் ஜப்பானிய மொழிப் புத்தகங்கள்தான் கடைகளில் கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பது இல்லை. தமிழ் ஆர்வலர்கள் இதற்கு எல்லாம் போராட மாட்டார்களா?

மனம் கொத்திப் பறவை! - 15

காலடியில் மசாஜ் செய்துகொள்ளும்போது லங்கோடு கட்டிக்கொள்ள வசதியாக அரைஞாண் கட்ட வேண்டியிருக்குமே என்று பயந்துகொண்டு இருந்தேன். நவீன காலத்தில் காணாமல் போன விஷயங்கள் லங்கோடும் அரைஞாணும். அரை என்றால் இடுப்பு. ஞாண் என்றால் கயிறு. ஆனாலும், ஏன் அரைஞாண் கயிறு என்கிறார்கள் என்று நெட்டில் தேடினேன். மதுரைக்காரர் மருதன் ஓர் அருமையான வலைப்பூ வைத்துக்கொண்டு தமிழ் வளர்க்கிறார். அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் இருந்துகொண்டு திருமுருகாற்றுப் படையில் இருந்து திவ்யப் பிரபந்தம் வரை அட்டகாசமான தமிழில் அலசுகிறார். அரைஞாண் கயிறுக்கு - ஸாரி - அரைஞாணுக்கு கவுண்டமணியும் செந்திலும் பேசிக்கொள்வது மாதிரி ஒரு விளக்கம். படித்து இன்புறுங்கள்: http://koodal1.blogspot.com காலடி வந்ததும் என் அரைஞாண் பிரச்னை தீர்ந்தது. அவர்கள் கொடுக்கும் லங்கோடு கூடவே அரைஞாணும் இருந்தது. மசாஜ் செய்தவர் என் தொழிலைக் கேட்டார். சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. கேரளத்தில் எழுத்தாளர் என்றால் எப்படி இருப்பார்கள் என்று சொன்னார். நீண்ட முடி, தாடி, ஜிப்பா, பீடி, சமயத்தில் கஞ்சா. இதுதான் மலையாள எழுத்தாளரின் அடையாளம். நானோ மொட்டையில் இருந்தேன். எப்படி நம்புவார்?

மனம் கொத்திப் பறவை! - 15

இந்த ஆயுர்வேத மையத்தில் ஒரு பெரிய சாப்பாடுக் கூடம் உள்ளது. 50 பேர் சாப்பி டலாம். எல்லாம் பத்தியச் சாப்பாடு. எப்போதும் நான் பந்திக்கு முந்தி என்பதால், அவ்வளவு பெரிய ஹாலில் தனியாக ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது உள்ளே நுழைந்த ஓர் இளம் பெண், என் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரலாமா என்று கேட்டு அமர்ந்தார். இந்தியப் பெண் இல்லை. இங்கே பஞ்சகர்மா செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் வெளி நாட்டுக்காரர்கள்தான். ஒன்றிரண்டு பேர்தான் வட இந்தியர். அந்தப் பெண்ணின் பெயர் நடாலியா. ரஷ்யா. அப்போது இன்னொரு வெள்ளைக்காரர் வந்து என்னுடைய இன்னொரு பக்கத்தில் அமரலாமா என்று கேட்டு அமர்ந்தார். அவர் ஜெர்மன்காரர். மூவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். மறுநாள் அந்த டைனிங் ஹாலில் ஒரு சம்பவம் நடந்தது. வழக்கம்போல் முதல் ஆளாக மூலையில் அமர்ந்தேன். அப்போது ஒரு வட இந்தியர் வந்தார். என் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்துவிட்டு, எதிர் மூலையில் போய் உட்கார்ந்துகொண்டார். இதை நான் ஐரோப்பிய நகரங்களிலும் பார்த்து இருக்கிறேன். பஸ்ஸில் அவ்வளவாகக் கூட்டம் இல்லாமல் நாம் தனியாக அமர்ந்திருந்தால், அதில் ஏறும் நபர் - அவர் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் - ஹலோ சொல்லிவிட்டு நம் பக்கத்தில் வந்து அமர்வார்கள். இந்தியர்களுக்கு மட்டும் ஏன் மனித வாடையே பிடிக்க மாட்டேன் என்கிறது?

1995-ல் அந்த எழுத்தாளருக்கு நாட்டின் மிக உயர்ந்த இலக்கியப் பரிசு கிடைக்கிறது. அதற்கு வாழ்த்து சொல்வதற்காக அவர் வீட்டின் முன்னே நீண்ட க்யூ. அந்த வரிசையில் ஒருவர் நின்றுகொண்டு இருக்கிறார். 'ஐயோ, நீங்கள் க்யூவில் நிற்க வேண்டாம். முன்னால் செல்லுங்கள்!' என்கிறார்கள் மக்கள். அதை மறுத்துவிட்டு க்யூவிலேயே நின்று எழுத்தாளரைச் சந்தித்துப் பாராட்டு தெரிவிக்கிறார் அந்த நபர். இது ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் நடந்தது அல்ல; கேரளாவில் நடந்தது. பாரதிய ஞானபீடப் பரிசு எம்.டி.வாசுதேவன் நாயருக்குக் கிடைத்தபோது, அவர் வீட்டின் முன்னே க்யூவில் நின்றவர் அப்போதைய முதல்வர் ஈ.கே.நாயனார். அதுவும் நாயனார்தான் கேரளத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்.

மனம் கொத்திப் பறவை! - 15

இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே, மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குரூப்புக்கு ஞானபீடப் பரிசு கிடைத்துள்ள செய்தி வந்திருக்கிறது. ஞான பீடம் நிறுவப்பட்டதும் அதன் முதல் பரிசை 1965-ல் வாங்கியவர் மலையாளக் கவிஞர் ஜி.சங்கர குரூப். இதுவரை மலையாளத்துக்கு ஐந்து, வங்காளத்துக்கு ஐந்து, இந்திக்கு ஏழு, கன்னடத்துக்கு ஏழு ஞானபீட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரத்தைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு பிராந்திய மொழியான கன்னடம், இந்தியாவின் பெரும்பான்மை மொழியாகிய இந்திக்குச் சமமாக ஏழு முறை இந்த விருதை வாங்கியுள்ளது. ஆனால், தமிழுக்கு இரண்டே முறைதான் (அகிலன், ஜெயகாந்தன்) கிடைத்துள்ளது. இந்த விருதுக்குத் தகுதியான நகுலன், ஆதவன், லா.ச.ரா, ப.சிங்காரம், கு.ப.ராஜ கோபாலன், எம்.வி.வெங்கட்ராம், தர்மு சிவராமு, க.நா.சு., சுஜாதா என்று யாருக்குமே கிடைக்கவில்லை. காரணம் என்ன? சிலைவைப்பதையும், பெயர் மாற்றுவதையும்தான் நாம் தமிழ் வளர்ச்சி என்று நினைக்கிறோம். ஞானபீட விருதுக்குப் பரிந்துரை செய்யும் நம்மவர்கள் சரியான பெயர்களை அனுப்புவது இல்லை. தமக்கு வேண்டியவர்களையும் தகுதி இல்லாதவர்களையும் சிபாரிசு செய்வதால், டெல்லியில் அந்தப் பெயர்கள் காணாமல் போய்விடுகின்றன. மலையாளத்திலோ, கன்னடத் திலோ, அப்படி நடப்பது இல்லை. தகுதியானவர்கள் மட்டுமே அங்கே பரிந்துரை செய்யப்படுகிறார்கள். இப்போதாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். இந்த விருதுக்குத் தகுதியான அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன் போன்ற ஆளுமைகள் இன்னமும் தமிழில் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள், இப்போது இந்த விருதை வாங்கியிருக்கும் ஓ.என்.வி.குரூப்பைவிட சாதனை படைத்தவர்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்!

ண்ணதாசனைப்போல் வாழ்ந்த நீ இப்போது இப்படி ஆகிவிட்டாயே என்று என் மனசாட்சி அடிக்கடி கேட்டாலும், வேலைவெட்டி இல்லாத வர்களே குடிக்கிறார்கள் என்ற உண்மையைச் சமீபத் தில் நன்றாகப் புரிந்துகொண்டேன். அதாவது, எந்தக் காரணம்கொண்டும் தள்ளிப்போட முடியாத வேலை யில் ஈடுபட்டு இருப்பவர்களால் குடிக்க முடியாது. மேலும், அந்த வேலை உங்களுக்குப் பிடித்த வேலையாகவும் இருக்க வேண்டும். விகடன் தவிர்த்து, மூன்று மலையாள வாரப் பத்திரிகைகளில் எழுதி வருவதால், மற்ற சந்தோஷங்களைப்பற்றி என்னால் நினைக்கவும் முடியவில்லை. இருந்தாலும், என் மன உறுதியைச் சோதித்துப்பார்க்க பெங்களூரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. நண்பருடன் கிளம்பினேன். மாலை 5 மணி. பைக்கின் பின்னால் அமரப்போகும் எனக்கும் சேர்த்து அவரிடம் ஹெல்மெட் இல்லாததால், ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்தேன். நண்பர் குடிக்கும் பழக்கம் இல்லாதவர். "நீங்கள்தான் குடியை விட்டுவிட்டீர்களே? அப்புறம் ஏன் பப்?" என்று கேட்டார். காரணத்தைச் சொன்னேன். ஒரு பப்பில் அல்லது பாரில் போய் உட்கார்ந்துகொண்டு, நம்மால் குடிக்காமல் இருக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.

மனம் கொத்திப் பறவை! - 15

நம்ப மாட்டீர்கள். இரவு 9.30 மணி வரை ஒரு பப்பைக்கூட பெங்களூரில் காண முடியவில்லை. பல பப்களில் மராமத்து வேலை நடந்துகொண்டு இருந்தது. சில பப்களை முழுசாக இடித்துவிட்டுக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். ஒரு சில பப்களில் பியர் மட்டும் கிடைக்கும் என்றார்கள். நான் ஆரஞ்சு ஜூஸ் கேட்டால், விநோதமாகப் பார்த்தார்கள். நான்கரை மணி நேரம் ஆட்டோவில் பெங்களூர் முழுவதும் சுற்றினோம். 'எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு போன்ற இடங்களில் இளம் பெண்கள் எல்லாம் குடித்துவிட்டு ஆட்டம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டேனே; பெங்களூரு திருந்திவிட்டதா?' என்ற சந்தேகம் ஏற்பட்டது.

கடைசியில், நான் தங்கியிருந்த கோரமங்கலாவிலேயே ஒரு சின்ன பார் - பப் அல்ல - அகப்பட்டது. நண்பர் நொந்துபோனார். இரண்டு பேரும் ஆரஞ்சு ஜூஸும், காய்கறி சாலட்டும் சாப்பிட்டோம். எங்கள் எதிரே ஒரு பெண் பெக் பெக்காக ஊற்றிக்கொண்டும் புகைத்துக்கொண்டும் இருந்தாள்.

மனம் கொத்திப் பறவை! - 15

திரும்பி வரும்போது ஆட்டோக்காரரிடம் கேட்டேன். 'அரசியல்தான் காரணம்' என்றார். 'என்னது, அரசியலா?' ஆமாம்; பா.ஜ.க. ஆட்சியில் இது போன்ற 'கலாசாரச் சீரழிவுகளை' ஊக்குவிப்பது இல்லையாம். அதோடு, பப்களில் நடக்கும் அடிதடியும் ஒரு காரணம். போதாக்குறைக்கு சமீபத்தில் ஒரு கொலை வேறு நடந்திருக்கிறது. ஆட்டோக்காரர் வேறொன்றும் சொன்னார். "முன்பெல்லாம் பெண்கள் ஃபுல் மப்பில் வந்து ` 50-ல் செல்லும் தூரத்துக்கு ` 800, ` 1,000 கொடுப்பார்கள். அந்த வருமானம் போய்விட்டது!" என்றார். ஆனால், வருமானம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்கிறதாம். ஏன்? சுயநினைவே இல்லாமல் வரும் அவர்களுக்கு, வேறு யார் மூலமாவது ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் ஆட்டோக்காரர்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? அந்தப் பிரச்னை இப்போது இல்லை!

மீபத்தில் மதுரை சென்றிருந்தேன். காலையில் நான்கு மாசி வீதிகளையும் சுற்றினால்போதும்; நான்கு கி.மீ. ஆயிற்று. அப்படிச் சுற்றி வந்தபோது, வடக்கு மாசி வீதியில் நான் பார்த்த ஒரு காட்சி எனக்கு கலாசார அதிர்ச்சி. அங்கு இருந்த பெண்கள் பள்ளியின் வாசலில் ஒரு திறந்த வெளி டாய்லெட் இருந்தது. ஆளாளுக்கு நின்று அடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, மதுரை மட்டுமல்ல; திருநெல்வேலி, திருச்சி என்று எல்லா நகரங்களிலுமே பொதுமக்களுக்குச் சரியான கழிப்பறை வசதி இல்லை. மகா கேவலம். சரி, பெண்கள் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார்கள்? சென்னையிலும் சரியான கழிப்பறை வசதி இல்லை என்றாலும், யாரும் தெருவில் நின்று அடிக்க முடியாதபடி எங்கு திரும்பினாலும், இங்கே ஒரு கடை இருக்கும். சென்னைவாசிகளுக்கு ஒரே ஆறுதல், இங்கு உள்ள ஹோட்டல்களில் கழிப்பறை வசதி உண்டு.

மதுரையில் என்னைக் கவர்ந்த விஷயம், அங்கே உள்ள உணவகங்கள். காலை டிபனுக்கு மேலமாசி வீதி சபரி. மாலையில் பஜ்ஜி வடைக்கு, வடக்கு மாசி வீதி மூலையில் உள்ள கோபி ஐயங்கார் கடை. உச்சந்தலை முடியைப் பிடித்து இழுக்கும் கார சட்னிக்காகவே இங்கே போகலாம். குமார் மெஸ், அருளானந்தம் மெஸ், கோனார் மெஸ், பேச்சுலர் பாய்ஸுக்கு காக்கா தோப்புத் தெரு ஸ்ரீராம் மெஸ், நள்ளிரவிலும் சுடச் சுட தோசை கிடைக்கும் அக்கா கடை எல்லாவற்றிலும் உண்டு மகிழ்ந்தேன். ஆனால், அய்யனார் தோசைக் கடையைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே வெள்ளைக்கரு முட்டை தோசை அட்டகாசமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார் சங்கர். தேர்முட்டியில் நின்றுகொண்டு பலரையும் விசாரித்தேன். கிடைக்கவில்லை.

ஒருநாள் என்னைப் பார்க்க ஒரு மதுரை நண்பர் வந்தார். எதில் வந்தீர்கள் என்று கேட்டபோது, பஸ்ஸில் என்றார். மதுரையில் மோட்டார் சைக்கிளே ஓட்ட முடியவில்லையாம். அந்த அளவுக்கு ஷேர் ஆட்டோக்கள் பெருத்துவிட்டன. "எல்லாம் கவுன்சிலர்களுடையது. யாரும் தட்டிக்கேட்க முடியாது. கேட்டால், அண்ணனைக் காண்பிக்கிறார்கள்!" என்றார். அவர் ஒரு தீவிர தி.மு.க தொண்டர். ஆனாலும், ஆட்சி மாற வேண்டும் என்றே விரும்புவதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டேன். "போலீஸே இல்லாத நாடு மாதிரி இருக்கிறது. ஆளாளுக்குத் தண்டல்காரராகிவிட்டார்கள். தாங்க முடியவில்லை!" என்றார்.

சைக்கு மொழி கிடையாது. சமுத்திர சத்தத்தில் இருந்து குழந்தையின் சிணுங்கல் வரை இசைதான். சொற்களின் அர்த்தம் புரியாவிட்டாலும் இசை நம் மனதைத் தொடவே செய்கிறது. இன்றைய இசை உலகில் கொடி கட்டிப் பறப்பது அரபி மொழியில் பாடப்படும் ரய் (rai) இசைதான். இது அல்ஜீரியாவில் உருவானது. காலீத் (Khaled) பாடிய 'தீதீ...தீதீ' என்ற ரய் பாடல் இந்தியாவில் பிரபலம். ஆனால், ரய் இசையின் தர

மனம் கொத்திப் பறவை! - 15

வரிசையில் காலீத் மிகவும் கீழே இருப்பவர். Cheb Hasni, Cheb Mami, Amr Diab, Nancy Ajram போன்ற ரய் பாடகர்களை யூ டியூபில் கேட்டுப்பாருங்கள். (Cheb என்பதை ஷாப் என்று உச்சரிக்க வேண்டும். அரபியில் ஷாப் என்றால் பாடகர்). இவர்களில் தியாப் எகிப்தைச் சேர்ந்தவர். இந்தியில் அக்‌ஷய் கன்னா நடித்த 'நக்காப்' என்ற படத்தில் வரும் 'ஏக்தின் தேரி ராஹோ(ங்) மே' என்ற புகழ் பெற்ற பாடல், தியாப் பாடிய ஓர் அரபி பாடலில் இருந்து சுட்டதுதான். ஓர் இம்மிகூடப் பிசகாமல் அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்திருப்பவர் இந்தி இசையமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி. தியாபின் 'ஹபீபி யா நூர் எல் அய்ன்' என்ற பாடலைக் கேட்டு ஆடாதவர்களே இருக்க முடியாது.

http://www.youtube.com/watch?v=J-w8JyjO7ag (இந்த இணைப்பில் இந்தி இசையமைப்பாளர் சுட்ட ஏ.எம்.ஆர். தியாபின் ஒரிஜினல் அரபி ரய் பாடலைக் கேட்கலாம்!)

மனம் கொத்திப் பறவை! - 15
மனம் கொத்திப் பறவை! - 15
(பறக்கும்...)