Published:Updated:

உயிர் மொழி! - 05

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 05

உயிர் மொழி!  - 05
உயிர் மொழி!  - 05
உயிர் மொழி!  - 05
உயிர் மொழி!  - 05
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 05

மிழக முதல்வர் எப்போது தொலைக்காட்சியில் தோன்றினாலும், அவருக்கு வலது

பக்கமாக ஆளுயரப் பெண் சிலை ஒன்று தெரியும். அவருடைய அம்மா அஞ்சுகத்தின் சிலை அது. தலைவருக்குத் தாய்ப் பாசம், அதனால் அம்மாவின் நினைவாக தத்ரூபமான சிலையைத் தன் பக்கத்திலேயே வைத்திருக்கிறார். ஆனால் ஒன்று கவனித்தீர்களா? முதல்வர் அவருடைய அப்பாவுக்கு ஒரு சிலையை வைக்கவே இல்லையே? ஏன்? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்கூட அன்னை சத்யாவின் பெயரில் அத்தனை ஸ்தாபித்தார். ஆனால், அப்பா கோபால னின் பெயரை எந்த நிறுவனத் துக்கும் வைக்கவில்லையே, ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அம்மா என்று அழைக்காத உயிரில்லையே' என்று உருகி உருகிப் பாடினாரே, அப்பாவைப்பற்றி ஒரு வரிகூடப் பாடவில்லையே, ஏன்? இவர்கள் என்ன? அனைவ ருக்குமே அவர்கள் அம்மாதான் தெய்வம். அம்மா சென்ட்டி மென்ட்தான் உலகின் உச்சகட்ட சென்ட்டிமென்ட். உலகம் எங்கும் மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன்? இந்தக் கேள்விக்குப் பலர் பல பதில்களை முன்வைக்கிறார்கள்.

உயிர் மொழி!  - 05

சிக்மென்ட் ஃப்ராய்ட் சொன்ன பதில்தான் உலகை உலுக்கிய முதல் பதில்... எல்லா ஆண் குழந்தைகளுக்குமே தன் தாய்தான் முதல் காதலி. இரண்டு, மூன்று வயதில் இவளை ரசித்து, இவள் எனக்கே எனக்குத்தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் ஆண் குழந்தைகள். இதை எடிபெஸ் காம்ப்ளெக்ஸ் என்றார் ஃபிராய்ட். அநேகமான ஆண்கள் ஐந்து ஆறு வயதிலேயே இந்த எடிபெஸ் காம்ப்ளெக்ஸில் இருந்து மீண்டுவிடுகிறார்கள். அம்மா என்பவள் அப்பாவின் மனைவி, நான் வளர்ந்து அப்பாவைப்போலப் பெரியவன் ஆன பிறகு எனக்கே எனக்கென்று வேறு ஒருத்தி வருவாள் என்கிற புரிதலுக்கு மாறுகிறார்கள். ஆனால், சில ஆண்கள் இப்படி மீளாமல் தொடர்ந்து அம்மாவையே ஓவராக நேசிக்கிறார்கள். எடிபெஸ் காம்ப்ளெக்ஸில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றார் ஃபிராய்ட்.அடுத்த பதிலைச் சொன்னவர் ஹாரி ஹார்லோ என்கிற அமெரிக்க விஞ்ஞானி. இவர் குரங்குகளைவைத்து, தாய் - சேய் உறவுபற்றிய ஆராய்ச்சிகளைச் செய்தவர். இவர் தன் ஆராய்ச்சியில் குட்டிக் குரங்கைப் பிறந்த உடனே தன் தாயிடம் இருந்து பிரித்து வளர்த்தார். ஆனால், வேளா வேளைக்கு உணவையும் விளையாட்டுப் பொருட்களையும் கொடுத்து ஊக்குவித்தார். இப்படித் தன் தாயைச் சந்திக்காமலேயே தனிமையில் வாழ்ந்த இந்தக் குரங்கு, பிற்காலத்தில் பிற குரங்குகளுடன் எப்படிப் பழகுகிறது என்று சோதித்துப் பார்த்தால், ஊஹூம்... மற்ற குரங்குகளின் பக்கத்திலேயே போகவில்லை குட்டி. சரி, மற்ற குரங்குகளுடன்தான் விளையாடவில்லை. குறைந்தபட்சம் பெண் குரங்கைக் கண்டால் கூடவாவது தோன்றுகிறதா என்று பார்த்தால், ஊஹூம், பெண்ணை சீண்டக்கூட விரும்பவில்லை இந்த விசித்திரக் குட்டி. இதில் இருந்து ஹார்லோ கண்டு பிடித்த விஷயங்கள்... தாய் - சேய் உறவுதான் குழந்தையின் சமூகப் பழக்க வழக்கங்களுக்கும், எதிர் காலக் காம உறவுக்கும் ஆதாரம். அப்பா இல்லை என்றால் நஷ்டம் இல்லை. ஆனால், அம்மா இல்லை என்றால் முதலுக்கே மோசமாகி விடும். அதனால், குரங்குகளில் மட்டுமல்ல, எல்லா உயிரினத்திலும் தாய் வழியாகத்தான் சமூகம் அமைகிறது. மனிதர்கள் உட்பட. இதுதான் இயற்கையின் விதி.இதை நிரூபிப்பதுபோல லண்டன் ஜூவில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஜூவின் காப்பாளர் டெஸ் மண்ட் மோரிஸுக்கு அப்போது குழந்தை இல்லை. அதனால் அவர் மனைவி அங்கே இருந்த காங்கோ என்கிற குட்டி சிம்பன்ஸியைத் தன்னுடனேயே வைத்து, வளர்க்க ஆரம்பித்தார். காங்கோ சட்டை போட்டுக்கொள்ளும், ஸ்பூனில் சாப்பிடும், கழிப் பறையைப் பயன்படுத்தும். அவ்வளவு ஏன்... மிக அற்புதமாக ஓவியம் வரையும். காங்கோ வரைந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியில்

உயிர் மொழி!  - 05

வைத்தார் மோரிஸ். பிகாசோவின் ஓவியத்தைவிட அதிக விலை கொடுத்து இதை வாங்கினார்கள் கலை ஆர்வலர்கள். அத்தனை சுட்டியாக, சமர்த்தாக இருந்த காங்கோ கடைசி வரை இனப்பெருக்கமே செய்யவில்லை. ஏன் என்று ரொம்ப காலம் சோதித்துப்பார்த்தார் மோரிஸ். கடையில் தான் அவருக்குப் புரிந்தது... காங்கோ மனிதப் பெண்ணால் வளர்க்கப்பட்டபடியால், அது தன்னையும் மனிதன் என்றே நினைத்திருந்தது. அதனால், திருமதி மோரிஸ் மாதிரியான பெண்களைத்தான் அதற்குப் பிடித்தது. சிம்பன்ஸி பெண்களைப் அதற்குப் பிடிக்கவில்லை. ஆக, 'நீ இந்த இனம்' என்கிற ஜீவ அடையாளத்தைத் தருவதே தாய் - சேய் உறவுதான். அதனால், தாய் எந்த இனமோ, அந்த இனத்திலேயே துணை தேடுவதுதான் உயிரினங் களின் கலவியல் லாஜிக் என்று விளக்கினார் டெஸ்மெண்ட் மோரிஸ்.

உயிர் மொழி!  - 05

இதற்கு ரொம்ப வருடங்கள் கழித்து மைக்கேல் மீனி என்பவர் எலிகளின் தாய் - சேய் உறவுபற்றி ஆராய்ச்சி செய்யும்போது, இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். தாய் எலிகள் குட்டி எலிகளை நாவால் தடவி சுத்தம் செய்யும். அதிலும் ஆண் குட்டி என்றால், கூடுதல் நேரத்துக்கு இப்படித் தடவிக்கொண்டு இருக் கும். ஏன் என்று அந்த ஆண் குட்டிகளின் மூளையைப் பரி சோதித்துப் பார்த்ததால் தெரிந்த திடுக்கிடும் தகவல், தாயால் இப்படி வருடப்பட்ட ஆண் எலிகளுக்கு மூளையில் புதிய இணைப்புகள் உருவாகி இருந்தன. ஆனால், தாய் வருடாமல்விட்ட ஆண்களுக்கு இந்த இணைப்புகள் ஏற்படவே இல்லை. இந்த இணைப் புகள்தான் எலிக் குட்டியின் எதிர்காலக் கலவியல் தேர்வுகளை முடிவுசெய்கிறன. ஆக, ஆண் குட்டியின் கலவியல் விசையை உருவாக்குவதே அம்மாதான். ஃபிராய்ட், ஹார்லோ, மோரிஸ், மீனி ஆகிய எல்லோருமே ஒன்றையே திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லா ஜீவராசியிலும் ஆண் குட்டிக்கும் அதன் தாய்க்கும் ஒரு பிரத்தியேகமான பாசப் பிணைப்பு இருந்துவருகிறது. இந்த பந்தம்தான் சுய அடையாளம், எதிர்பாலின அடையாளம், சமூக நடத்தை, கலவியல் தேர்வுகள் ஆகிய அனைத்து முக்கியமான விஷயங் களையும் நிர்ணயிக்கிறது. அதனால், இயற்கை இந்தத் தாய் - சேய் பந்தத்தை மேலும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதனால்தான் எல்லா ஜீவராசிக் குட்டிகளும் அம்மா சென்ட்டிமென்ட் டுக்கு ஆட்படுகின்றன. இப்படிக் கண்மூடித்தனமாக அம்மாவை நேசிப்பது பிள்ளைப் பிராயத்தில் இந்தக் குட்டியின் பிழைப்புத் திறனை அதிகரிக்கும்.

உயிர் மொழி!  - 05

ஆனால், வயதுக்கு வந்து இனப்பெருக்கப் பருவத்தை அடைந்துவிட்டால், ஆட்ட விதிகள் அப்படியே மாறி விடும். அதன் பிறகு அம்மாவைக் கட்டிக்கொண்டு இருப்பது மர பணு முன்னேற்றத்தையும் பிழைப் பையும் பாதித்துவிடும். அதனால் அம்மாவை மறந்து அடுத்த தலைமுறையை நோக்கிப் போயாக வேண்டும். இப்படிப் போவதை அம்மாவே ஊக்கு விக்கும். மற்ற எல்லா உயிரினத்திலும் இயற்கை யின் இந்த இரட்டை நிலை அமைப்பு மிகக் கச்சிதமாக வேலை செய்கிறது. ஆனால், மனிதர்களில் மட்டும் இது மக்கர் செய்கிறது. ஏன் தெரியுமா?

உயிர் மொழி!  - 05
உயிர் மொழி!  - 05
(காத்திருங்கள்)