Published:Updated:

உயிர் மொழி! - 07

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 07


ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
உயிர் மொழி!  - 07
உயிர் மொழி!  - 07
உயிர் மொழி
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 07

ன்ன ஆகிவிட்டது இந்தத் தமிழ்ப் பெண்களுக்கு? புறநானூற்றுக் காலத்தில் மிகத்

தெளிவாக இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்த இதே பெண்கள், போஸ்ட் மார்டன் யுகத்தில் மட்டும் ஆண் குழந்தைகளை முந்தானையிலேயே முடிந்துவைத்துக்கொள்ள முயல்கிறார்களே, ஏன்?

இதற்கு மிக முக்கியக் காரணம், புறநானூற்றுக் காலத்துப் பெண்களுக்கு, குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் நிறைய அதிகாரம் இருந்தது. அதில் முக்கியமானது, தன் துணையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம். இந்தச் சின்ன விஷயம் மனித குணத்தை எப்படி இந்த அளவுக்கு மாற்றும் என்கிறீர்களா?

உயிர் மொழி!  - 07

ஆச்சர்யமான உண்மை தெரியுமா? உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பெண் மிருகம்தான் ஆணை கலவிக்குத் தேர்வு செய்கிறது. ஆண், பிற ஆண்களோடு போட்டியிட்டு, 'தான் பெரிய கொம்பன்' என்பதை நிரூபிக்கும். அந்தப் போட்டியில் ஜெயிக்கும் ஆணை மட்டும் தன்னோடு இணைய பெண் அனுமதிக்கும். இப்படி மிகக் கவனமாக ஜெயிப்பவனையே தேர்வு செய்து பெண் இனம் சேருவதைத்தான் செக்ஷ§வல் செலெக்ஷன் (sexual selection) என்றார் சார்லஸ் டார்வின். இந்த மரபணுப் போட்டியில் ஜெயிக்கவே உலகெங்கும் உள்ள ஆண் விலங்குகள் கொம்பு, பிடரி, கொண்டை, சிறகு, தோகை, தந்தம் என்று பலவிதங்களில் 'என் மரபணு எவ்வளவு உசத்தியானது பார்!' என்று விளம்பரப்படுத்தும் உடல் பாகங்களைக்கொண்டு இருக்கின்றன.

ஆதிகால மனிதர்களும் இந்த இயற்கை வழியில்தான் செயல்பட்டார்கள். ஆண் தன் வீரம், பராக்கிரமம், விளையாட்டு, கலை, பேச்சு, சாகசம், திறமை என்று வெளிப்படுத்துவான். அல்லது மற்ற மிருகங்களின் கவர்ச்சி பாகங்களைக் கடன் வாங்கி அதை அணிந்துகொண்டு பெண்களை அசத்தப் பார்ப்பான். இப்படி எல்லாம் தன் கவர்ச்சியைக் கடை பரப்பிக் காட்டுபவனைப் பெண் லபக் என்று பிடித்துக்கொள்வாள். அவனது மரபணுக்களைக்கொண்டு வலிமையான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாள்.

'சேச்சே, இதெல்லாம் அபாண்டம். பெண்கள் இப்படி எல்லாம் செய்யவே மாட்டார்கள்' என்று நம்ப மறுக்கிறீர்களா? ராமாயண சீதை ராமனை எப்படித் தேர்ந்தெடுத்தாள்? 'கௌசல்யா சுப்ரஜா ராமா, இதோ சீதை நான் உனக்குத்தான்' என்று உடனே அவன் மடியில் விழுந்துவிட்டாளா? 'மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே இருந்தாலும், இந்த வில்லை உடைத்து உன் வலிமையை நிரூபி' என்று சொல்லவில்லையா? ராமன் மட்டும் அன்று வில்லை உடைக்காமல் இருந்திருந்தால், அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதெல்லாம் உட்டாலக்கடி ஆகியிருக்குமே!

உயிர் மொழி!  - 07

ஆக, மனிதர்களிலும் அந்தக் காலத்தில் பெண்தான் ஆணைத் தேர்வு செய்தாள். அதனால், அந்தக் காலப் பெண்களுக்கு ஆண்களின் மேல் கொஞ்சம் அதிகாரம் இருக்கத்தான் செய்தது. இந்த ஏற்பாடு யானைக்கும், சிங்கத்துக்கும், புலிக்கும் சரிப்பட்டு வந்தாலும், மனித ஆணுக்கு இது கொஞ்சம் நெருடலாக இருந்தது. 'இவள் என்ன நம்மைத் தேர்வு செய்வது? அதற்குப் பதில் இவளை நாம் தேர்வு செய்துவிட்டால், அப்புறம் எல்லா பவரும் நமக்குத்தானே?' அதனால் பெண்ணின் கலவியல் தேர்வு முறையை முறியடிக்க ஆண்கள் பல ஐடியாக்களைப் பிரயோகித்தார்கள். அதில் முக்கியமானது, ஆணைத் தேர்வு செய்யத் தனக்கு அதிகாரம் இருப்பதாக இவள் நினைத்தால்தானே வம்பு? அப்படி ஓர் அதிகாரமே பெண்ணுக்கு இல்லை என்னும் அளவுக்கு அவள் மனதை மாற்றிவிட்டால்? அதன் பிறகு அவளை அடக்கி ஆள்வது சுலபமாகிவிடுமே?!

ஒருவரையோ, ஒரு பாலினத்தையோ, ஓர் இனக் குழுவையோ அடக்கி ஆளச் சில சுலபமான உத்திகளை மட்டும் பயன்படுத்தினால்போதும். காலம் காலமாக மனிதர்கள் பிறரை அடிமைகளாக்க இப்படியான உத்திகளைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

உயிர் மொழி!  - 07

'பிறவியிலேயே நீ தாழ்த்தி... கடவுள் உன்னை அப்படி ஈனமாகவே படைத்தார். அதனால், இயல்பிலேயே நீ மட்டம். நான்தான் உசத்தி' என்ற தாழ்வு மனப்பான்மையைப் பெண் மனதில் அழுத்தமாகப் பதியவைப்பது.

ஏதோ ஒரு காலத்தில் அவர்கள் நன்றாக வாழ்ந்த சரித்திரம் இருந்தால், அதை அப்படியே இருட்டடித்து, 'உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே நீ அடிமையாக இருக்க மட்டுமே படைக்கப்பட்டவள்' என்று மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லாதபடி சொல்லிவைத்துவிடுவது. அப்போதுதான் அவளுக்கு சுய மரியாதையே ஏற்படாது. தனக்கு நடக்கும் இழிவுகளை இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை மன நிலை ஏற்படும்.

நாம் இப்படி சொல்லிவைத்தது எல்லாம் சரியா - தவறா என்று தானே யோசித்து ஆராய்ந்து கண்டுபிடிக்க அவள் முற்பட்டுவிட்டால் நம் குட்டு வெளிப்பட்டுவிடுமே. அதனால், 'உனக்கு அறிவே இல்லை. உனக்குப் படிப்பே வராது' என்றும், 'நீ புத்தகத்தைத் தொட்டாலோ, பாடத்தைக் கேட்டாலோ, அது மகா பாவம். அப்புறம் நரகத்தில் உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்து எடுப்பார்கள்' என்று பயமுறுத்தி வைப்பது. கல்வி வாய்ப்புக்களே தராமல் அவளை முட்டாளாக வைத்திருப்பது. இதெல்லாம் அவள் சுய அறிவை ஆஃப் செய்துவிடும் என்பதால், அதன் பிறகு, அவளை நம் இஷ்டப்படி ஆட்டுவிக்கலாம்.

இப்படி எல்லாம் நாம் மூளைச் சலவை செய்துவைத்தும், அவள் நமக்கு ஊழியம் செய்யாமல், வேறு எவனிடமாவது ஓடிவிட்டால்? அதனால், 'நான் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நீ எனக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து பதிபக்தியோடு என்னைக் கவனித்துக்கொண்டால், சொர்க்கத்தில் உனக்கு ஒரு சீட்டும், வரலாற்றில் ஒரு நல்ல பெயரும், பீச் ஓரமாக ஒரு சிலையும் கிடைக்கும்' என்று வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க வேண்டும். ஏற்கெனவே அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று இருக்கும் இந்த அற்பப் பெண்ணுக்கு நம் உத்திகள் புரியவா போகிறது? அது பாட்டுக்கு அடிமையாக இருப்பதில் ஆனந்தம் காணும். இவளைப்போல இன்னும் பல அடிமைகளைச் சேர்த்துவைத்து, மரப ணுக்களை மடமடவென்று பரப்பிக்கொண்டால், மரபணுப் போட்டியில் இந்த ஆணுக்குத்தானே வெற்றி?

ஆனால், இதில்தான் பிரச்னையே ஆரம்பித்தது. பவரே இல்லாத சூழ்நிலையிலும் தனக்கு என்று ஒரு பவரை உருவாக்கிக்கொண்டாள் பெண்!

அது எப்படி?

உயிர் மொழி!  - 07
உயிர் மொழி!  - 07
(காத்திருங்கள்)