மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 34

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 34


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 34
நீயும் ... நானும்! - 34
நீயும் ... நானும்! - 34
கோபிநாத், படங்கள்:கே.ராஜசேகரன்,'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 34

ளர்ந்து நிற்கிற பலரைப் பார்த்துப் பெரும்பாலானவர்கள் சொல்கிற வார்த்தை...

'அவருக்கு அதிர்ஷ்டம். அதான் தொட்டது எல்லாம் துலங்குது!'

என்னதான் கடினமாக உழைத்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்றால், ஒருவரால் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத, ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று.

ஆனால், இந்த அதிர்ஷ்டம் நமக்கு ஏன் அடிக்கவில்லை... நம்ம ஜாதகம் அப்படி... அதான்! அப்படியானால் பரிகாரம் செய்து சரிபண்ணலாமே? இவ்வளவு விவாதம் எல்லாம் பண்ணக் கூடாது. சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். சிலருக்கு அதிர்ஷ்டம் வாய்ப்பது இல்லை அவ்வளவுதான் என்று ஒரு தத்துவார்த்த விளக்கமும் கொடுக்கலாம்.

அதிர்ஷ்டம் யாருக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றால், ஒன்றுமே செய்யாத யாராவது ஒருவருக்கும் அது வாய்க்க லாமே? ஏன் இல்லை? எங்கள் வீட்டுக் குப் பக்கத்தில் ஒரு ரிக்ஷாக்காரர் சாப் பாட்டுக்கே கஷ்டப்பட்டார். ஒருநாள் லாட்டரியில் திடீர் என்று ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இன்னிக்கு ராஜா மாதிரி இருக்கார் என்றொரு சான்று முன் வைக்கப்படும்.

நீயும் ... நானும்! - 34

ரிக்ஷாக்காரருக்கு லாட்டரியில் பணம் விழுந்தது மட்டும்தான் நமக்குத் தெரியும். அவர் எவ்வளவு நாளாக லாட்டரிச் சீட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார்? பரிசு விழ வேண்டும் என்பதற்காக என்னென்ன மாதிரியான சீட்டுகளை வாங்கினார்? சீட்டு வாங்குவதில் அவருக்கு இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு என்ன மாதிரியான உத்திகளைக் கையாண்டார் என்பதெல்லாம் நமக்குத் தெரி யாது.

நமக்குத் தெரிந்த, நாம் கவனிக்கிற அல்லது, நாம் போட்டியாக நினைக்கிற ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால், 'அவருக்கு அதிர்ஷ் டம்' என்று ஒற்றை வரியில் சொல்லி, அந்த விஷயத்தை முடித்துவிடுவது நமக்கு எளிதாகி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், நமது சொந்த ஈகோவை சாத்வீகமாகச் சமாதானம் செய்யும் முயற்சிதான் அது.

அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக போட்டி போட்டு நாம் எதையும் செய்யத் தேவை இல்லை. ஆனால், அதிர்ஷ்டம்தான் இன்னொருவனை ஜெயிக்கவைத்தது என்பது உண்மையானால், நாம் ஜெயிக்கவும் அந்த அதிர்ஷ்டம்தானே கைகொடுக்க வேண்டும்?

அதிர்ஷ்டம் யாருக்கு வேண்டுமானாலும் வாய்க்கும். அதை ஜாதகக் கட்டங்கள் தீர்மானிப்பது இல்லை. நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறீர்களோ... அதற்கு உரிய, சரியான தயாரிப்புகளோடு முன்னேறிக் கொண்டு இருந்தால், அதிர்ஷ்டம் தானாக வந்து சேரும்.

உண்மையில் தயாரிப்புகளும் வாய்ப்புகளும் சந்திக்கிற புள்ளிதான் அதிர்ஷ்டம். தேவையான தயாரிப்புகள் இன்றி, வாய்ப்புக் கதவைத் தட்டக்கூட அலுத்துக்கொண்டு, எதிர் வீட்டுக்காரனுக்கு அதிர்ஷ்டம் என்று அங்கலாய்த்துக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.

என் இலக்கை எட்டுவதற்கான தயாரிப்புகள், ஏற்பாடுகளில் நான் கடினமாகவே முனைகிறேன். அதுவரை என் பணி முடிந்துவிட்டது. ஆனால், வாய்ப்பை யார் தருவது? சோர்வு இல்லாமல் தொடர்ந்து அந்தப் பய ணம் நடக்கிறபோது வாய்ப்பு நிச்சயமாக வந்து சேரும்.

டி.வி-யில், ரேடியோவில், பத்திரிகையில், நிகழ்ச் சித் தயாரிப்பாளராகவோ, நிகழ்ச்சி நடத்துநர் ஆக வோ, இன்ன பிற பணிகளுக்காகவோ அவ்வப்போது யாராவது கேட்டு இருப்பார்கள். திடீர் என்று யாரா வது ஒரு நண்பர் இந்தக் குறிப்பிட்ட வேலைக்கு ஆள் வேண்டும். நல்ல திறமைசாலி இருந்தால் சொல்லுங்களேன் என்று கேட்பார். எவர் வேலை தொடர்பா கத் தொடர்ந்து நம்மிடம் முயற்சித்துக்கொண்டு இருந்தாரோ, அவருடைய ஞாபகம்தான் அப்போது வரும். அதுதான் யதார்த்தமும்கூட!

நீயும் ... நானும்! - 34

நாம் தட்டாமல் எந்தக் கதவும் திறக்கப்போவது இல்லை. விவிலியம்கூட 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்றுதான் சொல்கிறது. 'காத்திருங்கள்... கதவு திறக்கும்' என்று யாரும் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை. இந்தத் தட்டலில் ஒரு நயமும் அழகும் வேண்டும். 'இவர் திறமையான ஆளாக இருக்கிறார். இவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று அந்தத் தட்டல் உணரவைக்க வேண்டும். அது நச்சரிப்பாக மாறிவிடக் கூடாது!

'என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எனக்குத் தேவையான தகுதி இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களை அணுகிச் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் அதை வலியுறுத்தினால் அது தொந்தரவாகப் போய்விடும்!'. உண்மைதான். தொந்தரவாக இல்லாமல் லாகவமாக மனிதர்களைக் கையாளுவதும் ஒரு தயாரிப்புதான்... அதிர்ஷ்டத்தை நோக்கிய தயாரிப்பு!

அது தேர்தல் நேரம். எப்படியாவது முதல்வர் கருணாநிதியிடம் ஒரு நேர்காணல் நடத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்தேன். என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்றெல்லாம் எப்போதோ முடிவு செய்தாகிவிட்டது. ஏற்கெனவே அவருக்கு எதற்கும் நேரம் இல்லை. அதிர்ஷ்டம் இருந்தால் அவர் பேட்டி கிடைக்கலாம் என்றார்கள்.

மிகுந்த சிரமத்துக்குப் பிறகு, அவரைச் சந்திக்க முடிந்தது. 'நேரம் இருந்தால் பார்க்கலாம்!' என்றார். அதிர்ஷ்டம் அருகே வந்ததுபோல் தெரிந்தது. அதன் பிறகு தினமும் அறிவாலயம் போவேன். அவர் கார் ஏறும்போது ஒரு வணக்கம் சொல்வேன். 'என்ன தினமும் வருகிறாய்?' என்று ஒருநாள் கேட்டார். 'சும்மா முகத்தைக் காட்டிவிட்டுப் போக வந்தேன்' என்றேன்.

அப்போதும், 'நேரம் இருந்தால் பார்க்கலாம்' என்றார். அடுத்த 10 நாட்களும் தினமும் போனேன். என்னைப் பார்ப்பார்... சிரிப்பார். அடுத்த நாள் கேட்டார் 'எவ்வளவு நேரம் பேட்டி வேணும்?' 'என் பேட்டிக்காக நீங்கள் நேரம் எல்லாம் ஒதுக்க வேண்டாம். காலையில் வாக்கிங் வருவீர்கள்தானே' என்றேன். 'ஆமாம்... அதற்கென்ன?' என்றார் முதல்வர். 'நானும் உங்களோடு வருகிறேன்... அதுபோதும் எனக்கு' என்றேன். 'நல்லா இருக்கே... வா' என்றார். அடுத்த நாள் அதிகாலை கேமராவுடன் 5 மணிக்குப் போய் நின்றேன். அவரோடு பேசிக்கொண்டே ஒரு பேட்டி. அவருக்கும் நேரம் மிச்சம். எனக்கு 'வாக் தி டாக்' பாணியில் வித்தி யாசமான ஒரு பேட்டி கிடைத்தது.

அதிர்ஷ்டம் இருந்தா அவர் பேட்டி கிடைக்கும் என்று சொன்னவர், 'பரவாயில்லையே வாக்கிங் லயே வேலையை முடிச்சுட்டியே கெட்டிக்காரன்தான்!' என்றார். உண்மையில் கெட்டிக்காரன்தான் இங்கே அதிர்ஷ்டக்காரன்.

நமது தயாரிப்புகளை வாய்ப்புக் கதவை வலிக்காமல் தட்டும் அளவுக்கு வளமானதாக அமைத்துக்கொள்ளும்போது அதிர்ஷ்டம் தானாக வந்து அணைத்துக்கொள்கிறது. படித்துவிட் டேன், வேலைக்கு விண்ணப்பம் செய்துவிட்டேன். சிபாரிசுக்கு ஆள் பிடித்துவிட்டேன். ஆனா லும் ஒன்றும் நடக்கவில்லை. காரணம், அதிர்ஷ்டம் இல்லை என்று முடிவுக்கு வராதீர்கள்.

வாய்ப்பைப் பெறுவதற்கு இன்னும் என்ன தகு திகள் தேவைப்படுகின்றனவோ, அதைத் தேடி அடையுங்கள். நீங்கள் அதிர்ஷ்டக்காரன் இல்லை என்று நினைக்க ஆரம்பித்தால், உங்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் களும்கூட அப்படியேதான் கணிப்பார்கள்.

நீயும் ... நானும்! - 34

அதிர்ஷ்டம் என்பதை ஜாதகக் கட்டங்கள் மட் டுமே தீர்மானிக்கும் என்பது உண்மையானால், மனித முயற்சிக்கு அர்த்தமே இல்லாமல் போயிருக்கும். வாய்ப்புகளைக் கேட்டுப் பெறுவதிலும் தேடி அடைவதிலும் நமக்கு நிறைய சங்கடமும் கூச்சமும் இருக்கிறது. அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான தந்திரம்தான் இந்த அதிர்ஷ்டம்.

ஒரு முறைக்கு நான்கு முறை நமக்கு வேண்டியதை நாகரிகமாகவும் சுமுகமாகவும் கேட்கலாம். அதில் தவறே இல்லை. அதற்கு சங்கடப்படவும் சலித்துக்கொள்ளவும் வேண்டிய அவசியம் இல்லை.

தெரியாத இடத்துக்குச் செல்லும்போது வழி கேட்பதற்கே கூச்சம் உண்டு நமக்கு. கடைசியில் போக வேண்டிய இடத்துக்கு எதிர் திசையில் சில கி.மீ. சென்ற பிறகு யோசிப்போம்... யாரிடமாவது கேட்டு இருக்கலாமே என்று!

இது போட்டிகள் நிறைந்த உலகம். நாம் எதைத் தேடுகிறோமோ... அதற்கான முழுத் தகு தியை அமைத்துக்கொண்டால் மட்டும் போதாது. வாய்ப்புகளை கேட்டுப் பெறுகிற ஆற்றலையும், மனம் தளராத மனோபாவத்தையும் வளர்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

உள்ளூர் எம்.எல்.ஏ-வைப் பிடித்து, பக்கத்து ஊர் தொழிற்சாலையில் அப்பா வேலை வாங்கித் தருகிற காலம் எல்லாம் முடிந்துவிட்டது. நமக்குத் தேவையானதைத் தேடிப் பெறுகிற காலம் இது. வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிற காலம்.

அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராது. நாம்தான் அதிர்ஷ்டத்தைத் தேடிச் செல்ல வேண்டும். வாழ் வியல் திறன் பயிற்சி வகுப்புகளுக்குப் போகும்போது நான் அடிக்கடி ஒன்று சொல்வேன்.

- 'கெட்டிக்காரன்தான் அதிர்ஷ்டக்காரன்!'

- கெட்டிக்காரனாக இருங்கள்... அதிர்ஷ்டக்காரன் என்று ஊர் சொல்லட்டும்!

மிக முக்கியமான பின் குறிப்பு: கெட்டிக்காரத் தனம் என்பது குறுக்கு வழிகளைக் கையாள்வது அல்ல!

நீயும் ... நானும்! - 34
நீயும் ... நானும்! - 34
- ஒரு சிறிய இடைவேளை