Published:Updated:

உயிர் மொழி! - 08

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 08


உயிர் மொழி
உயிர் மொழி!  - 08
உயிர் மொழி!  - 08
டாக்டர் ஷாலினி
ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
உயிர் மொழி!  - 08

ரபணுப் போட்டியில் ஜெயிக்க ஆண், 'பெண்ணடிமைத்தனம்' என்ற காயை நகர்த்தி

பெண்களை நிராயுதபாணி ஆக்கினான். இதனால் பெண், ஆண்களைத் தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, கலவிகொண்டு, உயர் ரக மரபணுக்களை மட்டும் பரப்பிய காலம் மலையேறிப்போனது. கல்வி, அறிவு, சொத்து, வருமானம், தனி நபர் சுதந்திரம், சுய மரியாதை, தனக்கென ஓர் அடையாளம் என்று எதுவுமே இல்லாமல், வெறும் பிரசவ இயந்திரமாகப் பெண்கள் மாறிவிட, இந்த இயந்திரங்களை அபகரித்து, அவற்றினுள் தம் மரபணுக்களை விதைத்து, மானாவாரி சாகுபடி செய்ய ஆரம்பித்தார்கள் ஆண்கள். இப்படி இவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்க, பெண்கள் மட்டும் சும்மா இருந்துவிடுவார்களா?

பெண்தான் பிறவி வேட்டுவச்சி ஆயிற்றே! ஆண் நகர்த்திய அதே காயை அவனுக்கு எதிராக நகர்த்தி, அவனுக்கே தெரியாமல் அவனை மீண்டும் தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள். எப்படி என்கிறீர்களா?

உயிர் மொழி!  - 08

1: அவள் உடம்பின் மீது ஆணுக்கு இருந்த மோகம்தான் அவளுக்குத் தெரியுமே. அதனால், தன் உடல் பாகங்களை இன்னும் இன்னும் கவர்ச்சியாக வெளிப்படுத்தி, ஆணை வசப்படுத்த முயன்றாள். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. எல்லா பெண்களுக்குமே அதே உடல் பாகங்கள்தானே இருக்கின்றன? ஒருத்தியின் கவர்ச்சியைவிட இன்னொருத்தி அதிக கவர்ச்சியைக் காட்டிவிட்டால் போச்சு. ஆண் கட்சி மாறிவிடுவானே... அப்புறம் எப்படி அவனை அடிமைப்படுத்துவதாம்?

2: சமையல், சேவை, உபசரணை என்றெல்லாம் அவனுக்குப் பிடித்தபடி நடந்து, சோப்பு போட்டுவைத்தால், அவன் இவள் துணையை அதற்காகவாவது மீண்டும் மீண்டும் நாடுவானே. ஆனால், இதிலும் ஒரு பிரச்னை. சமையலை ஆண்கள்கூட வெகு ஜோராகச் செய்ய முடியுமே! வேலையாள்கூட அவன் மனைவியைவிட அதிக கீழ்ப்படிதலுடன் சேவை, உபசரணை மாதிரியான சமாசாரங்களைச் செய்து அசத்திவிட முடியுமே!

3: படுக்கையில் அவனுக்குப் பிடித்த மாதிரி எல்லாம் நடந்து, அவனை அசத்தோ அசத்து என்று அசத்தினால், 'என் மனைவி மாதிரி வருமா?' என்று இவள் முந்தானையிலேயே விழுந்துகிடக்க மாட்டானா என்றால், ம்ஹூம். இவன் நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் படி தாண்டி, மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை முகர்ந்துவிடுவானே. ஆண், பெண், அரவாணி என்று யாரிடமும் சுகம்கொள்ளும் தன்மைதான் அவனுக்கு இருந்ததே. ஆக, வெறும் கலவி சுகம் தந்து ஓர் ஆணைக் கட்டிப்போடுவது என்பது முடியாத காரியமாகிவிடுமே!

4: அந்த ஆணின் மரபணுக்களைக்கொண்ட குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டால், தன் ரத்தம் என்கிற பாசப் பிணைப்பில், 'என் குழந்தையைப் பெற்றவள் ஆயிற்றே' என்கிற தனி சலுகை தருவானே! இப்படிக் குழந்தையை வைத்துக் கொஞ்சம் பவரைச் சம்பாதித்துக்கொள்வதுதான் பெரும்பாலான பெண்களின் ஆட்ட உத்தியாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ராமாயண தசரத சக்ரவர்த்தியை எடுத்துக்கொள்வோம். கோசலை, சுமத்திரை, கைகேயி மூவருமே தங்கள் குழந்தைகளை வைத்துத்தானே காய் நகர்த்தினார்கள்?!

உயிர் மொழி!  - 08

ஆனால், இதிலும் ஒரு பிரச்னை. குழந்தை என்றால் எந்தக் குழந்தை? பெண் குழந்தை என்றால், அது இன்னொருவர் வீட்டுக்குப் போய்விடும். காலம் முழுக்க அந்தக் குழந்தையைவைத்துக் காய் நகர்த்த முடியாது. ஆனால், ஆண் குழந்தை? அப்பாவுக்குப் பிறகு அவன்தான் குடும்பப் பெயர், வருமானம், ஆஸ்தி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் கட்டிக்காக்கப் போகிறவன். பெற்றோருடனே இருந்து, அவர்கள் மறைவுக்குப் பிறகும் பித்ரு கடன்களைச் செய்யக் கடமைப்பட்டவன். அதனால், ஆண் குழந்தையைப் பெற்றால், பெண்களுக்குக் கையில் ஒரு ரெடிமேட் ஆயுதம் கிடைத்த திருப்தி. இதிலும் ஒரு பிரச்னை. ஒருவேளை, அவள் கணவனுக்குப் பல தாரங்கள் இருந்து எல்லோருமே ஆண் குழந்தைகளாகப் பெற்றிருந்தால், அப்புறம் எல்லா மனைவியருக்குமே சமமான பவர் என்றாகிவிடுமே. இப்படி இருந்தால் ஒருத்தி மட்டும் தன் பிழைப்பு விகிதத்தை எப்படி அதிகரித்துக்கொள்ள முடியும்?

5: கொண்டவனை நம்பினால்தானே இப்படிக் கண்டவளோடு போட்டியிடும் நிலைமை. தானே பெற்றெடுத்த தன் மகனைத் தனக்குச் சாதகமாக வளர்த்து, கடைசி வரை அவனையே தனக்குத் துணையாக வைத்துக்கொண்டால், எப்படியும் ஒரு காலத்தில் தந்தையின் எல்லா பவரும் அவனுக்குத்தானே வந்து சேரும். அட, தந்தையின் பவர் இல்லாவிட்டாலும், தனக்கென்று உள்ள ஆற்றலினால் மகன் சாதித்துவிட்டால் அது தாய்க்குச் சாதகமான அம்சம்தானே? அவனுக்கு ஆயிரம் மனைவியர் கிடைக்கலாம். ஆனால், தாய் என்றால் இவள் ஒருத்தி மட்டும்தானே?

ஆக ஆண், பெண்ணை அடிமைப்படுத்தி, அவளை வெறும் ஒரு பிரசவ இயந்திரமாகப் பயன்படுத்தினான். ஆனால், பெண்ணோ, தன் பிரசவ சக்தியையே ஓர் எதிர் உத்தியாகப் பயன்படுத்தி, ஆண் குழந்தையைத் தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள். அது எப்படி, பெண்ணுக்காவது கல்வி அறிவு இல்லை. ஆனால், ஆண் அறிவில் சிறந்தவன், உலகம் அறிந்தவன், பெண்ணைக் காட்டிலும் பல விதங்களில் வலிமையானவன். இப்பேர்ப்பட்ட ஆண் எப்படிப் பெண்ணுக்கு அடிமையாகிப்போனான், எப்படி இதை அனுமதித்தான்? என்றெல்லாம் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? இவ்வளவு வலிமையான இந்த ஆணை அடக்கும் பல அங்குசங்கள் பெண்ணின் கையில் இருந்ததுதான் காரணம். அதுவும் தான் பெற்றெடுத்து வளர்த்த பிள்ளையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது அவளுக்குத் தெரியாதா? யாரோ ஒருத்தி பெற்ற ஆணான தன் கணவனையே தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் அவளால், தான் பெற்ற தன் மகனைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்வது பெரிய காரியமா என்ன?

உயிர் மொழி!  - 08

ஆணின் மிகப் பெரிய தவறே, 'போயும் போயும் பெண்தானே, இவளால் என்ன செய்ய முடியும்?' என்ற குறைந்த மதிப்பீடுதான். அவளிடம் அவன் 'அலர்ட்' ஆகவே இருப்பது இல்லை. அதிலும் தன்னைப் பெற்ற தாய் என்றால், அவனுக்கு சந்தேகமே வருவது இல்லை. பெண்கள் எல்லாம் சுத்த மோசம் என்று பொத்தாம் பொதுவாகப் பாடிவைத்த பட்டினத்தார் மாதிரியான ஆசாமிகள்கூட, தன்னைப் பெற்ற தாய் என்று வரும்போது, 'தாயிற் சிறந்த கோயில் இல்லை' என்று போற்றத்தானே செய்தார்? ஆண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் இந்த எடிபெஸ் காம்ப்ளெக்ஸ்தான் அவர்களின் மிகப் பெரிய பலவீனம். இந்த ஒரு பலவீனம் போதாதா? இதைவைத்தே, தன் மகனைக் கடைசி வரை தனக்கு அடிமையாகவே வைத்திருக்கப் பெண்கள் பல ரகசிய உத்திகளை மிகப் பகிரங்கமாகவே பயன்படுத்துகிறார்கள். அவை என்னென்ன என்று உங்களால் யூகிக்க முடியுமா?

உயிர் மொழி!  - 08
உயிர் மொழி!  - 08
(காத்திருங்கள்)