Published:Updated:

உயிர் மொழி! - 01

உயிர் மொழி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 01


.
உயிர் மொழி!  - 01
உயிர் மொழி!  - 01
உயிர் மொழி!  - 01
ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
டாக்டர்.ஷாலினி.
படம்:கே.ராஜசேகரன்
உயிர் மொழி!  - 01

ரக் கூந்தலுடன் வந்து வாசலில் கோலம் போட்டு, கணவனுக்கு ஆவி பறக்கும் காபி

கொடுத்து, துளசி மாடத்தைச் சுற்றி வந்து, கலாசாரப் பாரம்பரியங்களைக் கவனமாகக் கடைப்பிடிக்கும், 'பொண்ணுன்னா இப்படி இருக்கணும்!' என்று பெயர் வாங்கும் பெண் அவள். அத்தனை அழகு, அடக்கம், ஒடுக்கம். தன் வீடு உண்டு... வேலை உண்டு என்று இருப்பாள். அதிர்ந்துகூடப் பேச மாட்டாள். திருமணமாகி 15 வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இரண்டு குழந்தைகள். யாரும் பார்த்தால், பொறாமைப்படக்கூடிய வாழ்க்கைதான்!

ஆனால், யாருக்கும் தெரியாத ரகசியம் என்னஎன்றால், அந்தக் குடும்பத் தலைவி, கணவன் வேலைக்குப் போன அடுத்த நிமிடம், தன் செல் போனில் இன்னொரு காதலனுடன் மணிக்கணக்கில் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தாள். அவனிடம் ஒருநாள் பேசவில்லை, இல்லை, பேசக் கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும், அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. உடனே, இருப்புக்கொள்ளாமல் தவிப்பதென்ன, படபடவென வருவதுஎன்ன, பார்ப்பவர் மேலெல்லாம் எரிச்சலுற்றுக் கோபப்படுவது என்ன?

உயிர் மொழி!  - 01

புதியவனுடன் பேச ஆரம்பித்த பிறகு, அவளுக்குத் தன் கணவனுடைய நெருக்கம் பிடிப்பது இல்லை. தன் கணவனை விட்டுவிட்டு இன்னோர் ஆளோடு இப்படி கொஞ்சிக்கொண்டு இருப்பது தவறு என்று அவளுக்குக் குற்ற உணர்ச்சி குத்தாமல் இல்லை. இருந்தாலும், விட முடியவில்லை. மிக மிக ரகசியமாக அவளின் தொலைபேசிக் காதல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

அது எப்படி, இந்தத் தமிழ்த் திருநாட்டில் ஒரு பெண் இப்படி நடக்கலாமா? இது பத்தினி தர்மத்துக்குப் புறம்பானது அல்லவா? கட்டின கணவனை விட்டுவிட்டு ஒருத்தி இப்படி எல்லாம் கண்டவனோடு கடலை போட்டுக்கொண்டு இருக்கலாமோ?

என்னதான் வியாக்கியானம் பேசினாலும், இதுபோன்ற நடப்புக்களைத் தடுக்க முடிவது இல்லை. காரணம், மனிதன் நியமித்த விதிகள் எல்லாவற்றையும் கடந்து, எல்லாம் வல்ல இயற்கை ஏற்கெனவே ஏற்படுத்தி உள்ள வேறு சில விதிகளும் இருக்கின்றன. இந்த விதிகள் ரொம்பவே வலிமையானவை என்பதால், இவற்றுக்கு நாம் உட்பட்டுவிடுகிறோம். விரும்பியோ, விரும்பாமலோ!

இதற்கு நேர்மாறாகவும் நடப்பது உண்டு. அவன் அந்தப் பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தான். அவள் வேண்டாம் வேண்டாம் என்று பல தடைகளை முன் நிறுத்தியபோதும், அவளை மசியவைத்தான். வேறு வேறு சாதிகள் என்பதால் வழக்கம்போல பெருசுகள் பெரிதாய் மறுத்தார்கள். குடும்ப மானம், குல கௌரவம், லொட்டு லொசுக்கு என்றெல்லாம் அவர்கள் மொக்கை போட, சத்தம் போடாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, பெற்றோருக்கு செக் வைத்தார்கள் காதலர்கள். வேறு வழி இல்லாமல் திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள் இருவீட்டாரும்.

ஆனால், பையனின் அம்மா... "இந்தக் கல்யாணத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன்" என்று ஒரு தற்கொலை நாடகம் நடத்த, அன்றோடு தீர்ந்துபோனது பையனின் ஆண்மை எல்லாம். அதற்குப் பிறகு மனைவியுடன் அவனால் ஆசையாகவே இருக்க முடியவில்லை. காதலர்களாக இருந்தபோது அவன் அவளை ஆசையாகத் தொட்டபோதெல்லாம், 'கல்யாணத்துக்கு அப்புறம்' என்று காக்கவைத்த காலம் போய்; இப்போது அவள், அவன் எப்போதடா கிட்டே வருவான் என்று ஏங்கிக்கிடக்க... அவன் பக்கத்தில் வந்ததும், 'எங்கம்மாவை நீ மதிக்கிறதே இல்லை' என்று ஆரம்பித்தான் என்றால்... ராத்திரி முழுக்க ஒரே ரம்பம்தான்.

அழகான பெண்டாட்டி ஆவலாகப் பக்கத்தில் இருக்கும்போது, அந்த நேரம் பார்த்து, அம்மாவை மதிக்கவில்லை என்று கவலைப்படுபவன் ஒரு ஆம்பளையா?

உயிர் மொழி!  - 01

ஆனால், கசப்பான உண்மை என்ன தெரியுமா? இந்த ஓவர் அம்மா சென்டிமென்ட்டினாலேயே ஆண்மையை இழந்து வாழ்க்கையில் தோற்றுப்போன ஆண்கள் ஏராளம். தன்னால் இப்படி மகன் ஊனமாகிப்போனான் என்று தெரிந்தும், பையனைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் தாய்க்குலங்கள் அதைவிட ஏராளம். இப்படியும் இருப்பார்களா?

ஆதி மனிதர்களுக்கு அதிசயமாக இருந்தது எல்லாம், நமக்கு இன்று அற்ப சமாசார மாகிவிட்டன. அவர்களுக்கு அற்ப மேட்டராக இருந்தது எல்லாம், இன்று நமக்கு அசிங்கமாகிவிட்டன. ஆதி மனிதன் காலத்தில் இத்தனை வசதிகள் கிடையாது, உயிருக்கு எந்நேரமும் ஆபத்து, சாப்பாட்டுக்கு உத்தரவாதமே இல்லை, தனி மனிதனின் வாழ்வுக்குப் பெரிய மகிமை இருந்திருக்காது. ஆனால், இன்று?

ஆதி மனிதன் நம்மைப் பார்த்தால், ஏதோ இறை அவதாரம் என்றல்லவா நினைப்பான்? இத்தனைக்கும் இன்றைய மனிதர்களுக்குச் சாப்பாட்டுப் பிரச்னை இல்லை, வேலை இல்லாத் திண்டாட்டம் இல்லை, ஏன் உடல் கோளாறுகள்கூட அவ்வளவாக இல்லை. ஆனால், மனிதர்கள் இன்னமும் சோகமாகவே இருக்கிறார்கள். காரணம், உறவுகளில் ஏற்படும் விரிசல்கள்தான். இந்த ஆண் - பெண் உறவு இருக்கிறதே, அது படுத்தும் பாடு ரொம்பவே அதிகம். அது ஏன் அப்படி? அக உறவுகளில், ஏன் இவ்வளவு விரிசல்கள்? உங்கள் மனதை ரொம்ப நாளாக அரித்த அதே கேள்விகள்தான். ஆனால், அதற்கு நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத, திடுக்கிடும் பதில்கள். அடுத்த வாரத்தில் இருந்து!

உயிர் மொழி!  - 01
உயிர் மொழி!  - 01
(காத்திருங்கள்)