Published:Updated:

சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!

சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!


விகடன் பொக்கிஷம்
சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!
சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!
"சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!"-விஜயகுமாரி
.
சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!
சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!

"சிரித்தேயாக வேண்டும்" என்றார் டைரக்டர் நீலகண்டன். எத்தனையோ பாத்திரங்களை

ஏற்று, வேறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தும்கூட, 'சிரிப்பு' என்றதும் ஒரு பயம் வந்து விட்டது. அதிகமாகச் சிரித்துப் பழக்கம் இல்லை. முயன்று பார்த் தேன். முடியவில்லை.

"இது தர்பார் சீன். உன் சிரிப்பு தான் இந்த சீனுக்கு உயிர்நாடி" என்று சொன்னார் டைரக்டர்.

பூம்புகார் படத்தில் அது முக் கியமான ஒரு சீன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!

"இவ்வளவு பேர் இங்கே நிற்பது என்னவோபோல் இருக்கிறது. சிரிப்பு வரவில்லை. செட்டில் யாரும் இருக்கக்கூடாது. எல்லோரையும் போகச் சொல்லிவிடுங்கள்" என்று டைரக்டரிடம் சொன் னேன். கலைஞர், மாறன் ஆகியோ ரும் அப்பொழுது இருந்தார்கள்.

"நாங்களும் கூடப் போய்விடட்டுமா?" என்று கலைஞர் கேட்டார். "இல்லை... இல்லை. ஒரேயடியாகக் கூட்டம் போட்டிருந்தவர் களைத்தான் சொன்னேன்" என்றேன்.

எப்படியோ ஒரு துணிவும் உத்வேகமும் ஏற்பட்டது. தர்பார் சீனில் நிற்கும் கண்ணகியாக மாறினேன். அவ்வளவுதான்... அந்த சீன் வெற்றிகரமாக அமைந்தது.

சிரிப்பதற்கு அந்த நேரம் அப்ப டிச் சிரமப்பட்டேன். அதை நினைத் துப் பார்த்தால் இப்போதும் சிரிப் பாகத்தான் இருக்கிறது.

சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!
சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!
சிரிக்கச் சொன்னார்; பயந்துவிட்டேன்!