Published:Updated:

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!


விகடன் பொக்கிஷம்
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!
ஸ்ரீரங்கம்... ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!
- ம.செந்தில்குமார், ச.அறிவழகன்
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!

ங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடியபடி... வானை நோக்கி ஆகிருதியாக, கம்பீரமாக நிற்கிறது திருவரங்கம் ராஜகோபுரம்.

'ஆசியாவிலேயே மிகப்பெரிய அந்த ராஜகோபுரத்தின் கல் ஹாரத்தில் (மொட்டைக் கோபு ரம்) விரிசல்கள் விழ ஆரம்பித்து விட்டன. அதுமட்டுமல்ல.. கோபுரம் மெள்ள மெள்ள பூமிக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது' என்ற செய்தி நம் காதுகளை எட்டியது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் நாயக்க மன்னர்களால் தொடங்கப்பட்டு, மொட்டைக் கோபுரமாகவே நின்றிருந்ததை உலகமே வியக்கும் ராஜகோபுர மாக மாற்றிய பெருமைக்குரியவர், ஸ்ரீமத் அகோபிலமடம் 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள்.

25.3.1987 அன்று கும்பாபிஷே கம் நடந்து முடிந்தது. அடுத்த வருடமே, ராஜகோபுரத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் மொட் டைக் கோபுரத்தில் (கல்ஹாரத்தில்) மெல்லிய விரிசல்கள் தென்பட ஆரம்பித்தன. இத்தனை வருடங் களில், நிலைமை மேலும் மோச மாகிக்கொண்டு இருக்கிறது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!

இந்தக் கோபுரத்தைப் பாது காப்பதற்காக அரசு அதிகாரி களிடம் வாதாடிக்கொண்டிருப்ப வர், 'விஸ்வ இந்து பரிஷத்'தின் திருச்சி மாவட்டச் செயலாளரான இன்ஜினீயர் கோபால்ரத்தினம். நம்மிடம் இதுபற்றிப் பேசிய அவர்...

"கோபுரம் கட்டணும்னு ஜீயர் விருப்பப்பட்ட உடனே, அரசு ஒரு கமிட்டி போட்டது. கோபுரத் தின் அஸ்திவாரத்தையும் மண் ணின் தன்மையையும் ஆராய்ந்து, அந்த கமிட்டி ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், 'இந்த மொட்டைக் கோபுரத்தின் அஸ்தி வாரம் 34 அடிதான் இருக்கிறது. எனவே, ஏழு மாடங்கள் மட்டும் கட்டுவதுதான் பாதுகாப்பானது. 50,000 டன் எடையை மட்டுமே சுமக்க மொட்டைக் கோபுரத்துக்கு வலு உள்ளது' என்று குறிப்பிட் டிருந்தது.

ஆனால், அறிக்கைக்கு மாறாக 13 மாடங்கள் கட்டப்பட்டன. 77,000 டன், எடையை ஏற்றினார் கள். இந்த மாதிரி செய்ததால், இப்போது கோபுரத்தின் அஸ்தி வாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. அத்துடன், அஸ்திவாரத்துக்குக் கீழே உள்ள பூமி மிருதுத்தன்மை கொண்ட களிமண் (Marine Clay) உள்ள இடம்.

இதற்குக் காரணம் இருக்கிறது. ஸ்ரீரங்கம் ஒரு பக்கம் காவிரியாலும் மறுபக்கம் கொள்ளிடம் ஆறாலும் சூழப்பட்ட தீவு. இதனால், ஸ்ரீரங்கத்தின் மண் குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கும்" என்றார்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!

பெருமைமிக்க இந்தக் கோபு ரத்தைக் கட்டிமுடித்த ஸ்தபதி சிவப்பிரகாசத்தைச் சந்தித் தோம்.

"கோபுரம் லேசா பூமிக்குள் இறங்கி இருப்பதாகச் சொல்றது உண்மைதான். எப்பவுமே கட்ட டம் கட்டி முடிச்சபிறகு, சில இடங்களில் லேசாகக் கட்டடம் பூமியில் புதையறது சாதாரண விஷயம்தான். அது ஒருமுறைதான் நடக்கும். அதுக்குப் பிறகு புதைய வாய்ப்பே இல்லை. கல்ஹார சுவத்தில்கூட ஒரு சில கருங்கற்கள் 'க்ராக்' ஆகியிருக்கு. அதைப் பார்த்து யாரும் பயப்படவேண்டி யதில்லை. 70 அடி வரைக்கும் தோண்டிப் பார்த்தோம். அந்த ஏரியாவில் தண்ணியே இல்லை. அந்த கல்ஹாரத்தோட ஸ்ட்ரெங்த் துக்கு இன்னும் 30 அடி உயரம்கூட கோபுரத்தைக் கட்டலாம்; ஒண் ணுமே ஆகாது. அரசு அதிகாரிகள் வீணாகக் கவலைப்படறாங்க. அதைக் காப்பாற்றப் போறேன்னு கோபுரத்தின் கீழே தோண்ட ஆரம்பிச்சாதான் ஆபத்தே இருக்கு. அதைத் தொந்தரவு செய் யாம இருந்தாலே போதும்... எந்த இடையூறும் வராது" என்று உறுதியோடு சொல்லி முடித்தார் சிவப்பிரகாசம்.

ஆனால், இப்போது கோபுரத்தின் நிலைமையைப் பார்வை யிட்ட இன்ஜினீயர்கள் குழு, இரண்டு யோசனைகளைத் தெரிவித்திருக்கிறது.

1. கோபுரத்தைச் சுற்றி (வீடுகள், கடைகள் சிலவற்றை அகற்றிவிட்டு) ஜாக்கெட் கவர் செய்து, அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவது.

2. திரவ சிமென்ட் கலவையை (cementity) அஸ்திவாரத்தின் கீழ் இன்ஜெக்ஷன் செய்து, அஸ்தி வாரத்தைப் பலமாக்குவது.

கோபுரத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டத் தடை விதிக்கிற திட்டமும் பெயரளவில்தான் இருக்கிறது.

கோபுர விரிசல்கள் பெரிதாகின் றனவா என்பதைப் பரிசோதிக்க பதிக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள் லேசாக நகர்ந்திருக்கின்றன. கோபுரத்தையட்டி கட்டப்பட்டிருந்த ஒரு ஓட்டலும் லேசாக கல்ஹாரத்தோடு சேர்ந்து பூமியில் இறங்கியிருக்கிறது.

இந்து அறநிலையத்துறை கமிஷனர் சாவர்க்கரை சந்தித் தோம்.

"கோயில் கோபுரம் நல்லாத் தான் இருக்கு. எதுனாச்சும் இருந்தா சொல்லி அனுப்பறேன்" என்றார் படுகூலாக!

கடிதங்கள்

உலகக் கோப்பை கால்பந்து நடைபெறும் இந்தச் சமயத்தில் கால்பந்து போட்டி சம்பந்தமான தகவல்களைத் திரட்டித் தந்தது சிறப்பு. இதில் பல தகவல்கள் எனக்குப் புதுசாக இருந்தன.

- ஆர்.முத்துமாணிக்கம், திருவிடைமருதூர்.

நீங்க விபரீதமா கேள்விகளைக் கேட்டிருந்தாலும், டி.ராஜேந்தர் அசராமல் அளித்த பதில்களில் தன்னம்பிக்கை மிளிர்ந்ததைக் கண்டு அசந்தேன்!

- எம்.ராகவன், பாண்டிச்சேரி-6

கம்பன் கழகம் வெளியிட்ட கையடக்க கம்பராமாயணப் புத்தகம் உண்மையிலேயே ஒரு சீரிய முயற்சி! உண்மையான தமிழ்த் தொண்டு இதுதான். நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் பாராட்டுக்குரியவர். காலப்பெட்டகத்தில் இது பற்றிப் படித்தபோது, பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன்.

- எஸ்.சுகுணா ராம்குமார், வேலூர்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ஆபத்தா?!