Published:Updated:

திருடாதே

திருடாதே


விகடன் பொக்கிஷம்
திருடாதே
திருடாதே
திருடாதே
திருடாதே
திருடாதே

சேகர்-சந்தர்

சந்தர்: என்ன, திருட்டுக் கதைதானே?

சேகர்: ஆமாமாம்! திருடனை வச்சுக்கிட்டுதான் கதை பூராவும். ஆனா, கடைசியிலே எம்.ஜி.ஆர். திருடாதேன்னு சொல்றாரு. படம் முழுக்க ஒரே அடியும் குத்துமா கத்தான் இருக்கு. அதையும் திருட் டுக்களையும் குறைத்து, நடிப் புக்குச் சந்தர்ப்பம் கொடுத்தி ருந்தா நன்றாயிருந்திருக்கும். கதை ஆரம்பத்திலே வைர நெக்ல ஸைத் திருடறதும், அதற்காக வருத்தப்படறதும் 'விடிவெள்ளி' படத்தை ஞாபகப்படுத்துது.

சந்தர்: அது சரி, சமூகப் படமாச்சே, எம்.ஜி.ஆர். எப்படி?

சேகர்: பரவாயில்லே! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உணர்ச்சியோடு நன்றாகவே நடிச்சிருக்கார். ராஜு இறந்து போன சமாசாரத்தை அவன் குடும்பத்தாரிடம் சொல்ல முடி யாமல் தவிக்கிற இடத்திலும், தன் அம்மாவிடம் 'நான் திருந்திவிட் டேன்'னு கதறுகிற இடத்திலும், கடைசியிலே ஜெயிலுக்குப் போற போது தன் காதலியைப் போலவே கோணங்கி செய்து சிரிக்க வைக்கிற இடத்திலும் நன்றாக நடிச்சிருக்கார்.

திருடாதே

சந்தர்: கூட யார்? சரோஜாதேவியா?

சேகர்: அமர்க்களம் போ! கிராமத்துப் பெண்ணா வந்து ரொம்பத் துடுக்கா நடிக்கிறார்.

சந்தர்: சிரிப்புக்கு யாரு?

சேகர்: தங்கவேலுதான். அவர் கடைசியிலே போலீசுக்குப் போன் செய்யற ஒரு இடமே போதுமே!

சந்தர்: பாட்டுக்கள் எப்படி?

சேகர்: பட்டுக்கோட்டை கல் யாணசுந்தரம் போட்டிருக்கிற 'திருடாதே, பாப்பா திருடாதே' பாட்டு, நல்ல கருத்தோடு அமைந்திருக்கு. அதே போல, பாழ் மண் டபத்திலே காதல் காட்சியும், கடைசியிலே இருட்டறையிலே எம்.ஜி.ஆரும் நம்பியாரும் சண்டை போடற காட்சியும் புதுமையா இருந்தது.

சந்தர்: நீ சொல்வதைப் பார்த்தா, படம் நல்லா ஓடும் போல இருக்கே?

சேகர்: ஓடறதுக்காகத்தானே திருடியிருக்காங்க!

திருடாதே
திருடாதே