Published:Updated:

ஊருக்கு உழைக்கத் தயாரா?

ஊருக்கு உழைக்கத் தயாரா?


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்  
ஊருக்கு உழைக்கத் தயாரா?
ஊருக்கு உழைக்கத் தயாரா?
ஊருக்கு உழைக்கத் தயாரா?
ந.வினோத்குமார்
படங்கள்:என்.விவேக்,ஜெ.தான்யராஜூ
ஊருக்கு உழைக்கத் தயாரா?
ஊருக்கு உழைக்கத் தயாரா?

'இளைஞனே! மாபெரும் லட்சியங்களையும், முன்னேற்றத்தையும், வெற்றியையும்

நோக்கி நீ நடைபோடும்போது உன்னோடு இந்த நாட்டின் பெருமைகளும் பின் தொடர்கின்றன என்பதை நினைவில் கொள்!' என்றார் விவேகானந்தர். மற்ற எந்த நாட்டையும்விட நம் நாட்டின் மிகப் பெரிய பலம், வளம் என்ன தெரியுமா? நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 70 சதவிகிதத் தினராக இருக்கும் இளைஞர்கள்தான்!

எப்போதும் வகுப்பறைகள்தான் நாட்டின் தலைவிதிகளைத் தீர்மானித்திருக்கின்றன. ஆட்சியா ளர்களைத் தீர்மானித்திருக்கின்றன. போர்ச் சூழலையும், இயற்கைப் பேரிடர் தருணங்களையும் சமாளிக்க இளைஞர் சக்திதான் தோள் கொடுக்கும். 'தமிழகம் தழுவிய அளவில் கல்லூரிகள் ஸ்டிரைக்!' என்று அறிவித்தால், 'துணை ராணுவத்தைத் துணைக்கு அழைக்கலாமா?' என்று ஆட்சியாளர்கள்கவலை கொள்வார்கள். சமூகத்தின் மேன்மையில் இளைஞர்களின் பங்கு அபரிமிதமாக இருக்கும். ஆனால், இன்றைய 'ஐ.டி. சூழல்' இளைஞர்களிடம் அத்தகைய வீரியம் இருக்கிறதா? பாசத்தையும் சமயங்களில் வெறுப்பையும் அளிக்கும்குடும் பம் ஒரு பக்கம், வேதனைகளிலும் சாதனைகளிலும் தோள் கொடுக்கிற தோழர்கள் ஒருபக்கம், ஊழலை உமிழும் அரசு இயந்திரம் ஒரு பக்கம், என்னவாகப் போகிறோம் என்று புரியாத வாழ்க்கைப் பயணம் ஒரு பக்கம், நெருக்கடி மிகுந்த இன்றைய சூழலில் ஓர் இளைஞன் சமூகத்தைப்பற்றிச் சிந்திக்க அவகாசம் இருக்கிறதா?

ஊருக்கு உழைக்கத் தயாரா?

"இருக்கிறதோ இல்லையோ... ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்!" என்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், "ஒவ்வொரு காலத் திலும் ஒவ்வொரு மாற்றத்துக்கு இளைஞர்கள்தான் அடிப்படையாக இருந்திருக்கிறார்கள்... இருந்துகொண்டும் இருக்கிறார்கள். 'இன்று நாம் புதிதாகப் பிறந்தோம்' என்ற வரிகளுக்கு மிகச் சரியான உதாரணம், இளைஞர்கள்தான். மேலை நாடுகளில் 18 வயது நிரம்பிவிட்டால், தன் பொறுப்புகளை உணர்ந்து, தேடலோடு தங்கள் வாழ்க்கைப்

ஊருக்கு உழைக்கத் தயாரா?

பயணத்தை முன்னெடுக்கிறார்கள். ஆனால், இங்கே இன்னும் பெரும்பாலானவர்கள் வீட்டிலும் தன் கடமை களைச் செய்யாமல், சமூகத்துக்கும் எந்த வகையிலும் பயன்படாமல் தங்கள் நாளையும் பொழுதையும்வீணாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 'நமக்கு ஏன் இந்தத் தேவை இல்லாத வேலை?' என்று பகத்சிங், பாரதி போன்றவர்கள் நினைத்து இருந்தால்... இன்று வரை இந்தியர்கள் அடிமை களாகத்தான் இருந்திருப்பார்கள்.

இன்று ஒரு சொடுக்கில் உலகம் உங்கள் உள்ளங்கைகளில் விரிகின்றது. உலக வல்லரசுகள், இந்தியா போன்றவை ஈழத்தில் நடந்த கொடுமைகளை மறைத்தபோது இணையதளம் மூலமாகப் பல உண்மைகள் வெளிவந்தன. சிறந்த இந்தத் தகவல் பரிமாற்ற ஊடகத்தை எத்தனை இளை ஞர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள்?

சமூகத்தின் மேல் ஈடுபாடு, தன் கடமையை உணர்தல், தனக்கான தத்துவம் எது என்று கண்டுபிடித்தல், அதைப் பின்பற்றுதல், நிறைய வாசிப்பு ஆகியவை மூலம் ஒரு இளைஞன் சமூகத்தின் அவலங்கள், வளர்ச்சிகள், மாற்றங்கள் சார்ந்த பார்வையை ஏற்படுத்த முடியும். சமூகத்துக்குத் தன் பங்களிப்பைச் செய்ய முடியும். சுயநலம் இல்லாத தலைவர்களைத் தங்களின் வழிகாட்டிகளாக இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்!" என்று தன் பார்வையை முன்னிறுத்துகிறார்.

வழக்கறிஞர் அருள்மொழி எதையும் பொது நலமாகப் பார்க்க அறிவுறுத்துகிறார். "சமூக அக் கறை, பொதுநலம் ஆகியவற்றைப் பற்றிய தவறான எண்ணம் இருக்கிறது. பொது நலனில் சுயநலமும் கலந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டுக் குழாயில் நீர் வராதபோது, தெருவில் சாக்கடை அடைபடும்போதுதான் நீங்கள் சமூகத்தைப்பற்றிச் சிந்திக்கிறீர்கள். இது மட்டும் போதாது. விலைவாசி, அடிப் படைச் சட்ட திட்டங்கள், வரலாற்றுப்பிழை கள், வெளியுறவுத் துறைக் கொள்கைகள் என இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கின்றன. பிரச்னைகளின் பின்புலம்பற்றித் தெரிந்து இருப்பதும், இணைந்து செயலாற்றுவதும் தான் சமூக முன்னேற்றத்தில் இளைஞர் களின் அடிப்படைப் பங்களிப்பாக இருக்க முடியும்!" என்கிறார்.

"எமர்ஜென்ஸி காலத்தில் இருந்த வேகமோ, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்த வீரமோ இன்றையஇளை ஞர்களிடத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம்" என்று ஆதங்கம் கலந்த கோபத்துடனேயே ஆரம்பிக்கிறார் மருத்துவரும், தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் தலைவரு மான நா.எழிலன். "16 வயது முதல் 26 வரை வயதுள்ள இன்றைய இளைஞர்களை உளவியல் ஆய்வுக்கு உட் படுத்தினார்கள். 1979-89, 89-99 காலகட்டங்களுடன், 99-2009 காலகட் டத்தை ஒப்பிடும்போது சமூக அக்கறை தற்போதைய தலைமுறையினரிடையே 40 சதவிகிதமாகக் குறைந்து இருப் பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய போராட்டம் வேலை தேடுவது. அதற்கடுத்த போராட்டம் கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்வது. 24 மணி நேரமும் தங்களின் தேவைகளுக்காக உழைக்கிற சூழலில் சமூகம் பற்றிச் சிந்திப்பதற்கு அவர் களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? சமூகத்தில் நிகழ்கிற பிரச்னைகளுக்கான காரணங்கள், அதன் விளைவுகள்பற்றி ஆய்வுகள் நடத்திப் பார்ப்பதும், இளைஞர்கள் எந்த ஒரு தவறான பாதையையும் தேர்ந்தெடுத்துவிடாமல் அவர்களை நல்வழிப்படுத்துவதும் இப்போதைய தேவை. இவற்றைத் தனி மனிதனாகச் செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. ஆகவே இயக்கமாக மாறுங்கள்!" என்கிறார் எழிலன்.

ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பு 'மே 17'. அந்த தினத்தில்தான் ஈழத் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டதால், இயக்கத்துக்கு அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அதன் தலைவர் திருமுருகன், "இன்று பாடப் புத்தகங்களின் வழியாகத்தான் இளைஞர்கள் சமூகத்துக்குள் வருகிறார்கள். மனரீதியாகவோ அல்லது அறிவுசார் அடிப்படையிலோ அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் இல்லை. களத்தில் இறங்கும்போதுதான் சமுதாய அறிவு வளரும். சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் பயணத்தில் இளைஞர்களின் கல்வி, வேலை, குடும்பம் ஆகியவை எந்த விதத்திலும் பாதிப்பு அடையப் போவது இல்லை!" என்று மிக முக்கியமான கருத்தை முன் வைத்துப் பேசுகிறார். "மூத்த குடியாம் தமிழ்க் குடியில் சுமார் லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டார் கள். அதன் மிகச் சரியான எண்ணிக் கையை ஆதாரபூர்வமாக வெளியிட் டது எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான். இலங்கையில் நடந்த திரைப்பட விழாபற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் விளைவுகள்பற்றியும் தெரிவித்தது இந்த இயக்கத்தின் இளைஞர்கள்தான். இளைஞர்களுக்கு இன்று மிகவும் தேவை எதிர்த்துப் போராடும் போராட்ட குணம்தான்!" என்கிறார் இவர் அழுத்த மாக.

ஊருக்கு உழைக்கத் தயாரா?

மதுரையில் மாணவர் போராட்டங்கள் பலவற்றை முன்னின்று நடத்திய அகராதி, "திரும்பத் திரும்ப போராட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதன் மூலம்தான் ஓர் இளைஞன் தன் பங்களிப்பை இந்தச் சமூகத்துக்கு வழங்க முடியும். இளமைப் பருவம் மிக முக்கியமான காலகட்டம். காரணம் நல்லது எது, கெட்டது எது என்று தன்னால் பகுத்தறியக்கூடிய ஒரு சுய சிந்தனையோடு வருகிறார்கள். ஆண்கள் எந்த அளவுக்கு முன் வருகிறார்களோ அதே அளவு இன்று பெண்களும் பல போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எழுத்து, கலை, பேச்சு என்று எந்த விதத்திலேனும் சமூக அவலங்களை எதிர்த்து உங்கள்எதிர்ப் புகளைப் பதிவு செய்யுங்கள். மக்கள் போராட்டங்களில் முக்கியமான அம்சம் இது" என்கிறார். எம்.பி.ஏ., படித்து முடித்து இயற்கை வேளாண்மையில் ஆர்வம் செலுத்தி வரும் ஏங்கல்ஸ் ராஜா, "நான்கு இளைஞர்கள் கூடினால் சினிமாபற்றிப் பேசுகிறார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அது உண்மையல்ல; சமூகப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அதற்குத் தீர்வு காண குழுவாக உழைப்பவர்கள் இருக் கிறார்கள். அநீதி, அவலங்களைக் கண்டு எல்லா இளைஞர்களிடமும் உள்ளார்ந்த கொதிப்பு இருக்கிறது. கோபம் இருக்கிறது. ஆனால், அதை எப்படிவெளிப் படுத்துவது என்றுதான் தெரியவில்லை.

தவறு எங்கு, எப்படி, யாரால், ஏன் நிகழ்த்தப் படுகிறது என்பதும் தெரிகிறது. ஆனால், அதைச் சரிப் படுத்துவது எப்படி என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. சமூக முன்னேற்றத்துக்காக எல்லா வற்றையும் செய்துவிட இயலாதுதான். ஆனால், இயன்றதைச் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம்!" என்கிறார்.

'இது வரை வந்தவர்கள் எல்லாம் பிரச்னைகளை சுட்டிக் காட்ட மட்டுமே செய்தார்கள். ஆனால், இனி வரப்போகும் இளைய சமுதாயம்தான் அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைச் செயல்படுத்தப் போகிறார்கள்!' என்றார் கார்ல் மார்க்ஸ். பிறந்தோம், இருந்தோம், சென்றோம் என்று வாழ்வதா வாழ்க்கை? அப்படி வாழ்ந்தால் அது ஐந்தறிவு வாழ்க்கை.

வாழும் காலத்தில் நாலு பேருக்கு நன்மை செய்தால் அதுதான் மனித வாழ்க்கை. அர்த்தம் பொதிந்த வாழ்க்கை. நீங்கள் இங்கே மனிதனாக வாழ்ந்தீர்கள்என்ப தற்கு ஏதாவது சாட்சியை விட்டுச் செல்லுங்கள்.

ஆம்... நீங்கள் மனிதர்தானே?

ஊருக்கு உழைக்கத் தயாரா?
ஊருக்கு உழைக்கத் தயாரா?