மயிலாப்பூர்வாசிகளுக்கு இந்த ஆலயத்தின் மகிமை தெரியுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் கட்டப்பட்ட பழமையான தேவாலயங்களில் ஒன்று. கட்டடக் கலையில் பரோக் (baroque) என்று சொல்லப்படும் பாணியில் கட்டப்பட்ட ஆலயம். பரோக் என்பது பிரமாண்டத்தையும் அலங்காரத்தையும் குறிக்கும் வார்த்தை.
இந்தத் தொடர்பற்றி கிருஷ்ணா கூறிய இன்னொரு கருத்து, இது பகட்டாகவும், படாடோபமாகவும் இருக்கிறது. எல்லாம் இந்த கோல்ஃப் காரணமாக ஏற்பட்ட வயிற்றெரிச்சல். 'நீ என்ன பெரிய அம்பானி என்று நினைப்பா?' என்றான். 'இல்லை, அம்பாசமுத்திரம் அம்பானி' என்றேன்.
வாட வெத்தலை என்றால் என்ன தெரியுமா? ஓர் ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்கு ஒரு வெற்றிலைக் கடைக்காரர் தினமும் கும்பகோணம் கொழுந்து வெற்றிலையைக் கொண்டுவந்து கொடுப்பார். இந்தக் கோடீஸ்வரன் என்ன செய்வான் என்றால், கடைக்காரர் கொடுக்கும் புத்தம் புதிய வெற்றிலையை ஈரத் துணியில் கட்டிவைத்துவிட்டு முந்தின நாள் கொடுத்த வெற்றிலையை எடுத்துப் போட்டுக்கொள்வான். இப்படி வாடிய வெற்றிலையையே அவன் சாப்பிட்டு வந்ததால் அவன் பெயரே வாட வெத்தலை என்று ஆயிற்று. பணத்துக்கும் நமக்குமான உறவு இப்படிப்பட்டதுதான். பணத்துக்காக வாழ்க்கையா... வாழ்க்கைக்காகப் பணமா?
என் நண்பர் ஒருவர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வரும்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் விபத்துக்கு ஆளானார். காயம் அதிகம் இல்லை. ஆனாலும், இதே சாலையில் அவருக்கு இது மூன்றாவது விபத்து. நண்பரிடம் நான் இரண்டு கேள்விகள் கேட்டேன். இரண்டுக்கும் அவரிடம் இருந்து ஆமாம் என்று பதில் வந்தது. அப்படியானால் விபத்து நடக்க எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். அந்த இரண்டு கேள்விகள்: 1. அதிகாலையில் கிளம்பினீர்களா? (அவர் கிளம்பிய நேரம் காலை 4.30. விபத்து நடக்கும்போது மணி 5. அநேகமாக இரவு முழுவதும் லாரி ஓட்டும் டிரைவர்கள் அரைத் தூக்கத்தில் இருக்கும் நேரம்). 2. முன் இருக்கையில் ஸீட் பெல்ட் போடாமல் இருந்தீர்களா?
இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளே காரணம். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஒருவர் காரில் சென்றுகொண்டு இருக்கிறார். ஒரு மேம்பாலம் வருகிறது. சட்டென்று அதில் செல்கிறார். திடீரென்று கார் 60 அடி உயரத்தில் அந்தரத்தில் பறக்கிறது. யார் காரணம்? கட்டி முடிக்கப்படாத பாலத்தின் ஆரம்பத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாதபடி தடைக்கல் போடாதது யார் தவறு? அந்த இன்ஜினீயர்கள் யார்? எல்லோரும் நம்முடைய சொந்தக்காரர்கள்தானே?
இந்தியா முழுவதும் அடிக்கடி நடக்கும் ஒரு விபத்து,ஆழ் துளைகளில் குழந்தைகள் சிக்கிக்கொள்வது. பிறகு, அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ராணுவம் சுரங்கப் பாதை அமைத்துப் போராடுவார் கள். சேட்டிலைட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும். இந்தியாவே பிரார்த்திக்கும். இருக்கட்டும், இந்த விபத்துகளுக்கு யார் காரணம்? துளை போடும் தொழிலாளர்கள், அவர்களை மேற்பார்வை செய்பவர்கள் ஆகியோரின் பொறுப்பின்மை. துளையைப் போட்டுவிட்டு, வேலை முடிவுறாமல் மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் அந்தத் துளையின் மேல் வெறும் பேப்பரைப் போட்டு மூடிவிட்டுப்போவதால் ஏற்படும் விபத்து அது.
இதைப்போன்ற பொறுப்பற்ற தன்மைதான்
|