Published:Updated:

உயிர் மொழி! - 04

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 04


உயிர் மொழி!
உயிர் மொழி!  - 04
உயிர் மொழி!  - 04
டாக்டர் ஷாலினி
ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
உயிர் மொழி!  - 04

மோசமான மாமியார்கள் ஏன் உருவாகிறார்கள்? அது எப்படி இந்திய ஆண்களுக்கு

மட்டும் தன் அம்மாவின் குறைகள் எதுவும் கண்ணில் தெரிவதே இல்லை? என்று பல வாசகிகள் கேட்கிறார்கள். ஆண்களைவிடுங்கள். பெண்களுக்கேகூடத் தெரியாத ஓர் அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் பவர் வேட்கை அதிகம்.

உலகெங்கும் இருக்கும் சர்வ ஜீவராசிகளின் பெண் பாலினத்தைக் கூர்ந்து கவனித்தால், வெட்டவெளிச்சமாகத் தெரிந்துபோகும் உண்மை... the female of the species is deadlier than the male. அதாகப்பட்டது, எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது. காரணம், பெண்பாலுக்குத்தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவக் குணமும் பிழைக்கும் திறனும் இருக்கிறது. அவர்கள் இப்படி இருந்தாகவும் வேண்டும். காரணம், குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையைக் கற்றுத்தருவதும் பெண்ணின் வேலைதானே. இவள் சிறந்த வேட்டுவச்சியாக இருந்தால்தானே, அவள் குட்டிகளும் பிழைக்க முடியும்? அதனாலேயே, இயற்கை பெண்களைப் பிறவி வேட்டைக்காரிகளாகப்

உயிர் மொழி!  - 04

படைக்கிறது. மனிதர்களிலும் அப்படித்தான். ஆனால், ஒரு சின்ன வித்தியாசம், பிற பெண் பாலினம் நேரடியாகத் தன் வல்லமையை வெளிப் படுத்தும். தனக்கு வேண்டிய பவரைத் தானே போராடிப் பெற்றுக்கொள்ளும்.

ஆனால், மனிதப் பெண்கள் தங்கள் பவர் தேவைகளை இப்படி நேரடியாகவோ, பகிரங்கமாகவோ தீர்த்துக்கொள்வது இல்லை. எல்லாமே மறைமுகத் தாய் வழி ஆதிக்கம்தான். காரணம், பிற ஜீவராசித் தாய்கள் யாரையும் அண்டிப் பிழைக்காமல் சுயமாக வாழ்கின்றன. ஆனால், மனிதத் தாய்க்கு மட்டும் சமீபத்திய சில காலம் வரை யாரையாவது, அண்டிப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. காரணம், நம் சமூக அமைப்பில் எல்லா அதிகாரங்களும் ஆண்களிடமே இருந்தன. அதனால், யாராவது ஓர் ஆணைப் பிடித்து, அவன் மேல் ஓர் ஒட்டுண்ணியாக வாழ்ந்தால் ஒழிய, இவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லை என்கிற நிலைதான் பெண்களுக்கு.

ஆக, இயற்கையின் விதிப்படி பெண் வேட்கையில் சிறந்தவளாக இருந்தாக வேண்டும். ஆனால், மனித சமூக அமைப்பில் அவளுடைய வேட்டுவ குணம் வெளியே தெரிந்தால், ஆண்கள் ஆட்சேபிப்பார்கள். இந்த முரண்பாட்டைச் சரிசெய்யவும் பெண்கள் பல வழிகளை வைத்திருந்தார்கள்.

உயிர் மொழி!  - 04

1. மற்ற பெண் மிருகங்களைப்போல தானே வேட்டைக்குப் போய் நேரத்தை விரயம் செய்யாமல், ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு பதி/புருஷன்/பிராணநாதா/பிரபோ என்கிற பதவிகளைக் கொடுத்து, அவனுக்குக் கொம்பு சீவிவிட்டு, அவனை வேட்டைக்கு அனுப்பி, அவன் மூலமாக உணவு, ஆதாயம், ஆற்றல் என்று பல வசதிகளைப் பெற்றுக்கொள்வாள். இந்த ஆணும் லொங்கு லொங்கு என்று இவளுடைய ஆசைகளை நிறை வேற்றத் தன் ஒட்டுமொத்த வாழ்நாளையே அர்ப்பணித்துவிடுவான். தன் பங்குக்கு இந்தப் பெண் அவனுடைய மரபணுக்களை மட்டும் பரப்பித் தரத் தன் கர்ப்பப்பையைப் பயன்படுத்துவாள். இந்தக் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருந்தால் எல்லாம் ஓ.கே. ஏதோ காரணத்துக்காக, இந்தப் பெண் எதிர்பார்த்த அளவுக்கு ஆண் வேட்டையாடி வெற்றியைக் குவிக்கவில்லை என்றால், அடுத்து அந்தப் பெண் என்ன செய்வாள் தெரியுமா?

2. முன்பு தேர்ந்தெடுத்த ஆணை டீலில் விட்டுவிட்டு, இன்னொரு புதிய ஆணை அந்தப் பதவிக்கு உயர்த்திவிடுவாள். இப்படிப் பகிரங்கமாக இன்னொரு ஆணுடன் கூட, தைரியம் இல்லாத பெண் என்ன செய்வாள்?

உயிர் மொழி!  - 04

3. கள்ளத்தனமாக, ரகசியமாக வேறு ஓர் ஆணுடன் கூடி, அவன் மூலமாகத் தன் காரியங்களைச் சாதித்துக்கொள்வாள்.

4. இப்படிப் பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ தன் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அமையாத பெண், என்ன செய்வாள்? தன் மகனை வைத்தே தன் எல்லா nonsexsual தேவைகளையும் தீர்த்துக்கொள்வாள். பல இந்தியக் குடும்பங்களின் நிலை இதுதான். 'இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? இந்த ஆள் சுத்த வேஸ்ட். நீயும் அப்படி இருந்துடாதேடா. அம்மா உன்னை நம்பித்தான் இருக்கேன். என் பிள்ளைதான் என்னைக் கரை சேர்க்கணும்' என்று புலம்பி, அழுதுவைத்தால் போதும். பையனுக்குத் தாய்ப் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிடும். 'அம்மா கஷ்டப்படும்போது நான் மட்டும் எப்படி என் பொண்டாட்டியோடு தனியா ஹனிமூன் போறது?' என்று அங்கேயும் அம்மாவை மடியில் கட்டிக்கொண்டு அழும் ஆண்களும் நம் ஊரில் உண்டு.

இந்த ஆடவர் குலத் திலகங்களுக்குத் தெரிவதே இல்லை, இவர்கள் இப்படி அரும்பாடுபட்டு வீடு, வசதி, புடவை, நகை, உணவு, ஊருலா என்று ஆற்றுவது எல்லாம் ஒரு மகன் தன் தாய்க்குச் செலுத்தும் நன்றி அல்ல; ஒரு கணவன் கொண்டவளுக்குச் செய்யும் கடமை என்று.

இப்படித் தன் ஆண் குழந்தையைக் கணவன் ஸ்தானத்துக்கு உயர்த்தி, அவன் மூலமாகத் தன் பவர் தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் பெண்கள் இந்தியாவில் ஏராளம். காரணம், மறுமணம் செய்துகொள்ளும் சுதந்திரமோ, கள்ள உறவு வைத்துக்கொள்ளும் தைரியமோ, நம் பெண்களுக்குப் பெரும்பாலும் இருப்பது இல்லை. அதனால், தங்கள் மகனை வைத்தே தங்கள் ஆட்டத்தை ஆடி முடிக்கப் பார்க்கிறார்கள்.

5. சரி, மகனே பிறக்கவில்லை அல்லது, பிறந்ததும் உதவாக்கரையாகிவிட்டது என்றால், அடுத்து அந்தத் தாய் என்ன செய்வாள்? தனக்குப் பிறந்த மகளையே மகன் மாதிரி வளர்த்து, அந்தப் பெண்ணை 'the man of the family' என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தி, ஒட்டுண்ணி மாதிரி மகளை உறிஞ்சி வாழ்வாள் தாய்.

6. இதில் எந்த வழியும் வேலை செய்யவில்லை என்றால் கடைசி கட்டத்தில் பெண்ணே கோதாவில் குதித்து, சுயமாகப் போராட ஆரம்பித்துவிடுவாள். தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, பவர் தேவையைத் தானே சுயமாகப் பூர்த்திசெய்துகொள்ளும் பெண்களைக் கண்டு வியப்போம் அல்லது, 'சே, பொம்பளையா அடக்க ஒடுக்கமா இருக்காளா'னு மிகத் துச்சமாக விமர்சிப்போம். ஆனால், அம்மா சென்டிமென்ட் என்னும் பிரம்மாஸ்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பெண்களைப் பார்த்தால் கை எடுத்துக் கும்பிடுவோம்.

உயிர் மொழி!  - 04

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? பெண்கள் எல்லாக் காலத்திலும் இந்த ஆறு வழிகளையும் பயன்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், நம் கண் முன்னாலேயே இது நடந்தாலும் நமக்கு இது புரிவது இல்லை. அதுவும் இந்த ஆட்டத்தை ஆடுவது நம் அம்மா என்றால், நம்மால் அதை உணரவே முடிவது இல்லை. லேசாகப் பொறி தட்டினாலும், 'சே... சே, எங்கம்மா அப்படி இல்லப்பா' என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

ஏன் தெரியுமா?

உயிர் மொழி!  - 04
உயிர் மொழி!  - 04
(காத்திருங்கள்)