தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு செய்கிற பணிகள் சிறப்பாகக் கவனிக்கப்படுகின்றன. 'ரெண்டு நாளாத் தூங்கலை; ஏகப்பட்ட வேலை' என்று சொல்லிக்கொள்கிறபோது ஒரு பெருமிதம் ஏற்படத்தான் செய் கிறது. இரவு நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், தூங்கி வழியும் முகத்தைக் கழுவிவிட்டு காரியசித்தியோடு கடமையாற்று கிறவர்கள் ஆகியோருக்குக் 'கடின உழைப்பாளி' என்ற பட்டமும் பாராட்டும் கிடைக்கிறது.
ஆனால், தேவையான அளவு தூங்கிவிட்டு இந்த வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகவும், தெளிவாகவும் செய்ய முடியும் என்பதுதான் உண்மை. இந்த உடல் ஓர் அபூர்வமான அறிவியல் கருவி. அது தனக்குத் தேவையான ஓய்வை ஏதாவது ஒரு வழியில் பெற்றே தீரும். உண்மையில் சொல்லப்போனால், தூக்கத்துக்கு எதிராகச் செயல்படுவது, இயற்கைக்கு எதி ராகச் செயல்படுவதுதான்.
சுறுசுறுப்பாக இயங்குவதற்கான உடல் ஆரோக்கியம் இருக்கும் இளமையில் அதிகம் தூங்க வேண்டியது இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த வயதில் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும் என்று அறிவியல் உலகம் அறிவுறுத்துகிறது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு, 16-ல் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் நாலு முதல் ஆறு மணி நேரம்தான்தூங்குகிறார்கள் என்று சொல்கிறது. அதுவும் ஆழ்ந்த தூக்கமாக இல்லை. பெரு நகரங்களில், வேலை நிமித்தமாகவோ, குடும்பச் சூழல் காரணமாகவோ, படிப்புச் சுமை காரணமாகவோ இந்த நிலை ஏற்படவில்லை. இணையதளத்தின் வழியாக சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளங்கள் வழியாக நண்பர்களுடனும், முகம் தெரியாத நட்புகளுடனும் நேரம் போவதே தெரியாமல் 'சாட்டிங்' செய்துகொண்டு இருப்பது முக்கியக் காரணமாகிறது.
இளம் பிராயத்தில் தூக்கம் மிக முக்கியமான பங்கு பெறுகிறது. மூளை துடிப்போடு இயங்க, அதற்குத் தேவையான ஓய்வு வழங்கப்பட வேண்டும். அதைத் தூக்கமே வழங்க முடியும். இளம் தலைமுறையிடம் அதிகமான மனஅழுத்தமும், படபடப்பும் ஏற்படத் தூக்கமின்மை முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.
உடல் நலத்தைத் தாண்டி, இன்றைய இளைஞர்களின் மனநலத்தைத் தூக்கமின்மை பெரிதும் பாதித்துவிடுகிறது என்பதே வருத்தம் அளிக்கிறது. குறைவான தூக்கம் ஹார்மோன் கோளாறுகளை உருவாக்குகிறது. செய்கிற பணியில் ஆழ்ந்து இயங்குகிற ஆற்றலைத் தடுக்கிறது. அர்த்தம் இல்லாமல் கோபம் ஏற்படுத்துகிறது. எதன் மீதும் எளிதாக எரிச்சல்கொள்ளவைக்கிறது. பொறுமை கிலோ என்ன விலை என்று கேட்கவைக்கிறது. சின்னத் தடங்கல்களைக்கூட பெரிய தடை யாகத் தோன்றவைக்கிறது.
இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டி ஒரு வேலை எப்படி வெற்றி பெறும், போட்டி நிறைந்த உலகில் தூக்கத்தைத் தியாகம் செய்யாவிட்டால், வாழ்க்கை என்ன ஆகும் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டேன். 'தூக்கம் விழித்து நீங்கள் நான்கு மணி நேரத்தில் செய்கிற வேலையைத் தேவையான அளவு தூங்கிவிட்டு, மூன்று மணி நேரத்தில் செய்துவிட முடியும். உறக்கத்தைத் தொலைத்தால்தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது நீண்ட காலமாக விதைக்கப்பட்டு இருக்கும் நம்பிக்கை. உண்மையில் தேவையான அளவு தூங்கினால்தான் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்' என்று விளக்கம் அளித்தார்.
தூக்கக் குறைவில் இளைஞர் உலகம் சந்திக்கும் இன்னொரு மிக முக்கியமான பிரச்னை. உடல் எடை அதிகரிப்பு. தூக்கம் இன்மை. உணவுப் பழக்கத்தை முறையற்றதாக்கி மீனீஷீtவீஷீஸீணீறீ மீணீtவீஸீரீ என்று சொல்லப்படுகிற அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிற பழக் கத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த உலகத்தையும் அதன் செயல்பாடுகளையும் கண் முன்னே காட்சிப்படுத்தினால், ஆங்காங்கே யாராவது தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அலுவலகங்களில், வகுப்பறையில், கடை கல்லாவில், மீட்டிங்குகளில், கடற்கரைகளில், சினிமா படப்பிடிப்பில் இப்படி இதுதான் இடம் என்றில்லாமல் எல்லா இடங் களிலும் தூங்குகிறோம். தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் இருந்ததும், தூங்க முடியாமல் போனதும்தான் இதற்குக் காரணம்.
|