மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 25

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 25


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 25
நீயும் ... நானும்! - 25
நீயும் ... நானும்! - 25
கோபிநாத், படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 25
நீயும் ... நானும்! - 25

கோ என்கிற வார்த்தைக்கு இணையான ஒரு தமிழ் வார்த்தை சொல்லுங்கள் என்று ஏழு, எட்டுப் பேரிடமாவது கேட்டு இருப்பேன். எல்லாரும் ஈகோவுக்கு விதவிதமான விளக்கம் சொன்னார்களே அன்றி, யாராலும் அதற்கு ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை. ஆணவம் என்ற சொல் அநேகமாகச் சரியாகஇருக்கும் என்றார் ஒருவர். இல்லாத ஒரு விஷயத்துக்கு எப்படி ஒரு வார்த்தை இருக்க முடியும்?

எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஈகோ என்று சொல்ல முடியும்? ஆனாலும் எல்லாரும் ஈகோபற்றி அடிக்கடி பேசிக்கொள்கிறோம். 'அவனைவிடகுறை வாகப் படித்தவரிடம் பேசக்கூட மாட்டான். ரொம்ப ஈகோ பிடித்தவன்.', 'செஞ்சது தப்பு. ஆனா,மன்னிப்பு கேட்க மாட்டாங்களாம். ரொம்பத்தான் ஈகோ.', 'மனசுல பேசணும்கிற ஆசை இருக்கு மச்சான். ஆனா, கண்டுக்காத மாதிரியே போவா. ஈகோ பிடிச்ச பொண்ணுடா அது!'

எது ஈகோ? மதிக்காமல் இருப்பதா, மன்னிப்புக் கேட்க மறுப்பதா? மரியாதைக் குறைவாக நடத்துவதா, ஆசையை ஒளித்து வைப்பதா அல்லது இன்னும் ஏதோ ஒன்றா?

'குஷி' படத்தில் விஜயகுமாரிடம் விஜய்சொல் கிற மாதிரி ஈகோன்னா... ஈகோ. அல்லது விஜயகுமார் விளக்கம் சொல்கிற மாதிரி, 'அகம் பிடிச்ச கழுத'. சரி, ஏதோ ஒண்ணு. தவறான எல்லா விஷயமும் ஈகோவாகப் பார்க்கப்படு கிறதா?

இல்லையே. ஈகோவிலும் நல்ல ஈகோ, கெட்ட ஈகோ என்று வகைப்படுத்துகிறோம்.

'நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை' என்று அவன் சொன்னபோது என் ஈகோ செத்துப்போச்சு' என்போம். 'என் தன்னம்பிக்கை மீதுஎனக்கு ஒரு ஈகோ உண்டு. அதை நான் மதிக்கிறேன்.' இப்படி நல்ல மாதிரியாகச் சொன்னால் அது நல்ல ஈகோவாகிறது.

நீயும் ... நானும்! - 25

ஈகோவுக்கு இணையான தமிழ் வார்த்தையை அப்புறம் கண்டுபிடிக்கலாம். ஈகோ பிடித்தவர் என்று பெயரெடுக்க எது காரணமாக இருக்கிறது. தடுமாற்றம் இல்லாமல் சொல்ல முடியும்தயக்கம் தான் என்று. மன்னிப்பதில், பாராட்டுவதில், கொண்டாடுவதில், அழுவதில், அழுத்தமாகப் பேசுவதில், அன்பு பாராட்டுவதில், சரணாகதி அடைவதில், அனுசரித்துப்போவதில்,அக்க றையை வெளிக்காட்டுவதில்... இப்படியான எல்லா வெளிப்பாடுகளிலும் காட்டப்படும் தயக்கம்தான் ஈகோவாகிறது.

சின்ன வயதில் நண்பர்களுக்குள் சண்டை வரும். ஐஸ்பாய் விளையாட்டில் காட்டிக்கொடுத் தது, அம்மாவிடம் போட்டுக்கொடுத்தது, குச்சி ஐஸ் தராதது, கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளா தது, நீ என் எனிமி என்று சொல்லித்தள்ளிவிட் டது. இப்படி ஏதேதோ காரணங்களுக்காகச் சண்டை போட்டுப் பேசாமல் இருப்பார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, மற்ற நண்பர்கள் ஒன்று கூடி, 'டேய்... பழம் விடுடா, ஸாரி சொல்லுடா' என்று அவர்களைச்சேர்த்து வைப்பார்கள். அவர்களும் அந்தத் தருணத்துக் காகக் காத்து இருந்ததுபோல, 'ஓ.கே. நாம இனிமே ஃப்ரெண்ட்ஸ், எனிமி இல்லை' என்று சொல்லிப் பழம்விட்டுக்கொள்வார் கள்.

இளம் பிராயத்தில் ஏதோ காரணத்துக்காக நண்பனுடன், உறவினருடன் பேசாமல் இருக்கும் நம் எல்லாருக்கும் தயக்கம் இல்லாமல் மன்னிக்கிற மனோபாவமும், சேர்ந்துகொள்கிற பக்குவமும் சின்ன வயதில் இருந்திருக்கிறது. சலனம் இல்லாமல் மனசு நினைப்பதை, செய்ய விரும்புவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிற தயக்க மின்மை அந்த வயதின் சிறப்பம்சம்.

நீயும் ... நானும்! - 25

'நான்' என்பது ஒரு தனி அந்தஸ்து என்று நம்பாத வரை, ஈகோ என்ற தலைவலி எல்லாம் இருப்பது இல்லை. அந்தஎண்ணம் தான் என் உணர்வை, என் படைப்பை, என் அறிவை, என் சொல்லை, என்முயற்சிகளை, என் ரசனைகளை, உலகிலேயேசிறந்தது என்று நம்பவைக்கிறது. இது சரியா அல்லது தவறா என்று அதைப் பொதுக் கேள்விக்கு வைக்கத் தயங்குகிறது.

தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு புதுச் சட்டை போட்டுக்கொண்டு நண்பர்கள் எல்லாரிடமும் போய்க் காட்டுகிற வயசு ஒன்று உண்டு. ஒவ்வொருவரிடமும் தன் சட்டை எப்படி இருக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்வதில் தயக்கம் இருந்தது இல்லை.

எந்த ஒரு விஷயத்தையும் அதற்குரிய யதார்த்தங்களோடு வெளிப்படுத்துகிறபோது அது குறித்த அபிப்ராயங்களை ஏற்றுக் கொள்ள அல்லது புரிந்துகொள்ள மனம் இடம் கொடுக்கிறது. தயங்க ஆரம்பிக்கிற போது, அந்த விஷயம் குறித்து நான்நினைத்து இருப்பது மட்டுமே சரி என்று நம்பஆரம்பிக் கிறோம். அதற்கு மாறாக, வேறு ஒன்று சொல்லப்பட்டால், நாம் ஏற்றுக்கொள்வது இல்லை.

நீயும் ... நானும்! - 25

உங்கள் உணர்வைத் தவிர, வேறு எதுவும் சிறந்தது இல்லை என்ற நினைப்பு மனதுக்குள் பதிவதன் பின்னணியில்ஒளிந்து இருப்பது தயக்கம்தான். கேட்பதில் இருக்கும் தயக்கம், எனக்கு இது தெரியாது என்று வெளிப்படையாகச் சொல்வதில் இருக்கும் தயக்கம். இப்படி நிறைய உண்டு. இந்தத் தயக்கங்களை மறைக்கவும், ஒளிந்துகொள்ளவும் ஈகோ ஒரு நல்ல போர்வையாகிவிடுகிறது.

நான் சொல்வதுதான் சரி என்று ஒற்றைக் காலில் நிற்பதன் மூலம் தன் தயக்கங்களை மறைத்துக்கொள்ளலாம். எதிரில் இருப்பவரின் கருத்துக்குச் செவிமடுக்க நான் தயார் இல்லை என்பதையும் சொல்லிவிடலாம். இது சுலபமாகத் தெரிந்தாலும் இந்த மனோபாவம் என்றைக்கும் நல்லதல்ல. என் நினைப்பே சரி என்கிற எண்ணம் நீண்ட காலப் பார்வையில் ஆபத்து.

அந்த விஞ்ஞானி மிகச் சிறந்த புத்தி சாலி. யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததை அவரால் செய்துவிட முடியும். ஆனால், அவரின் படைப்பை ஒரு சிறு குறை சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பல வருட முயற்சிக்குப் பின் ஒரு புதிய சூத்திரத்தைக் கண்டறிந்தார். தன்னைப் போலவே அச்சு அசலான 13 உருவங்களை உருவாக்கி, அவற்றுக்கு உயிர் கொடுத்து உலவவைக்க அந்த சூத்திரத்தை அவர் பயன்படுத்தினார். இந்த சூத்திரத்தைக் கண்டறிய விஞ்ஞானிக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. காரணம், இன்னும் சில வருடங்களில் தன் உயிரை எடுத்துச் செல்ல எமன் வருவான் என்று அவருக்குத் தெரியும்.

கண், காது, மூக்கு, பேச்சு, செயல் என அனைத்திலும் விஞ்ஞானியைப்போன்றே அந்த 13 பேரும் இருந்தார்கள். விஞ்ஞானி எதிர்பார்த்ததைப்போல ஒருநாள் எமன் வந்தான். ஒரே மாதிரி 14 பேர் இருப்பதைப் பார்த்து ரொம்பவே குழம்பிப்போனான். விஞ்ஞானியின் ஐடியாவும் அதுதானே. எப்படியாவது உண்மையான விஞ்ஞானியின் உயிரை எடுத்தாக வேண்டும். என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறினான் எமன். சட்டென ஒரு யோசனை வந்தது

அந்த 14 பேரையும் ஓர் இடத்துக்கு வரவழைத்தான். 'விஞ்ஞானி சார், மிக அருமையான கண்டுபிடிப்பு உங்களுடையது. மனிதனை மறு உருவாக்கம் செய்வது சாதாரண விஷயமா... இருந்தாலும் உங்கள் கண்டுபிடிப் பில் ஒரு குறை உள்ளது' என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னான். எல்லோரும் அமைதியாகி இருக்க, ஒருவர் மட்டும் கோபமாகி முன்னே வந்து கத்தினார். 'என் படைப்பை எப்படிக் குற்றம் சொல்ல முடியும். என்ன குறை கண்டீர்கள்?' என்று படபடவென கோபப்பட்டார்.

எமன் முகத்தில் ஏக சந்தோஷம். 'வாங்க சார், உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்' என்று கையோடு மேலோகம் கூட்டிக்கொண்டு போனார். விஞ்ஞானி எமனிடம் கேட்டார், 'எப்படி நான்தான் விஞ்ஞானி என்று கண்டுபிடித்தீர்கள்?'

'நீ பெரிய அறிவாளி என்றாலும் ஈகோ பிடித்தவன் என்பது தெரியும். அதனால்தான் குறை இருக்கிறது என்று சொன்னேன். நீயும் கோபமாக முன்னே வந்தாய் அவ்வளவுதான்' என்றார்.

இந்த ஜன சமுத்திரத்தில் நீங்கள், நான் எல்லோரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள். ஆனால், நான் மட்டுமே சிறந்தவன் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளியே வந்தாக வேண்டும்.

தயங்கித் தயங்கி நின்றால், ஈகோவுக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும். இல்லாத ஒன்றுக்குள் ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும்?

வெளியே வாருங்கள்...
தென்றல் சுகமாக வீசுகிறது
!

நீயும் ... நானும்! - 25
நீயும் ... நானும்! - 25
- ஒரு சிறிய இடைவேளை