மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 18

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 18

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 18
நீயும்... நானும்! : கோபிநாத் - 18
கோபிநாத், படம்: 'தேனி'ஈஸ்வர்
நீயும்... நானும்!
நீயும்... நானும்! : கோபிநாத் - 18
நீயும்... நானும்! : கோபிநாத் - 18

ரெசஷன்... கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் அதிகமாக உச்சரித்த வார்த்தை. 'கடைத் தெரு எல்லாம் காத்து வாங்குது... யார்கிட்டேயும் பணம் இல்லை... ரெசஷன்பா. தோ இவர் மாப்ள ஐ.டி-யில 50 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டு இருந்தாரு... திடீர்னு வேலை போயிடுச்சு' டைப் வசனங்களை எல்லோரும் கேட்டிருப்போம். பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு... நிதித் தட்டுப்பாடு,

நீயும்... நானும்! : கோபிநாத் - 18

புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதில்லை என நிறையப் புதிய விஷயங்களையும் பொருளாதாரம் சார்ந்த கூறுகளையும் ரெசஷன் நமக்கு அறிமுகம் செய்துவைத்தது.

உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இந்தப் பொருளாதாரச் சரிவின் தாக்கம் கொஞ்சம் குறைவுதான். ரெசஷன் என்கிற போர்வையில் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை திட்டமிட்டு நடத்தப்படுவதும் பல இடங்களில் நடந்தன... நடக்கின்றன. பெருநகரங்களை மையப்படுத்தி நடக்கும் வர்த்தகப் பரிமாற்றங்களும், யோசனைகளும் பொருளாதார வளர்ச்சியை அலங்காரம் சார்ந்ததாக, அடிப்படைக் கட்டமைப்பைப் பலமாக்கும் உத்திகளற்ற வெறும் வர்த்தகப் பரிமாற்றமாக மாற்றிவைத்திருக்கின்றன.

உலக நாடுகளுக்கு எப்படியோ, இந்தியச் சூழலுக்கு சிறு நகரங்களும் கிராமங்களும் வளர வேண்டியதே அவசியம். சமூக நோக்கோடுகூடிய பொருளாதாரத் தன்னிறைவுக்காகத் திட்டம் வகுத்த பலரும், கிராம வளர்ச்சியையே முன்னிலைப்படுத்தினார்கள்.

சமீபத்திய வருடங்களில் இந்தியாவில் நிலைகொண்டுவிட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரியவில்லை. ஆனால், இளைஞர்களுக்கு 'எவன் எக்கேடு கெட்டால் என்ன... நீ எப்படியாவது பிழைச்சுக்கோ' என்று ஆழமாகச் சொல்லிக்கொடுத்தது.

'வலியவன் வாழட்டும், எளியவன் ஏங்கட்டும்' என்ற பட்டவர்த்தனமான கொஞ்சமும் வாஞ்சைஅற்ற பொருளாதாரச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை. ஆனாலும், மரத்தின் மேல் கிளைக்குப் போனவன் கீழே இருப்பவனுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிடுகிற மரபு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகத்தான் கிராமங்களும், சிறு நகரங்களும் தொடர்ந்து பின்தங்கி இருக்கின்றன. தேசம் மட்டுமின்றி, தனி மனிதர்களும் பெருநகரங்களை மையப்படுத்தியே நமது பொருளாதாரப் பரிவர்த்தனைகளை நகர்த்துகிறோம். ஒரு கட்டத்தில் சொந்தக் கிராமத்துக்குப் போவதும், வருவதும் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடாக மட்டுமே மாறி வருகிறது.

வெளிநாடுகளில் சம்பாதித்து உள்நாட்டில் முதலீடு செய்தல் எப்படி தேசத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியுமோ, அதேபோல் பெருநகரங்களில் சம்பாதிப்பதை, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் முதலீடு செய்வது பலன் அளிக்கும் என்கிறது ஒரு பொருளாதாரக் கணக்கு.

நீயும்... நானும்! : கோபிநாத் - 18

இப்படி முதலீடு செய்வதன் மூலம், சம்பாதிப்பதற்காக நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் சூழலும் குறைக்கப்படும். ஆனால், சமீபத்திய மாற்றங்களைப் பார்க்கும்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது என்பதுதான் உண்மை. நகரத்தில் சம்பாதிப்பதைவைத்து, ஊரில் இருக்கிற விளைநிலங்களை மேம்படுத்துவது, விவசாய அபிவிருத்திக்காகச் செலவு செய்வது என்பது மாறிப்போய், கிராமத்து நிலத்தை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறோம்.

'வெறும் பொருளாதார யோசனை' என்ற அளவில் பார்க்கும்போது இது சரியாகக்கூட இருக்கலாம். ஆனால், சம்பாதிக்கிற இளைஞர்கள் தொடர்ந்து இந்த உத்தியைக் கையாளுகிறபோது சிறு நகரங்களும், கிராமங்களும் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறிவிடுகின்றன.

'இப்ப என்ன செய்யச் சொல்றீங்க?' என்று கேட்பது காதில் விழுகிறது. நீங்கள், நான், நாம் எல்லாருமே நம்முடைய பூர்வீகம் குறித்த காதலைக் கொஞ்சம் அசை போட்டுப் பார்க்க வேண்டி இருக்கிறது. நம் சக வயது உள்ள அல்லது நம்மோடு படித்த நம் நண்பர்களின் வாழ்க்கை நிலை குறித்தும் கொஞ்சம் அக்கறைப்பட வேண்டி இருக்கிறது... அவ்வளவுதான்.

எனக்குத் தெரிந்த நண்பர்கள் நான்கு பேர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பிறகு செய்த முதல் விஷயம் சொந்த ஊரில் தொழில் தொடங்கியதுதான். அங்கு தொடங்கிய அந்த சின்ன நிறுவனத்தை நிர்வாகம் செய்யவும், வளர்க்கவும் தங்கள் ஊர் தோழர்களை பொறுப்புகளில் நியமித்தார்கள்.

வார இறுதியில் முறைவைத்து ஒவ்வொரு நண்பரும் ஊருக்குப் போவார்கள். அதேபோல் கம்பெனியைப் பார்த்துக்கொள்கிற உள்ளூர் தோழர்களும் சென்னை வருவார்கள். இன்றைக்கு படித்த நான்கு இளைஞர்களால் படித்த மற்றும் படிக்காத 30 இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே நல்ல வேலை கிடைத்திருக்கிறது.

பூர்வீகத்தோடு தொடர்புடைய இதுபோன்ற முயற்சிகளால் பெரு நகரங்களில் இருக்கிற வாய்ப்பு வசதிகளால் கிடைக்கிற அறிவும் தொழில்நுட்பமும் சிறு நகரங்களுக்கும் சென்று சேருகின்றன. இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை என்று நாம் தொடர்ந்துசொல்லிக் கொண்டு இருப்பது இனியும் நியாயமாக இருக்காது.

சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களுக்குப் பிறகும், 'பட்டணத்துக்குப் போனா பிழைச்சுக்கலாம்' என்ற நிலை இன்னமும் நீடிக்கிறது. இந்தியத் தன்மையின் பொருளாதாரக் கோட்பாடுகள் உணர்வுபூர்வமானதாக இருப்பதே நல்லது.

இன்றைக்கு சென்னை உட்பட பல பெரிய நகரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கிற நம்மில் பலரும் ஏதோ ஒரு சிறு ஊரில் இருந்து வந்தவர்கள்தான். நாம் கிளம்பி வந்தபோது ஊர் எப்படி இருந்ததோ, கிட்டத்தட்ட இப்போதும் அப்படியே இருக்கிறது என்றால், நம் சம்பாத்தியத்தின் ஒரு பகுதி நம் ஊர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் பொருள்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 18

பால் ஒபட் ஒயர் (Paul obet oyer) என்ற கென்ய நாட்டுச் செய்தியாளர் ஒருவருடன் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் நிலை குறித்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது.

உலகின் பல நாடுகளில் வாழும், வெற்றி பெற்ற பணக்காரர்களாக உயர்ந்த பல கறுப்பினப் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டார்கள். 'அடிமைத்தளையில் இருந்து வெளியே வந்து, இவ்வளவு தூரம் உயர்ந்தும் ஏன் நமது ஆப்பிரிக்கா இந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறது' என்று அதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

பால் ஒபட் ஒயர் கோபமாக ஒரு பதில் சொன்னார், 'வளர்ந்துவிட்ட நீங்கள் எல்லாம் உங்கள் வேர்களை மறந்துவிட்டீர்கள்' என்று. வேர்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய அவசியம் நமக்கும் இருக்கிறது.

அந்த வேலையை நாம் வேகமாகத் தொடங்க வேண்டும்... அப்போது இந்த ரெசஷன் நம்மை ஒன்றுமே செய்யாது!

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 18
-ஒரு சிறிய இடைவேளை
நீயும்... நானும்! : கோபிநாத் - 18