மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 19

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 19

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 19
நீயும்... நானும்! : கோபிநாத் - 19
கோபிநாத், படம்: 'தேனி'ஈஸ்வர்
நீயும்... நானும்!
 
நீயும்... நானும்! : கோபிநாத் - 19
நீயும்... நானும்! : கோபிநாத் - 19

பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலகின் பல நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் வேலை இழப்பது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சில இடங்களில் அதிக அளவு சம்பளம் வாங்குகிறவர்கள், தங்கள் சம்பளத் தொகையைக் குறைத்துக்கொள்வதன் மூலம் சிலரின் வேலை காப்பாற்றப்படுகிறது.

இப்படி நிறுவன அளவிலேயே சக நண்பர்களுக்கு உதவும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் நிறைய இடங்களில் நடக்கின்றன. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலீஸ் அருகில் Flower Fields என்று ஓர் இடம் உண்டு. வண்ணமயமான பூக்கள் ஏக்கர் கணக்கில் பாய் விரித்ததுபோலப் பூத்திருக்கும். இதைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள்.

அந்த இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் ஜாஸ் இசைக் குழு ஆரவாரமாகப் பாடிக்கொண்டு இருந்தது. அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற இசைக் குழுக்கள் உண்டு. வெளியில் ஓர் உண்டியல் இருந்தது. அதில் பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி என்று எழுதப்பட்டு இருந்தது.

எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமாகவும் புதிதாகவும் இருந்தது. அந்த மாணவர்களிடம் பேசியபோது... 'எங்கள் பள்ளி நிர்வாகம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி சில ஆசிரியர்களை வேலையில் இருந்து அனுப்ப முயற்சிக்கிறது. நிர்வாகத்துக்கு அந்த ஆசிரியர்களை வேலைக்கு வைத்துக்கொள்வதால் ஏற்படும் நிதித் தேவையைப் பூர்த்திசெய்ய நாங்கள் வார இறுதி நாட்களில் இப்படி நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் சேர்க்கிறோம்' என்றார்கள்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 19

கடந்த ஆறு மாதங்களாக இந்த மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்வருகிறார்கள். நிறைய நிதியும் கிடைக்கிறது. 'We Love our Teachers' என்றார்கள் ஒரே வரியில்.

எவ்வளவு ஆத்மார்த்தம். ' கணக்கு வாத்தியாரைப் பிடிச்சா, கணக்கு தானா வரும்' என்று சொல்வார்கள். நேசியுங்கள், மனதார ஆசிரியரைப் பார்க்கிற உணர்வு அடர்த்தியான அன்புடன் கூடியது.

இந்த மாணவர்களிடம் பேசியபோது எனக்கு என் பள்ளி ஞாபகங்கள் வந்தன. யாராக இருந்தாலும் தோளில் கை போட்டுப் பேசிக்கொண்டே ஃபார்முலாக் கள் சொல்லித்தருகிற ஜேம்ஸ் சார்... எப்போது எது கேட்டாலும் அருகில் இருக்கிற மர நிழலில் நிறுத்தி விளக்கமாகச் சொல்லித் தருகிற அருள்ராஜ் சார்... காதைப் பிடித்துத் திருகியவாறே திருக்குறள் கேட்கும் முத்தியாலு ஐயா, பாட்டுப் பாடி பார்வையால் அபிநயம் காட்டிப் பாடம் நடத்தும் அரங்கசாமி ஐயா என்று எனக்கும் நிறைய நிறைய ஆசிரியர்களைப் பிடிக்கும்.

மாறி இருக்கிற கல்விச் சூழலில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நட்புறவு ஆத்மார்த்தமானதாக இருக்கிறதா?

கல்வி தொடர்பான தலைப்பில் நடந்த 'நீயா... நானா'வில் ஒரு மாணவர் யதார்த்தமாகச் சொன்னார் 'நாங்கள் பணம் கொடுக்கிறோம்... அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்' என்று. அப்படி வெறும் வர்த்தகத்தனத்தோடு பேசக் கூடாது என்று அங்கு கண்டிக்கப்பட்டாலும் அந்த மாணவரின் மனதில் இருந்த எண்ணம் அதுதான்.

ஒரு மளிகைக் கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்குமான உறவைப்போல வியாபாரரீதியான உறவாக ஆசிரியர்-மாணவர் நட்பு மாறிக்கொண்டு வருகிறதோ என்று ஒரு சில நேரங்களில் தோன்றுகிறது. வெறுமனே பாடம் சொல்லித்தருகிற இன்னொரு கம்ப்யூட்டராக நம்முடைய ஆசிரியர்களை இந்தக் கல்விச் சூழல்மாற்றி வைத்திருக்கிறதோ என்ற சந்தேகம்கூட எழுகிறது.

ஆசிரியர் மரியாதைக்கு உரியவர் என்பதைத்தாண்டி அன்புக்கு உரிய மனிதராகத் தெரியவும், உணரவும் தேவைப்படுகிற வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. பள்ளியின் மீதும், கல்லூரியின் மீதும், ஆசிரியர்கள் மீதும் ஓர் உணர்வுபூர்வமான இணைப்பு மிகவும் அவசியம். அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கை கொடுக்கவும் உதவும்.

'நீங்கள் வேலை செய்கிற நிறுவனத்தோடு உணர்வு பூர்வமாகத் தொடர்புகொண்டு இருக்காதீர்கள்' என்று கார்ப்பரேட் உலகில் அறிவுறுத்தப்படுவது உண்டு. அதே மனோநிலை கல்விக்கூடங்கள் மீதும் மாணவர்களுக்கு வருவது நல்லது அல்ல.

அடுத்தவனைப்பற்றி எல்லாம் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லப்படுகிற அமெரிக்காவின் மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களின் நலனுக்காக நிதி திரட்டுகிறார்கள். இப்படித் தங்கள் பள்ளி, பகுதி மேம்பாடு, பொதுப் பிரச்னைகள் போன்ற பலவற்றுக்கும் மாணவக் குழுக்கள் உதவ முன்வருகின்றன.

ஒரு காலத்தில் இருந்ததைப்போல் பள்ளியையும் கல்லூரியையும் காதலிக்கத் தேவைப்படும் காரணங்கள் குறைந்துகொண்டே போனாலும், அவற்றின் மீது ஆசையோடு இருங்கள். இந்த ஆசைதான் நாளை அந்தப் பள்ளிக்குத் தேவைப்படுகிற பல விஷயங்களை உங்கள் மூலம் செய்துகொள்ளவைக்கும்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 19

மதிப்பெண்களே முக்கியம் என்ற நிலை வந்த பிறகு நீதிபோதனை வகுப்புகள் நிறைய இடங்களில் நிறுத்தப்பட்டன. அறிவியல் ஆசிரியருக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம், உடற்கல்வி ஆசிரியருக்கு இல்லாமல் போனது. பொதுச் சேவைகள், பொது நலப் பணிகளில் பங்கு எடுத்தல் குறித்த உணர்வை ஏற்படுத் தாமல்,அவைஒருபாடம்போல பயிற்றுவிக்கப்படுகின்றன.
அங்கு படிக்கிற ஒரு மாணவன் ஆசிரியரை வெறும் வாத்தியாராகப் பார்க்கிறான். சமூகத்திடம் இருந்து என்ன பெற முடியும் என்றே யோசிக்கிறான்.

அந்த அட்டவணைத்தனமான போக்குகள் மாற்றப்பட்டு ஆசிரியர்களை, ஆசான்களாகப் பார்க்கிற மனப்போக்கு அவசியம். இன்றைக்கும் தமிழகத்தின் பல பள்ளிகள் அதன் பழைய மாணவர்களால் சீரமைக்கப்பட்டு இருக்கின்றன. 'தங்களை வளர்த்த பள்ளி' என்ற உணர்வை அந்த மாணவர்களிடம் ஏற்படுத்தியது... ஆசிரியர்கள் மீதும் அந்த கல்விக்கூடம் மீதும் இருந்த அன்புதான்.

சக மனிதரோடு அன்பாகப் பழக வேண்டும் என்று தொடர்ந்து நம் கல்விக்கூடங்கள் சொல்லித்தருகின்றன. இந்த சொல்லித்தருதல் - உணரவைத்தல் என்ற இடத்துக்கு நகராமல் அன்பையும் நேசிப்பையும் வளர்க்க முடியாது. அதற்கு ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே பாடத் திட்டத்தைத் தாண்டிய ஒரு பாசம் வேண்டும்.

சிக்னல்களில் நின்றுகொண்டு போக்குவரத்தைச் சரிசெய்கிற, கொடி நாளில் உண்டியல் குலுக்குகிற, பொதுத் தேவைக்காக வெயிலில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கிற பாசக்கார மாணவத்தனத்துக்கு முன்னால் மதிப்பெண்கள் சாதாரணமாகத்தான் தெரிகிறது.

அன்பையும் நேசிப்பையும் உணரவைப்பதற்கான உன்னதமான வாய்ப்பு ஆசிரியர் - மாணவர் உறவில் தொடங்குகிறது.

We Love our Teachers!

எவ்வளவு ஆத்மார்த்தமான வாசகம்!

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 19
-ஒரு சிறிய இடைவேளை
நீயும்... நானும்! : கோபிநாத் - 19