சமீபத்தில் ஒரு தகவல் படித்தேன் நூற்றில், தொண்ணூறு பேருக்கு மேடை ஏறிப் பேசுவதில் பயம் இருக்கிறதாம்.
இப்படி நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு விஷயம் குறித்துப் பயம் இருக்கும். சிலருக்கு, உயரம் பயம். சிலருக்கு, இருட்டு பயம். சிலருக்கு, தண்ணீர் பயம். சிலருக்கு, பேய், பூதம் பயம். சிலர் டூ விலரின் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு, 'பார்த்துப் போ... மெதுவாகப் போ' எனப் பயமுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
நாளை காலை உயிரோடு இருப்பேனா என்று பயந்தவாறே படுக்கைக்குச் செல்ப வர்கள் உண்டு. நிறையப் பணம் இருந் தும், தேவைகள் இருந்தும், விமானத்தில் பறக்கப் பயப்படுபவர்கள் உண்டு. பழைய கட்டடம், இருட்டு அறை, மலைப் பயணம் என எல்லோருக்கும் ஏதோ ஒரு பயம்!
வெளியில் இருந்து ஏதோ ஒன்று நம்மைப் பயமுறுத்துகிறது என்று நினைக் கிறோம். உண்மையில், பயம் நமக்குள்தான் இருக்கிறது. பாதுகாப்பின் பெயராலும், அச்சுறுத்தலின் பெயராலும், நாம் சிந்திக் கவும் எதிர்கொள்ளவும் மறுத்த, மறந்த காரணிகள் பயமாக மாறிப் பயமுறுத்து கின்றன.
ஒரு சின்ன விஷயமாக இருக்கும், அப்பாவிடம் பர்மிஷன் கேட்பது, கோபமாக இருக்கிற ஆசிரியரைச் சந்திப்பது, தன்னைப்பற்றி தவறாகப் பேசிய நண்பனை எதிர்கொள்வது என வாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயங்கள் அனைத்தையும் 'அப்புறம் பார்த்துக்கலாம்' என தள்ளிப்போடுவதுதான் மனதுக்குள் பயம் தங்க ஆரம் பிப்பதன் முதல் படி.
இந்த விஷயத்துக்கு 'அவர் என்ன சொல்வாரோ? அதனால், அப்புறம் பேசலாம்' எனத் தள்ளிப்போடுவது எளிதான உத்தி யாகத் தெரிந்தாலும், மனசுக்குள் ஆழமாக அந்த விஷயம் அரித்துக்கொண்டே போய் பயமாக மாறி நிற்கும்.
அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை மறந்து விட்டதுபோல உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டாலும் அந்த தள்ளிப்போடல் நடவடிக்கை மனசுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஆயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
|