நாம் எப்போதும் ஒரு பரிசினைப் பெறும்போது வயதை மறந்து குழந்தையாகிவிடுகிறோம். அதிலும் வயது அதிகமாக அதிகமாக பரிசை எதிர்பார்ப்பதும் அதிகமாகிறது. ஆனால், அதைக் காட்டிக்கொள்வது இல்லை. பிரிக்கப்படாமலேயே பரிசை தன் முன் வைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கும் முதிய வர்களைக் கண்டிருக்கிறேன். அது ஒரு நம்பிக்கை. நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பின் வெளிப் படையான வடிவம். 'பரிசு கொடுங்கள். உங்களுக்குப் பரிசு கிடைக்கும்' என்றேன்.
தமிழின் மிக முக்கியச் சிறுகதை ஆசிரியரான கு.அழகிரிசாமி 'அன்பளிப்பு' என்றொரு கதைஎழுதி இருக்கிறார். மனச்சாட்சியை உலுக்கும் கதை அது. பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்யும் ஓர் எழுத்தாளர், தன் தாயுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டுக்கு அருகில்நாலைந்து சிறுவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எந்த நேரமும் எழுத்தாளர் வீட்டில் விளையாடுவது, கதை பேசுவது, சதுரங்கம் ஆடுவது வழக்கம். அவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். அதில் 13 வயது சுந்தரராஜனும், ஒன்பது வயது சித்ராவும் அவருக்குப் பிடித்தமான குழந்தைகள். இருவரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்பதால் அதிகம் செல்லமாக வளர்க்கப்பட்டவர்கள். இந்தக் குழந்தைகளுக்கு மாறாக, சாரங்கன் என்ற சிறுவனும் பிருந்தா என்ற சிறுமியும் ஏழை வீட்டுப் பிள்ளைகள். அவர்களும் தினமும் விளையாட வருகிறார்கள்.
இதில், சாரங்கன் மிக கவனமாக நடந்துகொள்ளும் சிறுவன். எதையும் வாய்விட்டுக் கேட்க மாட் டான். ஒருநாள் அவர்கள் விளையாடும்போது, அலமாரியில் இருந்த புத்தகங்களைத் தள்ளி விடுகிறார்கள். எங்கே எழுத்தாளர் கோபித்துக் கொள்வாரோ என்று பயந்து நிற்கையில், அவர் அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்றதோடு, தான் படித்து முடித்துவைத்திருந்த புத்தகத்தில் சிலவற்றை எடுத்து 'சித்ராவுக்கும் சுந்தரராஜனுக்கும் தனது அன்பளிப்பு' என்று கையெழுத்துப் போட்டுப் பரிசாகத் தருகிறார்.
அதை கண்ட பிருந்தா, 'மாமா! எனக்கும் ஒரு பரிசு வேண்டும்!' என்று வாய்விட்டுக் கேட்கிறாள். அவரோ, 'சித்ரா படித்த பிறகு அதை வாங்கிக் கொள்' என்கிறார். பிருந்தாவுக்கு மிக ஏமாற்றமாகி விடுகிறது. அந்த ஏக்கத்திலேயே மறுநாள் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது. அப்போதும் அவர் குழந் தைகளிடம் பேதம் காட்டுவதைப்பற்றி யோசிக்கவே இல்லை. சில நாட்களில் புது வருடம் துவங்குகிறது. அழகான சிவப்பு நிற டைரிகள் இரண்டு வாங்கி வந்து சித்ராவுக்கும்சுந்தரராஜனுக்கும் பரிசாகத் தருகிறார். சாரங்கனுக்குப் பரிசு தரவில்லை. அவன் ஆதங்கத்துடன் எழுத்தாளரைப் பார்த்தபடியே இருக்கிறான். வாய்விட்டுக் கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அங்கிருந்து வெளியேறிவிடுகிறான்.
மறுநாள், யாரும் இல்லாத நேரம் பார்த்து வரும் சாரங்கன், தன் பாக்கெட்டில் இருந்து ஒரு டைரியை எடுத்து அவர் முன் நீட்டுகிறான். அது அவர் சித்ராவுக்கு தந்தது போன்ற அதே டைரி. சாரங்கன் தான் விலைக்கு வாங்கியதாகச் சொல்கிறான். பிறகு தலைகவிழ்ந்தபடியே 'சாரங்கனுக்கு அன்புப் பரிசு' என்று கையெழுத்துப் போட்டாவது கொடுங்கள் என்று கேட்கிறான். அது எழுத்தாளரது முகத்தில் அறைவதுபோல் இருக்கிறது என்று கதை முடிகிறது.
வருடத்துக்கு ஒரே ஒரு முறை ஏன் பிறந்த நாள் வரு கிறது, பல முறை வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கக்கூடியவர்கள் சிறுவர்கள். அதற்கு முக்கியக் காரணம், பரிசுகள். அந்த எதிர்பாராமை தரும் சந்தோ ஷம் அவர்களை உற்சாகமூட்டுகிறது. ஆனால், ஒரு குழந்தைக்குப் பரிசு கிடைத்து மற்றொரு குழந்தைக்குப் பரிசு கிடைக்காமல் போய்விட்டால், அவமானம் தாங்க முடியாமல் தேம்பி அழுகிறது. அதைச் சமாதானம் செய் வதுஎளிதானது இல்லை. இந்த மனப்பாங்கு பெரியவர் கள் ஆனாலும் மறைந்துவிடுவது இல்லை. மறைத்துக் கொள்ளப்படுகிறது; ஏளனம் செய்வார்களே என்று ஒளித்துக்கொள்ளப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் லண்டனில் உள்ள வணிக நிறுவனம் தனது புதிய கிளை ஒன்றினைத் துவங்கும்போது நகரில் உள்ள ஜேப்படித் திருடர்களைப் பயன்படுத்தி, |