மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 06

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 06

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 06
நீயும்... நானும்! : கோபிநாத் - 06
திறமையின் திசை இளமையின் விசை
கோபிநாத், படம்: 'தேனி' ஈஸ்வர்
நீயும்... நானும்!
நீயும்... நானும்! : கோபிநாத் - 06
நீயும்... நானும்! : கோபிநாத் - 06

பிரான்ஸ் நாட்டுத் தத்துவஞானி பாஸ்கலி டம் அவர் நண்பர் ஒரு முறை சொன்னாராம், ''உனக்கு இருக்கிற மூளை மட்டும் எனக்கு இருந் திருந்தால், நான் உன்னைவிடப் பெரிய ஆளாகி இருப்பேன்.''

பாஸ்கல் சிரித்துக்கொண்டே சொன்னார், ''நீ பெரிய ஆளானால், என் மூளை தானாகவே உனக்கு வந்து சேரும்!'' பாஸ்கலின் நண்பராவது தன் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட் டார். நம்மில் பலரோ, 'நமக்கு வாய்ச்சது அவ் வளவுதான்' என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

பாஸ்கலின் மூளை தனக்கு இல் லையே என்று நினைத்த நண்பர், தனக்கு இருக்கிற மூளை என்னசெய்து கொண்டு இருக்கிறது என்று யோசிக் கவே இல்லை. 'பாஸ்கலின் மூளைக்குத் தத்துவார்த்த சிந்தனைகளை யோசிக்கத் தெரியும். என் மூளைக்கு? என் மூளைதான் பாஸ்கலின் மூளையைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருக் கிறதே?'

நமக்குத் தேவைப்படுவது வெளிச்சம். ஆனால், எப்போதும் இருட்டைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். வெளிச்சத்தைப் பெறுவதற்காகச் செயல்படுத்தப்பட வேண்டிய ஆற்றல், இருட்டைப்பற்றிய எண்ணத்திலேயே விரயமாகிறது. இந்த விரயத்தால் ஏற்பட்டவெற்றி டம்தான் அடுத்தவன் வெற்றி குறித்துப் பொறாமை கொள்ளவைக்கிறது.

'அவனுக்கு என்னப்பா... அவங்க அப்பா எல்லா வசதியும் பண்ணிக் குடுத்து இருக் காரு. சின்ன வயசுல இருந்தே அவன் இங் கிலீஷ் மீடியம். ஏழு தலைமுறைக்குச் சொத்து இருக்கு. அவன் ஆயிரம் பிசினஸ் பண்ணு வான். அவர் மாமா செக்ரட்டேரியட்ல வேலை பார்க்கறாரு. மினிஸ்டர்கிட்ட பேசி வேலையை முடிச்சுக் கொடுத்துருவாரு. நாம அப்படியா?' - இப்படி எண்ணற்ற சமாதா னங்கள் சொல்லி, ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். இந்த அத்தனை சமாதானப் புலம்பல்களுக்குப் பின்னாலும் ஒளிந்திருப்பது நம்மிடம் எதுவெல்லாம் இல்லை என்கிற பட்டியல்தான்.

இந்தப் பட்டியலில் இருக்கிற விஷயங்கள் எல்லாம் இருந்தால் ஜெயித்துவிடலாம் என்றால், அதை வைத்திருக்கிற எல்லோரும் ஜெயித்திருக்க வேண்டுமே? இந்த உலகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றவர்கள் எல்லோரும் தங்களிடம் என்ன இருக்கிறது என்று பார்த்தவர்கள்தான்.

இன்றைக்கும் அமெரிக்க மக்களிடையே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிற ஓப்ரா வின்ஃப்ரேயிடம் என்ன இருந்தது? ஏழ்மை, 14 வயதில் உறவினரின் பாலியல் வன்மத் துக்கு ஆளான துயரம். இதையெல்லாம் தாண்டி ஒரு செய்திவாசிப்பின் அந்தஸ்துக்கு வந்தும் அவரால் பெரிய அளவுக்கு வெற்றி பெறமுடிய வில்லை.

'நமக்கெல்லாம் இது முடியாதுப்பா! அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்; வெள்ளைத்தோல் வேணும்; டி.வி-ல நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது பெரிய பதவியில இருக்கணும். நம்மை நம்பி யாராவது ஒரு பெரிய ஷோ தயாரிக்கணும். அப்பதான் எல் லாம் நடக்கும்' என்று அவர் தயங்கி நிற்கவில்லையே!

சிந்திப்பதற்கு மூளை இருக்கிறது, செயல்படுத்த ஆற்றல் இருக்கிறது, போராடத் தைரியம் இருக்கிறது, அப்புறம் என்ன என்று வேகத்தோடு மோதினார். அதனால்தான் இன்றைக்கு ஓப்ராவை உலகமே கொண்டாடுகிறது.

மதுரையில் ஒரு கல்லூரி விழாவுக்குப் பேசச் சென்றிருந்தேன். வட இந்தியாவில் இருந்து ஓர் எழுத்தாளரும் வந்திருந்தார். அவரிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதில் ஒரு மாணவரின் கேள்வி, 'என் தந்தை ரொம்ப ஏழ்மையானவர், கடன் வாங்கி, சேமிப்பு செய்து, நகைகளை விற்று என்னைப் படிக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கிக்கொடுக்க ஆள் இல்லை. பணக்கார மாணவர்களைப்போல் பணம் செலவு செய்ய முடியாது. நான் எப்படிப் பெரிய வேலையில் சேர்ந்து நிறையச் சம்பாதிப்பது?'

அந்த எழுத்தாளர் சொன்னார்... 'உன் அப்பாதான் உனக்குப் பதில். உன் தந்தை தன்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று யோசித்தார். அதனால், நீ இன்ஜினீ யர் ஆகியிருக்கிறாய். நீ உன்னிடம்என்ன வெல்லாம் இல்லை என்று கணக்குப்போடு கிறாய். போய் உன் அப்பாவிடம் பேசு!' என்றார்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 06

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். இரவு கையேந்திபவனில் சாப்பிடுகிறபோது, 'இது அருமையான பிசினஸ்பா. ஒரு நாளைக்கு 500 இட்லி வித்தாக்கூட, இட்லிக்கு 50 காசு கிடைச்சாலும், ஒரு நாளைக்கு 250 ரூபாய் கிடைக்கும். மாசத்துக்கு 7,500 ஈஸியாக் கிடைக்கும். பிரச்னை இல்லாத வேலை!' என்பார். ஏதாவது வாடகை காரில் செல்லும்போது, 'கடனை உடனை வாங்கி ரெண்டு கார் வாங்கிட்டாப்போதும், காலை ஆட்டிக் கிட்டே சம்பாதிக்கலாம்' என்று கருத்து சொல்வார். ஃபேன்ஸி ஸ்டோர், இரும்புக் கடை, பழைய பேப்பர் வியாபாரம் - இப்படி எல்லாவற்றிலும் என்னவெல்லாம் லாபம் கிடைக்கும் என்று கணக் குப் போடுவார்.

நமக்கு இட்லிக் கடை நடத்த முடியுமா, அந்தத் தொழில் தெரியுமா, மாவு புளிச்சுப் போனா என்ன செய்யுறது, கடன்காரர்கள் தொல்லை, மாமூல், ரவுடித் தகராறு - இப்படி அதில் துயரம் இருக்குமே என்றெல்லாம் யோசிக்கத் தோன்றாது. இட்லிக் கடை நடத்துபவருக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும்.

நமது பலம் என்ன என்று அறிய முற்படுகிறபோதுதான், நமது எல்லைகள் நமக்குத் தெரிய வரும். அதற்குள் சிறப்பாக வாள் சுழற்றுவது எப்படி என்ற வித்தை விளங்கும்.

ஐரோப்பாவில் ஒரு தாத்தா. தலைமுறை தலைமுறையாக தேவாலயத்தில் மணியடிப்பதுதான் அவர்கள் தொழில். பாட்டனார், அப்பாவுக்குப் பிறகு இப்போது 60 வயதில் இவர் மணியடித்துக்கொண்டு இருந்தார். அப்போது புதிதாகப் பதவி ஏற்ற இளம் அரசர் ஒரு சட்டம் கொண்டுவருகி றார். அதன்படி இந்தந்த வேலை பார்ப்பவர்கள், குறிப்பிட்ட படிப்பைப் படித்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. அதன்படி, கோயிலில் மணி அடிக்கக் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்து இருக்க வேண்டும் என்று ஆணை வருகிறது. பள்ளிக்கூடம் பக்கமே எட்டிப்பார்க்காத மணி அடிக்கிற தாத்தாவின் வேலை பறிபோகிறது.

60 வயது. படிப்பு வாசனை இல்லை. கோயி லில் மணியடிப்பது தவிர, வேறெந்தவேலை யும் தெரியாது. தாத்தா நிலைகுலைந்துபோனார். சரி, அடுத்து என்ன செய்வது? யோசித்தவாறே ஒரு தெருவில் நடக்கிறபோது ஒரு சிகரெட்குடித் தால் தேவலை என்று தோன்ற, சிகரெட்கடை யைத் தேட ஆரம்பிக்கிறார்.

நான்கு திசைகளிலும் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு சிகரெட் கடைகூட இல்லை. என்னை மாதிரி எத்தனை பேர் இப்படி சிகரெட்டுக்கு அலைவார்கள் என்ற

நீயும்... நானும்! : கோபிநாத் - 06

யோசனையில் வீடு போகிறார். சேர்த்துவைத்திருந்த கொஞ்சம் பணத்தில் சின்னதாகஒரு சிகரெட் கடை போடுகிறார். வியாபாரம்சக்கைப் போடு போடுகிறது.
அதற்குப் பிறகு தாத்தாவுக்கு ஒரே வேலை தான். ஒவ்வொரு ஏரியாவாகப் போவது, எங் கெல்லாம் சிகரெட் கடை இல்லையோ, அங்கே ஒரு கடை திறப்பது... சில வருடங்களில் சொந் தமாக சிகரெட் கம்பெனி திறக்கும் அளவுக்கு வளர்ந்தார். பணம் குவிந்தது. நாடெங்கும் அறி யப்பட்டார்.

ஒருநாள் அவருடைய நண்பர், 'இவ்வளவு பணத்தைக் கையில வெச்சுக்கக்கூடாது. பேங்க்னு ஒண்ணு இருக்கு. அங்க பத்திரமா வைக்கலாம்!' என ஐடியா சொல்ல, தாத்தா பேங்க்கில் அக் கவுன்ட் திறக்கப்போனார்.

பேங்க் மேனேஜருக்குத் தலைகால் புரியவில்லை. இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் நம்ம பேங்க்கில் கணக்குத் துவக்க வந்திருக்கிறார் என்று தாத்தாவுக்குப் பெரிய வரவேற்பு. 'சார்... நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் சார், இதுல ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க.. மீதியெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்' என்றார் மேனேஜர். தாத்தா சிரித்துக்கொண்டே, 'எனக்குக் கையெழுத்தெல்லாம் போடத் தெரியாது... வேணா கைநாட்டு வைக்கிறேன்' என்றார்.

பேங்க் மேனேஜருக்கு ஆச்சர்யம் தாளவில்லை 'என்ன சார், நீங்க பள்ளிக்கூடமே போனது இல்லையா? ஸ்கூலுக்குப் போகா மலேயே இவ்வளவு சம்பாதிச்சிருக்கீங்களே, படிச்சிருந்தா நீங்க என்ன ஆகியிருப்பீங்க?'

தாத்தா பொறுமையாகச் சொன்னார், 'கோயில்ல மணியடிச்சுக்கிட்டு இருந்திருப்பேன்!'

ஆம்,

பாஸ்கலின் மூளையைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள்; நம் மூளை அதை விடப் பலமானது!

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 06
- ஒரு சிறிய இடைவேளை
நீயும்... நானும்! : கோபிநாத் - 06